search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குமரிக்கு ரூ.300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம்
    X

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குமரிக்கு ரூ.300 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம்

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    நாகர்கோவில், நவ.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு 2024- ம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8-ல் உலக முத லீட்டாளர் கள் மாநாட்டை நடத்த திட்ட மிட்டுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ரூ.300 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உலக முத லீட்டாளர்கள் மாநாட்டில் கன்னியாகுமரி மாவட் டத்திற்கு முதலீடு களை ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்து நடை முறைப்படுத்த அனைத்து குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைப்புகள், தொழில் வணிக அமைப்புகள், கல்லூரி கூட்டமைப்பு அனைத்து நிறுவனங்கள், அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து உறுதி செய்வதற்குரிய வழிமுறை களை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இதன்படி ரூ.99 லட்சத்திற்கு மேலான இயந்திர தளவாட மதிப் புள்ள தொழிற் சாலைகள், பல்நோக்கு அரங்கங்கள், மேம்படுத்தப் பட்ட ஓட்டல்கள், வணிக கூடங்கள் அமைத்தல், முகமை தொழில், வணிக கூட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிய அனைத்து வகைகளிலும் மாவட்டத்தில் உள்ள தொழில் அமைப்புகள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் ஆர்வலர்கள் வணிக செயல் பாட்டாளர்கள் www.msmeonline.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மாவட்ட தொழில் மையத் தில் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசின் ஒப்புதல்கள், உதவிகள், மானியங்கள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 குறித்த அைனத்து விபரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள மாவட்ட தொழில் மையம் தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில் 4 அலுவலகத்தை நேரிேலா அல்லது தொலை பேசி எண் 04652 260008 வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×