search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thermal Power Station"

    • அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 2-வது நிலையின் 1-வது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அனல்மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.
    • சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.

    மீஞ்சூர் அருகேயுள்ள அத்திப்பட்டு புது நகரில் வல்லூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. மேலும் இது தேசிய அனல் மின் நிலையம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சியாகும். இந்த அனல் மின் நிலையம் 500 மெகவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகளை கொண்டுள்ளது.

    இந்நிலையில் வல்லூர் அனல்மின் நிலையத்தில் ரூ.876 கோடி செலவில் மாசு கட்டுப்பாட்டு வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அனல் மின் நிலையங்களில் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த வசதிகள் நிறுவப்படுகின்றன.

    தேசிய தலைநகர் அல்லது 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் சல்பர் டை ஆக்சைடு வெளியேற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் கடந்த 2022-ம் ஆண்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வல்லூர் அனல் மின் நிலையத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த அனல் மின் நிலையம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கூடுதலாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கூடுதல் கட்டுமான பணிகளை கருத்தில் கொண்டு செலவு தொகை சற்று அதிகமாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உடன்குடியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடியில் ரூ.9,250கோடி மதிப்பீட்டில் 1301மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலை யம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் நிலக்கரி இறங்கு தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பணிகள் இரவு, பகலாக நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது.

    சட்டமன்ற குழு ஆய்வு

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் சேலம் வடக்கு அருள், அண்ணாநகர் மோகன், நாமக்கல் ராமலிங்கம், பெருந்துறை ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கடலில் அமைக்கப்பட்டிருக்கும் பாலம், கட்டிடங்கள் கட்டும் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களுடன் கலந்துரையாடி பணிகள் குறித்து கேட்டிறிந்தனர்.

    இதில் உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தையடியூர் மால்ராஜேஷ், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப்கல்லாசி, மாவட்ட பிரதிநிதி ஹீபர் மோசஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.
    • 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ பற்றியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரியும் தீயை, ரசாயன நுரை, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தீ விபத்தால், 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல் மின் நிலையம் நிறுவப்பட்டு மூன்று அலகுகளில் தலா 500 வீதம் மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு இங்குள்ள 1வது அலகில் டர்பன் ஜெனரேட்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. டர்பனில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அனல் மின் நிலையத்திற்குள் ஏற்பட்ட தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    சுமார் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 1வது அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடித்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க 1மாதம் வரை ஆகலாம் என அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 8 நாட்களாக கடலில் படகு மூலம் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • 5 அனல் மின்நிலைய ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் அனல் மின் நிலையத்தில் காப்பர் குழாய் மற்றும் டியூப்புகள் திருட்டு போனது. இது குறித்து தெர்மல்நகர் அனல் மின்நிலைய பண்டக சாலை கட்டுப்பாட்டு அலுவலர் சுப்பிரமணி, தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் பண்டகசாலை இ-மற்றும் கே-ஆகிய பிரிவுகளில் அனல் மின்நிலையத்திற்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

    அதனை சரி பார்க்கும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த 690 கிலோ காப்பர் குழாய்கள் மற்றும் 834 காப்பர் டியூப்புகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்துள்ளது என கூறி யிருந்தார்.

    இது குறித்து தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான தனிப்பட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் 15-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 8 நாட்களாக கடலில் படகு மூலம் வந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபிரேம்சிங், மாசாணமுத்து, மதன், பிரகாஷ், சுப்பிரமணி, குழந்தைபாண்டி, கணேசமூர்த்தி, அழகர், சந்தனராஜ், மாரிமுத்து ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் அனல் மின் நிலையத்தில் பணியின் போது கவன குறைவாக இருந்ததாக 5 அனல் மின்நிலைய ஊழியர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

    திருட்டு சம்பந்தமாக புகார் அளித்த சில நாட்களிலே தீவிரமாக செயல்பட்டு குற்ற செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசாரை உயர் காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையின் 2, 3-ம் அலகுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
    • கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில்1-வது நிலையின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதேபோல் 3-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மொத்தம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொதிகலன் கசிவு, தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    • வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

    உடன்குடி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட உடன்குடி கிராமத்தில் உடன்குடிஅனல் மின்  நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதைப்போல இந்த அனல் மின் நிலையத்திற்கு கடல் வழியாக நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழி அருகே துறைமுகம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்தில் 2-ம்அலகு மற்றும் 3-ம்அலகு விரிவாக்கம் செய்வதற்காக காலன் குடியிருப்பு கிராமம் மற்றும் மாநாடு, தண்டுபத்து கிராமம் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெறாத காலி இடங்கள் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் இந்த 2 கிராமங்களிலும் உள்ள காலி நிலங்களை பத்திரப்பதிவுசெய்ய முடியாமல் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தில் உருவாகும் மின்சாரத்தை வெளியே எடுத்துச் செல்வதற்கு வசதியாக மாநாடு தண்டுபத்து கிராமபகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 3 சென்ட் காலி நிலத்தை வாங்கி, அதை சுற்றி கம்பி வேலி அமைத்து மின் கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 18 டன் இரும்பு பயன்படுத்தி சுமார் 500 அடிக்கு மேல் உயரத்தில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.
    இதுபற்றி நிலம் கொடுத்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    3 சென்ட் காலியிடத்தை நம்மிடம் எழுதி வாங்கி பத்திரம் பதிவு செய்து விட்டு, இடத்திற்கு தக்கபடி ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நமது வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு, அதற்கு பின்பு அந்த 3 சென்ட் இடத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கிறார்கள், 3 சென்ட்இட த்திலும் எந்த மரம், செடி, கொடிகள் இருக்கக்கூடாது என கூறுகிறார்கள்.

    மேலும் இதைசுற்றி உள்ள மற்ற நிலங்களைபின்பு வாங்குவதாக சொல்லி இருக்கிறார்கள் என்று விவசாயி கூறினார். முதல் அலகு பணி முதலில் செயல்படும் என்றும், அதன் பின்பு 2-ம்அலகு 3-ம் அலகு செயல்படும் என்றும், இவ்வளவு சக்தி வாய்ந்த நவீனரக அனல் மின்நிலையம் தென்பகுதியில் இப்போது தான் அமைக்கப்படுகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் தொடங்கி இரவு வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள   5 யூனிட்டுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு மின்உற்பத்தியான 1050 மெகாவாட் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
    வடசென்னை அனல்மின் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, அடையாள அட்டை, போனசை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் இன்று காலை அனல்மின் நிலைய 1-வது நிலை வாயில் அருகே நூதனமாக அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைககளை கைகளில் ஏந்தியபடி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இதில் சி.ஐ.டி.யூ. செயலாளர் சுந்தரம், மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி உள்படஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல் மின் நிலைய தலைவர் வெங்கட்டையன் கூறும் போது, “ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து வருகிற 16-ந்தேதி குறளகத்தில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்பட வில்லை எனில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம்” என்றார். #ThermalPowerStation

    ×