search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது.
    • அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை.

    திண்டுக்கல்:

    நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. படித்தால் வேலை கிடைக்கும் என நம்பி பட்டப்படிப்புகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பின்னர் அதனை புதுப்பித்து வேலை கிடைக்காத நிலையில் கிடைத்த வேலையை செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காத நிலையில் ஓட்டல், டீக்கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் 66 காலியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வியே தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து இளநிலை, முதுநிலை, எஞ்ஜினீயரிங், டிப்ளமோ, பி.ஹெச்.டி படித்த மாணவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.


    விண்ணப்பம் செய்திருந்த 6167 பேர்களில் தினசரி 1200 பேர் வீதம் நேர்காணல் தேர்வு வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த இடமே கடும் போக்குவரத்து நெரிசலானது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் தலைமையில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

    கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். செய்முறை தேர்வாக சாணி அள்ளுதல், மாடுகளுக்கு ஊசி போடுதல், நோய்தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்தல், மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கயிறு மூலம் இழுத்து கட்டுதல் ஆகியவையே போதுமானது. மேலும் மாடுகளின் பால் கறக்கும் மடிகளில் புண்கள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பணிகளை கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களே எளிதாக செய்ய முடியும்.

    ஆனால் வேலை இல்லாத காரணத்தால் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இருந்த போதும் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.

    இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கையில்,

    படித்த படிப்புக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறோம். வேலை இல்லாததால் திருமணம் கூட நடைபெறவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிட ஏதேனும் ஒரு வேலையை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதுவும் இந்த பணி அரசு வேலை என்பதால் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பையும் நினைக்காமல் வந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு கட்டுபடியான சம்பளம் என்பதால் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுபவம் இல்லையென்றாலும் போகப்போக சரியாகிவிடும் என நினைக்கிறோம் என்றனர். ஆண்கள் மட்டுமின்றி பட்டதாரி பெண்களும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் அறிவு றுத்தலின் பெயரிலும் நடைபெற்றது.

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடை உதவி மருத்து வர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், ஊராட்சி செயலர் பிரகாஷ்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூர் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றறது. சிக்கல் கால்நடை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சீதா நாகராஜன் தலைமை தாங்கினார். கால்நடை மருத்துவர் அரவிந்த் (சிக்கல்), அரவிந்தன் (சாயல்குடி), கால்நடை ஆய்வாளர்கள் ரெஜினாராணி, உஷா, கால்நடை உதவியாளர் பாலதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

    • சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம்.
    • கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற் றது. ராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கால்நடை களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வருகி றது. அதனடிப்படையில் தற்போது நான்காம் கட்ட சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கி 21 நாட்கள் நடைபெறுகிறது. இதில் விடு பட்ட கால்நடைகளுக்கு 10.12.2023 அன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 20 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 120 முகாம்கள் நடைபெறுகி ன்றன. தங்கள் பகுதிகளில் நடைபெறும் கால்நடைகளுக் கான மருத்துவ முகாமில் கால்நடை வளர்ப்போர்கள் தவறாமல் கால்நடைகளை அழைத்து வந்து உரிய பரி சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    தற்பொழுது நடைபெறும் மருத்துவ முகாம்களில் கால் நடைகளை தாக்கி வரும் கொடிய வைரஸ்களை கண் டறிந்து உரிய சிகிச்சை வழங்குதல் மற்றும் கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுதல், இளங்கன்று கள் இறப்பு போன்றவற்றை தடுத்திடும் வகையில் தேவை யான முன்னேற்பாடு சிகிச்சை வழங்குதல் அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும் கால்காணை மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப் பூசி மருந்துகள் வழங்குதல், அதேபோல் வீடுகளில் வளர்க்கக்கூடிய கோழி, நாய் போன்றவற்றிற்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப் படுகின்றன. எனவே மாடு, ஆடு வளர்த்து வரும் பொது மக்கள் தங்கள் கால்நடை களை கட்டாயம் மருத்துவ முகாமிற்கு அழைத்து வந்து உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு சிறந்த முறையில் பராமரித்து பயன்பெற்றிட வேண்டும் என்றார்.

    பின்னர் சிறப்பாக கறவை மாடு மற்றும் கன்றுகள் பராமரித்து வரும் நபர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுப் பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங் கோவன், பால்வளத்துறை துணை பதிவாளர் புஷ்ப லதா, கால்நடை பராமரிப் புத்துறை உதவி இயக்குநர் செங்குட்டுவன், திருப்புல் லணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், சுந்தரமூர்த்தி, முருகராஜன், ஜெபிரகாஷ், ரஜினி, பால் வளத்துறை முதுநிலை ஆய் வாளர் அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை ஆய்வாளர் இளமதி, வண் ணாங்குண்டு ஊராட்சி மன் றத்தலைவர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    • வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியம் கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.
    • கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் 'குக்கிராமங்களில் உள்ள 2.92 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி (கோமாரி நோய்) போடும் பணி நடைபெறுகிறது.

