search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவ கிராமம்"

    • நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்
    • பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார்

    நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் இன்று அவர், புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றார். அப்போது பா.ஜ.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

    நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

    • எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும்

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்து கடும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு வைரவன் குப்பம் கடற்கரை பகுதிக்கும் பரவியதால் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தாசில்தார் மதிவாணன். மீன்வளத்துறை அதிகாரி கங்காதரன், சுற்றுச்சூழல் அதிகாரி லிவிங்ஸ்டன் ஆகியோர் நேரில் பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரை சேகரித்து பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    ஏற்கனவே மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் செல்லாமல் இருந்த மீனவர்கள் தற்போது கடலில் எண்ணெய் கழிவு கலப்பால் 20நாட்களாக வாழ்வாதாரம் பாதித்து தவித்து வருகிறார்கள். இந்தநிலையில் பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி, கோட்டைக்குப்பம் ஊராட்சி, தாங்கல் பெரும்புலம் ஊராட்சி அவுரிவாக்கம் ஊராட்சி, பழவேற்காடு ஊராட்சி ஆகிய ஊராட்சி மீனவர் கிராமங்களின் கூட்டமைப்பு சார்பில் 33 கிராம மீனவர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து 33 மீனவ கிராம பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், பழவேற்காடு கடலில் கலந்துள்ள எண்ணெய் கழிவினால் மீன்கள், இறால்கள் நண்டுகள் உற்பத்தி வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேலை வாய்ப்பு மற்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீனவ கிராமத்தில் குடிநீர் தேக்கத்தொட்டி பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.
    • குடிநீர் பிரச்சனையால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் 3இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.

    திருமுல்லைவாசல் ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி ஆளுனர் வருகை விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி துணை ஆளுனர் ஜி.வி.என்.கணேஷ் தலைமை வகித்தார்.

    தலைவர் பி.பிரபாகர், செயலாளர் வி.தேவேந்திரன், பொருளாளர் என்.பைசல்அலி முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் நல்ல குடிநீர் வழங்கும் விதமாக போர்வெல் அமைத்து குடிநீர் எடுத்து குழாய் மூலம் மூன்று இடங்களில் குடிநீர் தேக்கத்தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கிட பயன்பாட்டிற்கு மாவட்ட ஆளுனர் ஜி.செங்குட்டுவன் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுனர் ராமன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
    • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

    அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

    இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

    எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

    ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

    • வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மீன்வளத் துறை அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் வரப் பெற்ற கடிதத்தில் கேசவன் புத்தன் துறை ஊரை சார்ந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அரசிடமிருந்து பெற்று வருகின்ற 25 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்று உண்மைக்கு மாறான தவறான தகவலின் அடிப்ப டையில் மீன்வளத்துறை இந்த கடிதத்தை அனுப்பி யுள்ளதாக அறிய முடிகிறது. இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்பது உண்மைக்கு புறம்பானது, இவர்கள் அனைவரும் கடலை நம்பி வாழ்பவர்கள். கடலுக்கு செல்ல முடியாத நாட்களில் தற்காலிகமாக வேறு சிறு தொழில்களையும் செய்து வருகிறார்கள்.

    கேசவன்புத்தன்துறை ஊரில் கடல் தொழில் செய்து வருகின்ற 13 பேருக்கு அரசால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் அனைத்தும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு குறைந்த நிவாரணம் வழங்கப்படு கிறது. ஆனால் தடைக் கால நிவாரணம் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த கால நிவாரணம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஏழை மீன்பிடி தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படுகின்ற அனைத்து நிவாரணங்களும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி செட்டிவிளை ஊரில் முந்திரி கிணறு முதல் செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் வரை உள்ள சாலையினை ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், ஈத்தங்காடு மணக்குடி ரோட்டிலிருந்து பூலாங்குளம் இணைப்புச் சாலையினை ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யவும் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி, தெற்கு கிராமம், வெள்ளாளர் தெரு பிள்ளையார் கோவில் பின்பகுதியில் 40 வருடத்திற்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். ரியல்எஸ்டேட் தொழிலுக்காக இந்த குடியிருப்புகளை அகற்றி பாதை அமைக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக தெரிகிறது. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குடியிருப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அளித்த மனுவில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக் ஷயாகண்ணன், சாமி தோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×