search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர். 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
    X

    ஜோசப் தெருவில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதை படத்தில் காணலாம்.

    நாகர். 17-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • பொதுமக்கள் குமுறல்
    • உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டு களில் சாலை மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி கூட்டத்திலும் சாலை சீர மைப்பிற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள் ளது. சாலை சீரமைப் பிற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட பிறகும் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாகவே காட்சி அளிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட ஜோசப் தெரு சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளது. ஏராளமான பொது மக்கள் வசித்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த சாலையை பயன்ப டுத்தி வருகிறார்கள். இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகிறார்கள்.

    ஆனால் இந்த சாலையின் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. சாலை யில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது.சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    இந்த சாலையை சீர மைக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை நேரில் சந்தித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் நேரத்தில் சாலை சீரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் இதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    உள்ளாட்சி தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இந்த சாலை சீரமைப்பிற்கு போதிய நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது மட்டுமின்றி 17-வது வார்டுக்குட்பட்ட மேலும் பல்வேறு சாலைகளும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. இந்த சாலை களையும் சீரமைக்க வேண்டும் என்பதே அனை வரின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் நாகர் கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 52 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை வைத்து உள்ள னர்.

    மேயர் மகேஷ் இந்த சாலை சீரமைப்பில் தனி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×