என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "animal"
- பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
- ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.
குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.
இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.
இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.
இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.
- 2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன.
- பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Sandeep Reddy Vanga awarded with the Best Director award at the Dada Saheb Phalke Awards for Animal ???#Animal #AnimalTheFilm #AnimalHuntBegins #BloodyBlockbusterAnimal @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika @thedeol @tripti_dimri23@rajshekharis… pic.twitter.com/Vn9Or9zPmu
— T-Series (@TSeries) February 20, 2024
மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.
Congratulations Bobby Deol on this well-deserved honor of winning the Dada Saheb Phalke Award for the Best Actor in a negative role for Animal.?#Animal #AnimalTheFilm #AnimalHuntBegins #BloodyBlockbusterAnimal @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika @thedeol… pic.twitter.com/BaChKErK9x
— T-Series (@TSeries) February 21, 2024Dada Saheb Phalke Award for Animal Director: Bobby Deol wins Best Villain Award
- நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
- இந்த படம் வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இப்படம் ஒரு தரப்பில் பாராட்டை பெற்றாலும் பலர் இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஆணாதிக்கம் மற்றும் இந்துத்துவத்தை தாங்கி பிடிக்கும் காட்சிகள் குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூகத்தில் உரையாடல் தொடங்கும் வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். நேர்காணலில் கலந்து கொண்ட ரன்பீர்கபூர், "சமூகத்தில் நிலவும் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் குறித்து 'அனிமல்' படம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது. இது மிகவும் நல்ல விஷயம். சினிமா என்பது குறைந்தபட்சம் ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் தவறு நடக்கும்போது, அது தவறு என்று நாம் காட்டாவிட்டால், சமூகத்தில் உரையாடல் தொடங்கும்வரை நம்மால் அந்த தவறை உணரவே முடியாது" என்று கூறினார்.
- நடிகை ராதிகா பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
- இவர் டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா 1978-ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'பூவரசம்பூ பூத்தாச்சு' பாடல் இன்று வரை ரசிகர்கள் நினைவில் இருக்கும் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் தயாரித்து நடித்த 'மீண்டும் ஒரு காதல் கதை' திரைப்படம் இயக்குனரின் சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருதை வென்றது.
நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கி, இந்தி என பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம் பேர் விருது என பல விருதுகளை குவித்துள்ள ராதிகா இன்றும் தன் நடிப்பு திறமையால் மிளிர்கிறார். இவர் தற்போது பல டாப் ஹீரோக்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா ஒரு படத்தை விமர்சித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'எந்தப் படத்தையாவது பார்த்து கிரிஞ்சா இருக்குனு யாருக்காவது தோணிருக்கா? இந்த படத்தை பார்க்கும் பொழுது வாமிட் வரும் அளவிற்கு கோபம் வருது' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனிமல் மற்றும் ஹனுமான் திரைப்படத்தை ராதிகா விமர்சிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Have anyone cringed watching a movie? I wanted to throw up watching a particular movie????so so angry
— Radikaa Sarathkumar (@realradikaa) January 27, 2024
- ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’.
- இப்படம் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் 'அனிமல்'. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாபிதியோல், டிருப்தி டிம்ரி, அனில்கபூர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
தந்தை, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.
அனிமல் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, 'அனிமல்' படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர்- டிருப்தி டிம்ரியுடன் தூங்கியதால் ரன்பீர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. 'ஆக்ஷனும்', 'கட்டுக்கும்' இடையில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.
காட்சி முடிந்ததும் நான் உண்மையாக அழுதேன். ரன்பீரிடம் சென்று அது சரியா? நலமாக இருக்கிறீர்களா? என்றேன். காட்சியில் நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை உணர்ந்தேன். 'அனிமல்' படத்திலும் காட்சியிலும் நான் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.
- ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அனிமல்'.
- இந்த படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில், அனிமல் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா 'அனிமல்' திரைப்படம் வருகிற 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பத்மஸ்ரீ ஜாவெத் 5 முறை தேசிய விருதுகளை வென்றவர்
- ஆணாதிக்க காட்சியமைப்புகள் அதிகம் இருந்தும் அனிமல் வெற்றி பெற்றது
இந்தி திரையுலகில் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் பல வெற்றி படங்களில் பணியாற்றியவர், ஜாவெத் அக்தர் (Javed Akhtar).
5 முறை தேசிய விருதுகளை வென்ற ஜாவெத், 1999ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார்.
தற்போது 78 வயதாகும் ஜாவெத், திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் போதெல்லாம், தனது கருத்துக்களை கூற தயங்காதவர்.
மகாராஷ்டிரா மாநில அவுரங்கபாத் நகரில் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஜாவெத்திடம் தற்கால திரைப்படங்களின் தரம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
படங்களின் வெற்றிக்கும் தரத்திற்கும் ரசிகர்கள்தான் பொறுப்பு. தற்காலத்தில் வெற்றி பெறும் படங்களின் தரம் குறித்து நான் கவலைப்படுகிறேன். ஒரு திரைப்படத்தில், பெண்ணை அறைவது தவறில்லை என ஒரு கதாநாயகன் கூறி அத்திரைப்படம் பெரும் வெற்றியும் பெற்றால், அது மிகவும் ஆபத்தானது.