    இந்த தடுப்பூசி போடும் பணி வருகிற 6 ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் டிசம்பர் 21 முடிய உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இந்த தடுப்பூசி போடும் பணியை வருகிற 6-ந் தேதி தஞ்சை ஒன்றியத்தில் உள்ள கொல்லங்கரை கிராமத்தில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

    எனவேநான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவை, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் அனைத்து எருதுகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவித்து தனித்துவ 12 இலக்க எண் உள்ளிட்ட கால்நடை தொடர்பான விவரங்களை பதிவேற்றுதல் இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    எனவே, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தங்கள் கிராமத்திற்கு வருகை புரியும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100 சதவீதம் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி மேற்கொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கால்நடை வளர்ப்போர்கள் கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்கனர் டாக்டர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • கால்நடை காணை நோய் தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் 21 நாட்கள் நடக்கிறது.
    • தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்காணை மற்றும் வாய்காணை நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்நோயினால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவைமாடுகளின் சினைப்பிடிப்பு தடை படுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

    எனவே, கால்நடைகளை தாக்கும் கால்காணை மற்றும் வாய்காணை நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்காணை மற்றும் வாய்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 4-வது சுற்று வருகிற 6-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாள்களும், விடுபட்ட கால்நடைகளுக்கு டிசம்பர் 10-ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    எனவே மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கால்நடை வளர்ப்போர்கள் தங்களது மாட்டினங்களை தவறாது அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையில் திரியும் கால்நடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அரசரடி சந்திப் பில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் ஏ.ஏ.சாலையில் கால்நடைகள் குறுக்கே திரிவ தால் பொது மக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்வ தற்கு மையப்புள்ளியாக இருப்பது அரசரடி சந்திப்பு.

    இச்சாலையில் மின் வாரிய அலுவலகம், திரைய ரங்கம், தனியார் மருத்துவ மனை, தனியார் வங்கிகள், சர்ச், மெடிக்கல் ஷாப், ஹோட்டல், பெடரோல் பங்க், வணிக வளாகங்கள், ஐ.டி.ஐ, பிரிட்டோ பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங் கள் இருப்பதால் மற்ற சாலைகளை விட இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காண்பபடுகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து பெரியார், திருமங் கலம், விரகனூர் சுற்றுச் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்கிறது. இதனால் இந்த சாலை எப்போதும் வாகனங் களால் பரபரப்பாக காணப் படும்.

    இந்த நிலையில் ஞான ஒளிவுபுரம் சாலைகளில் கேட்பாரற்று திரியும் கால் நடைகளால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல் பவர்கள், இருசக்கர வாக னங்களில் போவோர் அவதி யடைந்து வருகின்றனர். சாலையின் குறுக்கே கால் நடைகள் நடப்பதால் சாலை யின் இடது புறம் செலவதா அல்லது வலது புறம் கால் நடைகளை முந்தி செல் வதா? என செய்வதறியாது வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.

    இதே போன்று மதுரை நகரில் 4 மாசி வீதிகள், காம ராஜர் சாலை, வெளிவீதிகள், ரெயில்நிலையம், தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, அரசரடி, வெள்ளைபிள்ளை யார் கோவில் தெரு, மகபூப் பாளையம், ஆனையூர், கூடல்நகர், கூடல்புதூர், பி.பி. குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மாடுகள் ரோட்டில் விடப்படுகிறது. அவைகள் சாலையில் அமர்வதால் போக்கு வரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சில சமயம் மாடுகளால் பொது மக்கள் பல இன்னல் களை சந்திக் கின்றனர். மேலும் சாணம் உள்ளிட்ட கழிவுகளால் சுகா தார சீர்கேடும் ஏற்டுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை யில் பள்ளி சென்ற குழந்தை மீது கால் நடைகள் தாக்கியதில் காய மடைந்த மாணவி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்தது. அதே போன்று சம்பவம் நடக்கும் முன்னரே மாநக ராட்சி நிர்வாகம் விழித்துக் கொண்டால் பெரும் விபத் தினை தவிர்க்கலாம். எனவே இனியும் மாநக ராட்சி அதிகாரிகள் மெத்த னம் காட்டாமல் ரோட்டில் சுற்றித்திரியும் கால்நடை களை பிடிக்கவும் அவற்றின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.
    • முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில் கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் பொருட்டு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட ஆணை பிறப்பித்து உள்ளார்.

    அதன்படி 2023-24-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 20 முகாம்கள் வீதம் 300 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    முகாம்கள் இந்த மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் நிறைவு பெற உள்ளது. இம்முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும்.

    நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களில் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது.

    முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்து வர்களால் அறிவிக்கப்படும். அந்த நாளில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
    • 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், குடல் புழு நீக்க பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், காளகஸ்தி நாதபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு செம்பனார்கோயில் கால்நடை மருத்துவர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் சுதா, பிரபாவதி, மோனிஷா ஆகியோர் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

    மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், மலடு நீக்குதல், குடல் புழு நீக்குதல் மற்றும் ஆடு, கோழி, நாய்களுக்கு நோய் தடுப்பூசிகளும் போடப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை ஊராட்சி தலைவர் ஜோதிவள்ளி, துணை தலைவர் சரவணன் ஆகியோர் செய்திருந்னர்.

    முகாமில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில் வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் பொறுப்பா ளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×