search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
    X

    கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்.

    திருத்துறைப்பூண்டி அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

    • இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் ஜாம்புவானோடை ஊராட்சி வீரன்வயல் பகுதியில், தமிழ்நாடு கால்நடை கோட்டம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் இணைந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.

    டாக்டர் சபாபதி, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்,ஊராட்சி மன்ற உறுப்பினர் நளினி,கவிதா,டாக்டர் ராதாகிருஷ்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை உதவியாளர் பிரசன்னா, மாதவன், மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×