search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்பு"

    • வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார்.
    • பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    திருத்தணி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த 4-ந் தேதி இரவு திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 12 மீட்டர் நீளத்திற்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் வாகனங்கள் சென்றால் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலை கோவிலுக்கு வாகனங்கள் செல்ல வருகிற 24-ந்தேதி வரை தடை விதித்து கோவில் இணை ஆணையர் ரமணி உத்தர விட்டு உள்ளார். இதனால் பக்தர்கள் அனைவரும் சரவண பொய்கை மலை படிக் கட்டுகள் வழியாக மட்டுமே சென்று சாமி தரிசனம் செய்து வருகி றார்கள். மலைப்பாதையில் வாகனங்கள் மேலே செல்லாதவாறு போலீசார் இரும்பு தடுப்பு கள் அமைத்து உள்ளனர். சேதம் அடைந்த மலைப் பாதை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் வேக மாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அமைச்சர் காந்தி, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது.

    ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தீபா, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாமி ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
    • நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.

    அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

    நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

    இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

    அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

    உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

    குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு 64 கி.மீ.,நீளம் உள்ள பிரதான கால்வாய் வழியாக நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கால்வாய் அமைத்து 65 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இரு புறமும் உள்ள கான்கிரீட் சிலாப்புகள், மடைகள் உடைந்தும், நீர் வீணாவது அதிகரித்துள்ளது. அதே போல் கால்வாய் செல்லும் வழியின் குறுக்கே, ஓடைகளில் மழை நீர் வெளியேறும் வகையில் அமைத்துள்ள சுரங்க வழித்தடங்கள் மற்றும் மேல் நீர் போக்கிகள் சிதிலமடைந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

    எனவே பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரதான கால்வாயில், பெருமாள்புதுார் முதல் சாளரப்பட்டி வரை 13.50 கி.மீ., நீளத்துக்கு புதுப்பிக்க 4.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில் அதிகம் சேதமடைந்துள்ள 13.50 கி.மீ., நீளம் உள்ள பகுதிகளில் 20 மதகுகள், 7 சுரங்க நீர் வழிப்பாதைகள், 2 மேல் நீர் போக்கி அமைப்புகள் மற்றும் கான்கிரீட் கரைகள் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

    டெண்டர் பணிகள் முடிந்து புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தனர். அமராவதி அணையில் துவங்கி 64 கி.மீ., தூரம் அமைந்துள்ள பிரதான கால்வாயில் பெரும்பாலான பகுதிகளில், கான்கிரீட் கரைகள் மண் கால்வாயாக மாறி, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சுரங்க நீர் வழித்தடங்கள் அமைந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் வலுவிழந்து ஒவ்வொன்றாக உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கால்வாயிலுள்ள பெரும்பாலான மடைகள், உடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் படிகளுடன் காணப்படும் கரைகளும் சிதிலமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் மிகவும் பாதித்து வருகின்றனர். எனவே முழுமையாக கால்வாயை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.
    • சீரமைப்பு பணிகள் நடந்து வருவது பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலை பிரிவில் இருந்து தும்பூர் வரை செல்லும் வகையில் ரோடு உள்ளது. இந்த சாலையின் பெரும்பாலான இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், பஸ்கள், அவசர ஊர்திகள் ஆகியவை தட்டுத்தடுமாறி செல்ல வேண்டி இருந்தது.

    தும்பூர் பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பான செய்தி மாலைமலர் பத்திரிகையிலும் வெளியானது.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்- கோத்தகிரி பிரதான சாலையின் பிரிவில் இருந்து தும்பூர் வரையிலான போக்குவரத்து ரோட்டில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு அங்கமாக அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் 1309 ரெயில் நிலையங்களை உலக தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற பெயரில் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு. சேலம், தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளா மாநிலத்தில் 5, கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு என 25 ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    மேற்கூறிய ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணியை இன்று காலை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் மெகா திரையில் அடிக்கல் நாட்டு விழா நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டன.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது ரெயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மெகா திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த திட்டத்திற்கான கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கல்யாண சுந்தரம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், பொன்மலை ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மாநகராட்சி கவுன்சிலர் மேத்தா, மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவகுமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மட்டும் மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை ரெயில் நிலையம் முற்றிலும் சீரமைக்கப்படுகின்றன.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆவின்பாலகத்திற்கு அருகே நவீன வசதிகளுடன் கழிவறை வசதி செய்யப்பட உள்ளது. தற்போது இருக்கக்கூடிய பார்சல் அலுவலகம் ரெயில் நிலையத்தின் பின்புற பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் இருந்த இடத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக உயர்நிலை நடைபாலம்,

    நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன. தஞ்சை ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-

    சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர்
    • வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.

    கன்னியாகுமரி :

    உரப்பனவிளையில் இருந்து வெள்ளமோடி வழியாக முட்டம் செல்லும் சானலில் வெள்ளமோடி பாலம் அருகில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மழைநீரினால் சேதமடைந்து போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். இதனை சரிசெய்ய வெள்ளிமலை பேரூராட்சி தலைவரும், முட்டம் இரட்டை க்கரை கிளைகால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலை வருமான பாலசுப்ரமணியன் பலமுறை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளையும், பொதுப் பணித்துறை அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு அளித்தார். மேலும் வெள்ளிமலை பாரதிய ஜனதா சார்பாக உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதன் காரணமாக அந்த சானல்கரை யினை சரிசெய்யும் பணி தொடங்கியது. இதை வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள், பஞ். துணைத்தலைவர் கார்த்தி கேயன், ஊர் தலைவர் கிருஷ்ணசாமி ஆசான், பாரதிய மாநில பொதுக்குழு உறுப்பி னர் ரெத்தினமணி, மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பிரபு, வெள்ளிச்சந்தை பாரதிய ஜனதா தலைவர் துரைசிங்கம், மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய பொது செயலாளர் குமார், பாரதிய ஜனதா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முள்ளங்கினாவிளை - இடையன்கோட்டை சாலையில் சரல்விளை பகுதியில் 15 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரம் உள்ள பக்கச்சுவர் கடந்த மே மாதம் பெய்த கனமழையால் உடைந்து விழுந்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் இந்த வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து போக்கு வரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள நோயா ளிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவி கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து ராஜே ஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரை சந்தித்து உடனடியாக பக்கச்சு வரை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் ஊராட்சி சிறப்பு நிதி திட்டத்தில் இருந்து ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து பக்கச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடி வடைந்ததையடுத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமனோர் உடனிருந்தனர்.

    ×