என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stepmother"

    • சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது.
    • சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த். இவரது மகள் ஜானவி (வயது 7). இந்த சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது. அதாவது மாடியில் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில், சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை சித்தாந்தின் 2-வது மனைவி ராதா கீழே தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.

    சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. இந்த சிறுமியின் தாய் கடந்த 2023-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தாந்த் ராதாவை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் ஜானவி 3-வது மாடியில் இருந்து விழுந்தபோது ராதா அருகில் நிற்பது தெளிவாக பதிவாகி இருந்தது. அதாவது 3-வது மாடியில் இருக்கையை மாற்றி போட்டு, அதன்மீது ஜானவியை ராதா ஏற வைத்ததால் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சியை பக்கத்து வீட்டுக்காரர் சித்தாந்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த காட்சிகள் மூலமாக காந்திகஞ்ச் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தாய் ராதாவை கைது செய்தனர்.

    • போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    • போலீசார் அவரை கைது செய்தனர்

    பீகாரில் பக்சர் மாவட்டத்தில் தனது எட்டு வயது வளர்ப்பு மகளை சித்தி கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்குப்பையில் மறைத்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் தும்ரான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயா போஜ்பூர் பகுதியில் உள்ள வீட்டில் மரப்பெட்டிக்குள் இருந்த கோணி சாக்கில் சிறுமியின் எரிந்த உடல் எச்சங்களை நேற்று [சனிக்கிழமை] இரவு போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

    நேற்று காலை முதலே சிறுமியை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீஸ் நடத்திய தேடுதலில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதுதொடர்பாக பேட்டியளித்த பக்சார் காவல் கண்காணிப்பாளர் சுபம் ஆர்யா, முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் சித்தி குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டார். தனது வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை தீ வைத்து கொளுத்தியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், உடலை கோணி பையில் அடைத்து, மரப்பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

    அவரின் வாக்குமூலம் மற்றும் சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தை செய்ததற்கான காரணத்தை அவர் போலீசாரிடம் கூறவில்லை. சிறுமியின் தந்தை டெல்லியில் வேலை செய்து வருகிறார். சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே கணவரின் 2வது மனைவியின் மகளை கொடூரமாக கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் ஏற்கனவே உள்ளூரை சேர்ந்த பக்மீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முஸ்தாக் அகமது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர் மூலம் 9 வயது பெண் குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் இருந்தன.

    முஸ்தாக் அகமது 2-வது மனைவி வீட்டிலேயே அதிகமாக தங்குவது வழக்கம். மேலும் 2-வது மனைவியின் மகள் மீது தான் அதிக பாசம் காட்டி வந்தார்.

    இது முதல் மனைவி பக்மீதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த சிறுமியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். கடந்த மாதம் 23-ந்தேதி சிறுமியை நைசாக பேசி பக்மீதா அங்குள்ள காட்டுக்கு அழைத்து சென்றார்.

    தனது மகன் ‌ஷகீல் மற்றும் அவரது நண்பர்கள் கெய்சர் அகமது (வயது 19), நசீர் அகமது கான், ஆசிக் அகமது ஆகியோரை காட்டு பகுதியில் பதுங்கி இருக்க சொல்லி இருந்தார். சிறுமியை அங்கு அழைத்து சென்றதும் அவளை 4 பேரும் கற்பழிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

    சகோதரி என்றும் பாராமல் ‌ஷகீல் முதலில் கற்பழித்தார். பின்னர் மற்ற 3 பேரும் கற்பழித்தனர். இதைத்தொடர்ந்து பக்மீதா அந்த சிறுமியின் கழுத்தை நெரித்தார். அப்போது ‌ஷகீல் கோடாரியை எடுத்து சிறுமி தலையில் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவள் இறந்துவிட்டாள். அவளது இரு கண்களையும் ‌ஷகீல் தோண்டி எடுத்தான்.

    பின்னர் 5 பேரும் சேர்ந்து சிறுமி மீது பேட்டரியின் ஆசிட்டை ஊற்றி தீவைத்தனர். உடல் அரைகுறையாக எரிந்த நிலையில் அங்குள்ள புதருக்குள் வீசினார்கள். பின்னர் மர தழைகளை போட்டு மூடிவிட்டு சென்று விட்டனர்.

    மகளை காணாமல் முஸ்தாக் அகமது போலீசில் புகார் கொடுத்தார். 10 நாட்களாக தேடிவந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவரது உடல் அழுகிய நிலையில் காட்டு பகுதியில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் கற்ழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    முதல் மனைவி பக்மீதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் நடந்த முழு கதையையும் போலீசாரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரையும் மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×