search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைகள் கேட்பு"

    • ராமநாதபுரத்தில் கிராம மக்களை சந்தித்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.
    • இப்பகுதிக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணியமர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம், உச்சிநத்தம் மற்றும் வி.சேதுராஜபுரம் ஊராட்சி களில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர், பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

    மேலும் மழைக்காலமாக உள்ளதால் தங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் களில் தண்ணீர் தேங்காமலும் தங்கள் பகுதிகளில் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

    மாவட்டத்தின் கடைசி பகுதியாக இருக்கக்கூடிய இந்த ஊராட்சிகளில் அவ்வப்போது அரசு துறை அலுவலர்கள் மக்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்கள். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை அரசு அலுவலர்களிடம் தெரிவித்து பயன்பெற வேண்டும். மேலும் இப்பகு திக்கு கூடுதலாக கிராம நிர்வாக அலுவலர் பணிய மர்த்தப்படுவார் என கலெக்டர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கடலாடி வட்டாட்சியர்ரெங்கராஜ், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உச்சி நத்தம் ஊராட்சி மன்றத்த லைவர் பாமா ருக்மணி, சேதுராஜபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜமுனா ஆகியோர் உடனிருந்தனர்.

    • எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டி வயல் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

    அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கிறதா? என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் நேரம், பொருட்கள் தரமாக உள்ளதா? சீராக கிடைக்கப் பெறுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறிப்பாக மகளிர் பொரு ளாதார ரீதியாக பயன்பெ றும் வகையில் மானி யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ளவும், சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி, எட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×