search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை பகுதியில் பழுதான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்
    X

    விஜய்வசந்த் எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்ட காட்சி.

    குழித்துறை பகுதியில் பழுதான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்

    • நகராட்சி ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. மார்த்தாண்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களைச் சந்தித்து குறை களைக் கேட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

    அப்போது எம்.பி. அலுவ லகம் வருகை தந்த குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகத்திடம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வசதி வாரியம் சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதித்து உள்ளன. பணிகள் முடிவடைந்த தும் சாலைகள் சரியாக மூடப்ப டாத காரணத்தினாலும் குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அதற்கான பணிகள் எப்போது முடியும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜய்வசந்த் எம்.பி. ஆணை யரிடம் கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

    மேலும் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளது. அதனைச் சீரமைக்க வேண்டியும், மார்த்தாண்டம் மேம்பாலம் கீழே செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டியும், மற்றும் குழித்துறை நகராட்சி யிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகை யில் உள்ளதால் அந்த கூடத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின் போது தூய்மை அலுவலர் ஸ்டான்லி குமார், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரீகன், வட்டார தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×