என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » girl murdered case
நீங்கள் தேடியது "girl murdered case"
கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டை சேர்ந்த 4 பேர், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம்:
கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 60 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயகுமார், கவுதமன், சந்தோஷ்குமார், துரைசாமி ஆகிய 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். முதலில், சமபவத்தன்று நாங்கள் ஊரிலேயே இல்லை என்றனர். பின்னர் மாயமான சிறுமியை நாங்களும் சேர்ந்து தான் தேடினோம் என மாற்றி கூறினர். இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதலே அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் 4 பேரும், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை கண்டித்தும், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை கண்டித்தும் துடியலூர் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்று மாலை கணுவாய் பஸ் நிறுத்தம் அருகே திரண்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பினர், சிறுமியை கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த தேவராஜ், சரவணன் மற்றும் சிலர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை அருகே சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 60 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜயகுமார், கவுதமன், சந்தோஷ்குமார், துரைசாமி ஆகிய 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். முதலில், சமபவத்தன்று நாங்கள் ஊரிலேயே இல்லை என்றனர். பின்னர் மாயமான சிறுமியை நாங்களும் சேர்ந்து தான் தேடினோம் என மாற்றி கூறினர். இதனால் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் துருவி, துருவி விசாரித்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதலே அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் 4 பேரும், ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளிடமும் ஒவ்வொரு பதில் கூறுவதால் விசாரணையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கை கண்டித்தும், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை கண்டித்தும் துடியலூர் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பு சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
நேற்று மாலை கணுவாய் பஸ் நிறுத்தம் அருகே திரண்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பினர், சிறுமியை கொன்றவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுதொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த தேவராஜ், சரவணன் மற்றும் சிலர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை கொன்ற கொடூரனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #Ramadoss #PMK
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டுக்காரன் கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. குழந்தையாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய சிறுமியை சிதைக்க முயன்றதுடன், படுகொலையும் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு மணமாகி விட்ட நிலையில் மகனும், இளைய மகளும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அவர்களில் மகள் ராஜலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்த வீட்டில் தினேஷ்குமார் என்ற 27 வயது இளைஞன் அவரது மனைவி சாரதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு இயக்கும் தினேஷ்குமாருக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இரு குடும்பத்தினரும் நட்புடன் பழகிவந்துள்ளனர்.
குழந்தையுடன் விளையாடவும், பூப்பறிக்கவும் தினேஷ்குமார் வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அப்போதெல்லாம் சிறுமியிடம் தினேஷ்குமார் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிறுமிக்கு தெரியாது என்பதால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 19-ந்தேதி ஆயுதபூஜையன்று தமது வீட்டுக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய தினேஷ்குமார் முயன்றுள்ளான். ஆனால், அவனிடமிருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தாயின் அறிவுரைப்படி தினேஷ்குமார் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்துள்ளார். ஆனால், 22.10.2018 தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மனைவி இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டுக்குத் தப்பிச் சென்று தாயிடம் புகார் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நடந்தவை அனைத்தும் தினேஷ் குமாரின் மனைவி சாரதாவுக்கு தெரிய வந்ததாகவும், அவர் கணவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரைத் தாக்கி மயக்கமடையச் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தலையை சாலையில் வீசி விட்டு, வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும், அவரது தம்பியும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மனிதக் கொடூரன் தினேஷ்குமாரின் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தினேஷ் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது தவறு; கண்டிக்கத்தக்கது ஆகும்.
ஒன்றும் அறியாத சிறுமிகளிடம் தங்கள் பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ள துடிப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ள மனிதர்களாக இருக்க முடியாது. அதனால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து, தினேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #PMK
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் அத்துமீறலுக்கு பணிய மறுத்த 13 வயது சிறுமியை அவரது அண்டை வீட்டுக்காரன் கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. குழந்தையாகவும், சகோதரியாகவும் பார்க்க வேண்டிய சிறுமியை சிதைக்க முயன்றதுடன், படுகொலையும் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு. அவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு மணமாகி விட்ட நிலையில் மகனும், இளைய மகளும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். அவர்களில் மகள் ராஜலட்சுமி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இவர்களுக்கு அடுத்த வீட்டில் தினேஷ்குமார் என்ற 27 வயது இளைஞன் அவரது மனைவி சாரதாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். கதிர் அறுக்கும் இயந்திரத்தை வாடகைக்கு இயக்கும் தினேஷ்குமாருக்கு 4 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இரு குடும்பத்தினரும் நட்புடன் பழகிவந்துள்ளனர்.
குழந்தையுடன் விளையாடவும், பூப்பறிக்கவும் தினேஷ்குமார் வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
அப்போதெல்லாம் சிறுமியிடம் தினேஷ்குமார் பாலியல் சீண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிறுமிக்கு தெரியாது என்பதால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.
கடந்த 19-ந்தேதி ஆயுதபூஜையன்று தமது வீட்டுக்கு வந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய தினேஷ்குமார் முயன்றுள்ளான். ஆனால், அவனிடமிருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவங்களை தாயிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தாயின் அறிவுரைப்படி தினேஷ்குமார் வீட்டுக்கு செல்வதை சிறுமி தவிர்த்துள்ளார். ஆனால், 22.10.2018 தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மனைவி இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதனால் அச்சமடைந்த சிறுமி வீட்டுக்குத் தப்பிச் சென்று தாயிடம் புகார் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் நடந்தவை அனைத்தும் தினேஷ் குமாரின் மனைவி சாரதாவுக்கு தெரிய வந்ததாகவும், அவர் கணவனை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளுடன் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரைத் தாக்கி மயக்கமடையச் செய்திருக்கிறார். பின்னர் சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கியுள்ளார். தொடர்ந்து சிறுமியின் தலையை சாலையில் வீசி விட்டு, வீட்டுக்குச் சென்ற தினேஷ்குமாரை அவரது மனைவி சாரதாவும், அவரது தம்பியும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மனிதக் கொடூரன் தினேஷ்குமாரின் செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தினேஷ் குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது தவறு; கண்டிக்கத்தக்கது ஆகும்.
ஒன்றும் அறியாத சிறுமிகளிடம் தங்கள் பாலியல் வெறியைத் தீர்த்துக் கொள்ள துடிப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ள மனிதர்களாக இருக்க முடியாது. அதனால், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடித்து, தினேஷ் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து அவருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #PMK
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X