எந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.
அப்போதுதான் எந்த வகையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என கலைஞர்கள் முயற்சி செய்வார்கள். படங்களில் வரும் தார்மீக எல்லைக்குட்பட்ட விஷயங்களை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில்தான் உள்ளது.
இவ்வாறு ஜாவெத் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகி இந்தியா மற்றும் உலகெங்கும் வெளியான, "அனிமல்" இந்தி படம் உலகெங்கும் வசூலை அள்ளி குவித்தது. ஆனால், வன்முறை காட்சிகளும், ஆணாதிக்க காட்சியமைப்புகளும் அதில் அதிகம் இடம் பெற்றிருந்தது.
பல எதிர்மறை விமர்சனங்களையும் மீறி அனிமல் வெற்றி பெற்றது.
இப்பின்னணியில், திரைப்பட ரசிகர்களை குறித்த ஜாவெத் அக்தரின் கருத்து பார்க்கப்படுகிறது.
- சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- ’அனிமல்’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் ஒலி தரத்திற்காக 8 முதல் 9 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் இப்படம் ஓடிடியில் வெளியாகும் போது அந்த காட்சிகள் இணைக்கப்படும் என்றும் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 'அனிமல்' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 8 நிமிடங்கள் சேர்க்கப்பட்டால் 3 மணிநேரம் 30 நிமிடம் ரன்னிங் டைம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஜனவரியில் ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நடிகர் ரன்பீர் கபூர் மறுத்ததாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, "நான் ஆடியோ டீசரில் 'சூப்பர் ஸ்டார்' என்ற டேக்கை இணைத்திருந்தேன் இதை பார்த்த ரன்பீர் அந்த டேக்கை எடுக்கும் படி கூறினார்.
ஆனால், நான் இது என்னுடைய உணர்வு என்று ரன்பீரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் ஒன்றாக வேலை பார்த்த மூன்று வருடங்களில் ரன்பீர் இதை மட்டும் தான் மறுத்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன் என்று அந்த டேக்கை இணைத்தேன்" என கூறினார்.
மேலும், "நான் ரன்பீர் கபூரின் பல படங்களை ஹைதராபாத்தில் பார்த்திருக்கிறேன். அவரை கொண்டாடும் ரசிகர்களை பார்த்திருக்கிறேன். ஒரு நட்சத்திரத்திற்கு மட்டுமே அந்த வரவேற்பு கிடைக்கும். ரன்பீருக்கு 'சூப்பர் ஸ்டார்' டேக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னிடம் ஏன் அந்த டேக்கை கொடுத்தோம் என்று கேட்கவில்லை" என்று கூறினார்.
- இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் நடிப்பில் 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'அனிமல்'. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ.800 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இந்நிலையில், அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, 'அனிமல்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2025-ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் இந்த பாகத்திற்கு 'அனிமல் பார்க்' என பெயர் வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘அனிமல்’.
- இப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ரூ.700 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை த்ருப்தி டிம்ரி, "ரன்பீருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் என் பெற்றோர் சற்று அசவுகரியம் அடைந்தார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டார்கள். இதை நீ செய்ய வேண்டாம், இருந்தாலும் ஓகே என்றார்கள்.
பின்னர் நான் அவர்களிடம், "நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும். அதையே நான் செய்தேன்" என்று புரிய வைத்தேன் என்றார். த்ருப்தி டிம்ரி 'அனிமல்' திரைப்படத்தில் ஜோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் நாளில் இருந்தே வசூலில் அனிமல் சாதனை புரிந்து வருகிறது
- அனிமல் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என எம்.பி. விமர்சித்தார்
கடந்த டிசம்பர் 1 அன்று பிரபல தெலுங்கு பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இந்தி திரைப்படமான "அனிமல்" உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உலகளவில் இத்திரைப்படம் வசூலில் ரூ.600 கோடி இதுவரை வசூலித்துள்ளது.
மிகவும் அதிகமாக வன்முறை காட்சிகள் இடம்பெறுவதாக விமர்சிக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது.
"நாம் அனைவரும் திரைப்படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தோம். சமூகத்தின் கண்ணாடியாக விளங்குவது சினிமா. அனிமல் போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு நோய் போன்றவை. எனது மகளும் மேலும் சில குழந்தைகளும் இப்படத்தை காண சென்று பாதியிலேயே திரும்பி விட்டனர். இத்திரைப்படம் ஆணாதிக்கத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கிறது. இதற்கு தணிக்கை சான்றிதழ் எவ்வாறு கிடைத்தது?" என பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சத்தீஸ்கர் மாநில எம்.பி.யான ரஞ்சீத் ரஞ்சன் மாநிலங்களவையில் "அனிமல்" திரைப்படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்