search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தினவிழா"

    • மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.


    செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்தி ஊர்வலம்.
    • உத்தரபிரதேச மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராமர் சிலை இடம் பிடித்திருந்தது.

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குறிக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் குடவோலை முறையை விளக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெற்றது.

    பழங்காலத்தில் குடவோலை முறையில் யாருக்கு வாக்கு செலுத்துவது என்பதை ஓலையில் குறித்து பானையில் சேகரிக்கப்பட்டு பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டது. பின்னர் நவீன காலத்திற்கு ஏற்ப வாக்குச்சீட்டு, வாக்கு எந்திரம் என மாறுதல் பெற்றது. தொன்மைக்கால வாக்குமுறையை நினைவும் கூறும் வகையில் இது இடம் பெற்றுள்ளது.

    தமிழக அலங்கார ஊர்தி

    அரியானா மாநில அலங்கார ஊர்தி

    அருணாசல பிரதேச மாநில அலங்கார ஊர்தி

    மத்திய பிரதேச மாநில அலங்கார ஊர்தி

    மணிப்பூர் மாநில அலங்கார ஊர்தி

    ஒடிசா மாநில அலங்கார ஊர்தி

    சத்தீஸ்கர் மாநில அலங்கார ஊர்தி

    உத்தர பிரதேச மாநில அலங்கார ஊர்தி

    ராஜஸ்தான் மாநில அலங்கார ஊர்தி

    குஜராத் மாநில அலங்கார ஊர்தி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.
    • குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    குடியரசு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவையொட்டி கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசியக்கொடி எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து கொடிக்கம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஏற்றி மரியாதை செய்தார்.

    அப்போது கோவில் யானை காந்திமதி 3 முறை பிளிறி, தேசியக் கொடிக்கு வணக்கம் செய்தது. அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர்.

    தொடர்ந்து தேசியக் கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • குடியரசு தினவிழா முன்னிட்டு ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன.
    • பிரான்ஸ் படைவீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

    இந்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார். தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்ற பிறகு, கண்கவர் அணிவகுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிர பவனில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடனிருந்தார்.

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்டு இந்திய இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.

    தேசியக்கொடியை பறக்கவிட்டபடி Mi-17IV ஹெலிகாப்டர்

    நான்கு Mi-17IV ஹெலிகாப்டர்கள் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு வானில் சென்றன.

    சக்ரா விருதுகள் வாங்கிய அதிகாரிகள் அணிவகுப்பு

    மிக உயர்ந்த வீர வீருதுகளான பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற அதிகாரிகள் அணிவகுபபு நடைபெற்றது.

    குதிரைப்படை அணிவகுப்பு

    பிரான்ஸ் வீரர்கள் அணிவகுப்பு

    டி-90 பீஷ்மா டாங்கிகள் அணிவகுப்பு

    பாதுகாப்புப்படையின் அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு

    பீரங்கி படைப்பிரிவின் பினாகா படைப்பிரிவின் அணிவகுப்பு

    பழமையான காலாட்படையின் மெட்ராஸ் படைப்பிரிவின் அணிவகுப்பு

    முப்படையில் உள்ள வீராங்கனைகளின் அணிவகுப்பு

    ஆயுதப்படை மருத்துவக்குழுவின் அனைத்து பெண்கள் பிரிவு அணிவகுப்பு

    இந்திய விமானப்படை அணிவகுப்பு

    முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் பாதுகாப்புப்படையின் இசைக்குழு

    இந்திய விமாப்படையின் சிறப்பை விளக்கும் காட்சி வீடியோ

    டெல்லி பெண் போலீசின் இசைக்குழு முதன்முறையாக பங்கேற்றது

    பெண் அதிகாரித்தை பிரதிபலிக்கும் வகையில் பெண் வீராங்கனைகளின் அணிவகுப்பு

    • கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு இந்த பணிக்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கங்களை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    காந்தியடிகள் பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான சசாங்சாய்க்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான சசாங்சாய், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி பணியில் சேர்ந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் இவர் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 9742 வழக்குகள் போடப்பட்டு 9822 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 26-ந்தேதி முதல் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சசாங்சாய் அங்கும் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் 790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 843 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரக்காணத்தில் 22 பேர் பலியான கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி மதன்குமாரை கொல்கத்தாவில் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் காந்தியடிகள் பதக்கம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளரான காசி விஸ்வநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக சிறப்பான தகவல்களை சேகரித்துள்ள இவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இவர் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை ஒழிப்பதில் தீவிரமாக செயலாற்றியுள்ளார்.

    செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமிக்கும் காந்தியடிகள் பதக்கம் கிடைத்துள்ளது. 2000-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த முனியசாமி, 2013-ம் ஆண்டு முதல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலத்தில் பல வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கும் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் உதவி புரிந்துள்ளார்.

    செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனியசாமி போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்காக அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான பாண்டியனுக்கும் போதை பொருட்கள் மற்றும் மதுபான கடத்தல் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மதுவிலக்கு சட்டத்தின்படி 160 வழக்குகளை பதிவு செய்துள்ளார். இதில் 32 வழக்குகள் கொடுங்குற்ற வழக்குகளாகும்.

    ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு ரங்கநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மது விலக்கு வேட்டையில் சிறப்பாக பணியாற்றியதாக அவருக்கு பதக்கம் கிடைத்து உள்ளது.

    தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் பூமிநாதனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு 2-வது இடமும், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளன.

    • நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று காலை குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. ஆணையாளர் மோகன்குமார் முன்னிலையில், நகர் மன்ற தலைவர் சிந்தூரி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நகராட்சி வளாகத்துக்கு வருகை தந்த நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

    நான் நகர் மன்ற துணைத்தலைவராக பதவி வைத்து வருகிறேன். எனக்கு இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுத்ததே கிடையாது. பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகையால் இன்று குடியரசு தினத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், தலைவர் சிந்தூரி மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணியை சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • 21 பீரங்கி குண்டு முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி.
    • முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

    • முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே 75-வது குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    இதனை தொடர்ந்து, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


    பின்னர், பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • குடியரசு தின விழாவில் ஆர்.என். ரவி தேசியக்கொடி ஏற்றினார்.
    • முதலமைச்சர் மற்றும் ஆளுநர் முப்படை மற்றும் காவல் சிறப்புப்பிரிவின் மரியாதையை ஏற்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வீரதீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கி வருகின்றன. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், காயல்பட்டினம் யாசர் அராபத், நெல்லை டேனியல் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சிவக்குமார்

    தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த அதிதீவிர கனமழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டார்.

    மேற்படி கிராமங்களில் இரவு 10.30 மணி முதல் ஒவ்வொரு வீடாக சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2,400 பேர் மீட்கப் பட்டனர்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி சிவக்குமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    யாசர் அராபத்

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ந் தேதிகளில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர்.

    அவர்களை மீட்க தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த மீனவர் யாசர் அராபத் என்பவரிடம் உதவி கோரப்பட்டது.

    இதையடுத்து அவரது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக தங்களது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை தங்களுடைய படகில் சென்று மீட்டு வந்தனர். மேலும் அங்குள்ள ஒரு உப்பளத்தில் தவித்துக் கொண்டிருந்த 13 உப்பளத் தொழிலாளர்களையும் 2 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பின் மீட்டு வந்துள்ளனர்.

    தனது உயிரையும் துச்சமென நினைத்து தண்ணீரில் தத்தளித்த மக்களை காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலை பாராட்டி யாசர் அராபத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    டேனியல் செல்வ சிங்

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த டேனியல் செல்வ சிங் என்பவர் தான் வசிக்கும் தெருக்களில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றை தண்ணீரில் நீந்தியவாறு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

    இவர் தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து கடந்த டிசம்பர் மாதம் 18, 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்.

    தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி டேனியல் செல்வசிங்குக்கு 2024-ம் ஆண்டிற்கான வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்துள்ளது.

    • ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.
    • தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் ஆர்.என். ரவி.

    குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 7.52 மணிக்கு மோட்டார் சைக்கிள் புடைசூழ வந்தார். அவர் அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி வந்தார். அவரை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி காரில் 7.54 மணியளவில் அவரது மனைவியுடன் வந்தார். அவரும் பார்வையாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து வணக்கம் தெரிவித்தார். காலை 7.58 மணியளவில் தேசியக்கொடி ஏற்றும் இடம் அருகே கவர்னர் ஆர்.என். ரவி வந்தார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

    பின்னர் முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் டி.ஜி.பி. அருண் ஆகியோரை கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் ரோஜா மலர் தூவியபடி சென்றது.

    அதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று அமர்ந்தார். கவர்னர் ஆர்.என்.ரவி அணிவகுப்பு மேடைக்கு வந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பை ஏற்றார். அதனைத்தொடர்ந்து 41 வகை படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்தன. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.

    அதன் பிறகு அவர் மேடைக்கு சென்று அமர்ந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வீரதீர துணிச்சல் மிகுந்த செயல்களுக்கான பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

    கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கத்தை கிருஷ்ணகிரி மாவட்ட தளி பகுதியை சேர்ந்த முகமது ஜுபேருக்கு வழங்கினார். இவருக்கு ரூ.25 ஆயிரம் காசோலை, பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

    சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலம் பூலாம்பட்டியை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது. இவருக்கு ரொக்கப் பரிசு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
    • இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்துள்ள அதிபர் மேக்ரான் பல இடங்களை சுற்றிப் பார்க்கிறார்.

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று பிரான்சில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார்.

    அதிபர் மேக்ரானை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர், முதல் மந்திரி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பிரதமர் மோடியுடன் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதன்பின் இருவரும் சில வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களைப் பார்வையிட உள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இம்மானுவல் மேக்ரான் பார்வையிட்டு, அங்கு நடைபெறும் கலாசார நிகழ்வை கண்டு ரசிக்க உள்ளார்.

    ராம்பேக் அரண்மனையில் அதிபர் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் அதிபர் மேக்ரான் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடையும் மேக்ரான் பல இடங்களை சுற்றி பார்க்க இருக்கிறார்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில், இன்று இந்தியா வருகிறார்.

    பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். இருவரும் இணைந்து சில வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட இருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட இருக்கிறார். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசிக்க உள்ளார்.

    டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் ரோடுஷோ நடத்த உள்ளனர்.

    ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் இந்தியா வர இருக்கிறார்.

    இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×