என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளும் இயக்கம்
Byமாலை மலர்25 May 2022 9:59 AM GMT (Updated: 25 May 2022 9:59 AM GMT)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு மாதத்திற்கு பின்னர் 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 5 மின்உற்பத்தி யூனிட்டுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் தொடங்கி இரவு வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் முழு மின்உற்பத்தியான 1050 மெகாவாட் தினமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X