search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்"

    • கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.
    • கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு என்பது கவர்னரையே குறிக்கும்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சரவை கவர்னருக்கு ஆலோசனை கூறும் அவையாகத்தான் கருதப்படுகிறது.

    இதனால் எந்த புதிய திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் அதிகாரிகள் வழியாக கவர்னர் ஒப்புதல் பெற்றால்தான் நிறைவேற்ற முடியும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், கவர்னர் ஆகியோர் இடையே இணக்கமான சூழல் இருந்தது.

    திட்டங்களில் சில சந்தேகங்களை கேட்டாலும், அதற்கு விளக்கம் அளிக்கும் பட்சத்தில் கவர்னர் ஒப்புதல் அளிப்பார்.

    2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு ஆட்சியாளர்கள், கவர்னர் இடையே பெரும் மோதல் உருவெடுத்தது.

    ஆட்சியாளர்கள் ஒரு தரப்பாகவும், கவர்னர் தலைமையில் அதிகாரிகள் ஒரு தரப்பாகவும் இரண்டாக பிரிந்தனர். இதனால் கடந்த 5 ஆண்டில் பெரும்பாலும் மோதலில்தான் காலம் கடந்தது.

    இதன்பிறகு மத்திய அரசின் கூட்டணி அரசே புதுச்சேரியில் அமைந்தது. இதனால் இந்த மோதல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுடனான மோதல் நீடித்தது.

    தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது சட்டசபையிலும் எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலருக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கினர்.

    எந்த திட்டத்துக்கான கோப்பை அனுப்பினாலும், அத்திட்டத்துக்கு பல்வேறு கேள்விகளை கேட்டு கோப்பை திருப்பி அனுப்பு வதாக ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே அதிகாரிகள் மாற்றத்தில் முதல்-அமைச்சரோடு கலந்து பேசாமல் தன்னிச்சையாக தலைமை செயலாளர் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து தலைமை செயலர் முதல்-அமைச்சரிடம் நேரில் விளக்கமளித்தார். இதனால் தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை செயலாளரை மாற்றித்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படு கிறது. இந்த நிலையில் புதுச்சேரி தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா சண்டிகர் மாநில அரசுக்கு ஆலோசகராக மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேசத்தில் பணியில் உள்ள சரத் சவுகான் புதுவை தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல புதுச்சேரி ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுத்ரிஅபிஜித் விஜய் சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அந்தமான் தீவில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அருணாச்சல பிரதேச அதிகாரி தால்வ்டே புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை யாரை கலெக்டராக நியமிப்பது என்பது அரசின் முடிவாகும். எனவே புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால்வ்டே கலெக்டராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்த அதிகாரிகள் மாற்றம் புதுச்சேரியில் ஆட்சியாளர்கள்-அதிகாரிகளிடையே நிலவிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.


    செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
    • பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    திருத்தணி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள் (வயது 75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    நாங்கள் எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எனது இறந்த மகனின் மனைவி அதாவது எனது மருமகள் விளைநிலத்தில் எனக்கும் பங்கு உண்டு எனக்கூறி 30 பேருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார்.

    மேலும் நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.

    இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். நாங்கள் உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குமரி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அவர்களிடம் கலெக்டர் ஸ்ரீதர் மனுக்களை பெற்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடுக்க ப்பட்ட மனுவில், மர்மமாக இறந்த குலசேகரம் கோட்டூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுந்தர்ராஜ் மரணம் குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

    செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் மக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மரப்பாலம் மலைப்பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
    • இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

    மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.

    • 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது.
    • குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை திருவள்ளுர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருவள்ளுர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக இந்த கூட்டாய்வில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 32 கடைகளில் சுமார் 273 கிலோ தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    மேலும் ஏற்கனவே விற்பனை செய்து அபராதம் விதித்த போதும் 2-வது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18 கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்கப்படுவதை கண்டறிந்தால் உடனடியாக நுகர்வோர் குறைதீர்ப்பு செயலியான Tnfood safety consumer app மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல், https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்கள் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்

    மாவட்டம் முழுவதும் அதிலும் முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகளிலும் குட்கா, புகையிலையால் ஏற்படும் தீங்குகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த பள்ளிகளில் தொடர்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து மாணவர்களின் பயன்பாட்டை கண்டறிந்து பள்ளிக்கு அருகில் புகையிலை விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், மற்றும் பயணவழி உணவகங்களில் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமாக உணவு வழங்குதலை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்

    • பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.15 கோடிசெலவில் நடைபெற்று வரும் புரனமைப்பு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் மாமல்லபுரம் பஸ் நிலையம், கடற்கரை சாலை மற்றும் கடலோர பகுதிகளை பார்வையிட்டு தொடங்க இருக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உணவுத்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பல இடங்களில் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி வசூலிப்பதாக புகார் எழுந்து உள்ளது. நுழைவு கட்டணம் வசூலிப்பதில் அடாவடி நடந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடர்ந்து தவறுகள் நடந்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.

    • பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
    • ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     அவிநாசி:

    ]அவினாசி துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தீர்வு காண தனிக்கவனம் செலுத்த வேண்டும். கடைக்கோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்றுசேர அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இணையவழி இ-பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தாட்கோ சார்பில் கடனுதவி, விலையில்லா சலவைப்பெட்டிகள், தையல் எந்திரங்கள் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

    முகாமில் திருப்பூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ராம்குமார், வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் வரலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித்குமார், சமூக நல அதிகாரி ரஞ்சிதாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமாரராஜா, அவினாசி தாசில்தார் ராம்மோகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    நாகர்கோவில், நவ.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024- ம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8-ல் உலக முத லீட்டாளர் கள் மாநாட்டை நடத்த திட்ட மிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உலக முத லீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட் டத்திற்கு முதலீடு களை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து நடை முறைப்படுத்த அனைத்து குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இதன்படி ரூ.99 லட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப் புள்ள தொழிற் சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப் பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள் வணிக செயல் பாட்டாளர்கள் www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்ட தொழில் மையத் தில் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 குறித்த அைனத்து விபரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம் தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில் 4 அலுவலகத்தை நேரிேலா அல்லது தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×