search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men"

    கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

    இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சடையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் (வயது 23) என்ற மகனும், சுபாஷினி (21) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. லோகநாதன், தா.பேட்டை பை-பாஸ் சாலை அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் லோகநாதன் சொத்தை பிரித்து தருமாறு அவரது தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது தந்தை சொத்தை பிரித்து கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் தந்தை -மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சாமிதாஸ், முசிறியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்தார். 

    சம்பவத்தன்று இரவு சுபாஷினி வீட்டிற்கு சென்ற லோகநாதன், சொத்து தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த லோகநாதன், சுபாஷினியின் 1 1/2 வயது குழந்தையான சாதனாஸ்ரீயை கொலை செய்யும் நோக்கத்தோடு தூக்கி தரையில் போட்டார். இதில் குழந்தை பலத்த காயமடைந்தது. 

    இதையடுத்து குழந்தைக்கு முசிறி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று சாதனாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். 

    இதுகுறித்து சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குபதிந்து, லோகநாதனை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எச்.ஐ.வி. ரத்தத்தை தானமாக வழங்கிய வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman

    ராமநாதபுரம்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ரத்தம், அவருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ரத்தம் ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என தெரியவந்தது.

    தானமாக பெறப்பட்ட ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கியவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரியவந்தது. அவர் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்ததானம் வழங்கி உள்ளார்.

    ஆனால் அந்த ரத்தம் உறவுப்பெண்ணுக்கு வழங்கப்படாமல் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மதுரையில் ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    உடனடியாக சிவகாசி ரத்த வங்கியை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்ததோடு, தான் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனை மருத்துவர்கள் தெரிவித்தவுடன் வாலிபர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளாகி விசாரணை பெரிதானது. வாலிபரிடம் மருத்துவர்கள், போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்து (வி‌ஷம்) குடித்து மயங்கினார்.

    அவரை பெற்றோர் மீட்டு கமுதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அறிந்ததும் மனிதாபினமானத்தோடு, ரத்த வங்கிக்கு சென்று தானாக முன்வந்து அதனை தெரிவித்த எனது மகனை, தற்கொலை முடிவுக்கு மற்றவர்கள் தள்ளியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று வாலிபரின் தந்தை தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரை பலரும் சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மனவேதனைக்கு ஆளான அவர், நான் வாழ விரும்பவில்லை. சாகப் போகிறேன் எனக்கூறி கொண்டு தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வாலிபரை பிடித்து வந்து மீண்டும் சிகிச்சையை தொடங்கினர்.

    மேலும் வாலிபர் மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடும் என்பதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த வாலிபர் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman 

    தாய், தந்தையின்றி குற்ற செயலில் ஈடுபட்டு வந்த வாலிபரை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவுரை கூறி பழ வியாபாரத்தில் ஈடுபட வைத்துள்ளார். #Fruitbusiness #erodebusstand

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது19). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டார்.

    தனது பாட்டி பாதுகாப்பில் மணிகண்டன் வளர்ந்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் ஈரோடு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து சிறு சிறு திருட்டு சம்பவ செயலில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிகண்டன் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

    பின்னர் மணிகண்டனை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் அழைத்து திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று மணிகண்டன் தான் திருந்தி வாழ்வதாக எஸ்.பி.யிடம் உறுதி கூறினார்.

    ஆனால் மணிகண்டனுக்கு யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை. இதையறிந்த எஸ்.பி. சக்திகணேசன் மணிகண்டனுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்ய உதவினார்.

    இதையடுத்து தற்போது மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். எஸ்.பி.சக்திகணேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.  #Fruitbusiness #erodebusstand

    வத்தலக்குண்டுவில் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண்ணை திருமணம் செய்ய வாலிபர் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அன்று முதல் மனோஜ் மற்றும் தனலட்சுமி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து 3 மாதங்களாக 2 பேரும் செல்போனிலேயே பேசி வந்தனர்.

    வத்தலக்குண்டுவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அப்போது மனோஜ் திடீரென தனலட்சுமியை தனக்கு பிடிக்க வில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசம் செய்தபோதும் மனோஜ் திருமணம் செய்ய முன்வரவில்லை.

    இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டியில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சவரியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27). இவர்களுக்கு பீலா (7), வீக்னா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சவரியப்பன் கர்நாடகாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். பழனியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் தாய் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற பழனியம்மாள் மாயமானார். இது குறித்து அவரது தாய் முத்தம்மாள் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (30) என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    ஆத்தூரில் முன்விரோத தகராறில் வாலிபரின் காதை அறுத்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சோளிங்கர் அருகே மதுபோதை தகராறில் கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 33), தொழிலாளி. சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் உள்ள நாரைகுளம் பகுதியை சேர்ந்த தினகரன் (28). இவர்கள் இருவரும் பாண்டியநெல்லூர் சுடுகாடு அருகே உள்ள மதுபானகடையில் தனித்தனியே மதுகுடித்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் இருந்த கிணற்றில் இருவரும் விழுந்தனர்.

    உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவர்களை மேலே தூக்கி வந்தனர். அப்போது சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகரனை கைது செய்தனர்.

    வந்தவாசி அருகே வாலிபரை வெட்டி வீசிய நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமல்ராஜ் (வயது 25). மும்முனி குளக்கரையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலில் வெட்டு காயத்துடன் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

    வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி, ஏட்டுக்கள் முருகன், தட்சணாமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஐந்து கண் பாலம் அருகே சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் முறையான ஆவணம் காட்டாமல் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஓட்டி வந்த பைக் கொலையான கமல்ராஜிக்கு சொந்தமானது என தெரியவந்தது,

    மேலும் அவர்கள் விளாநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சாந்தவேல் (35) வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பின்னர் இருவரும் கமல்ராஜை கொலை செய்து மும்முனி குளக்கரையில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டனர்.

    அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் 21ந்தேதி 3 பேரும் கிருஷ்ணாவரம் கூட்டுசாலை அருகே அமர்ந்து மது குடித்தோம். அப்போது மதுவில் போதை பொருளை கலந்து சாந்தவேலுக்கு கொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்த போது அவரது பாகெட்டில் இருந்த ரூ.4 ,500 பணத்தை கமல்ராஜ் திருடி விட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நாங்கள் இருவரும் கமல்ராஜை மது அருந்த அழைத்தோம். ஆயிலவாடி கூட்டுசாலையில் வைத்து மது அருந்தினோம். பணத்தை திருடியது குறித்து கமல்ராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்தார்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கமல்ராஜை காலில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டினோம். பின்னர் பைக்கில் கொண்டு வந்து மும்முனி குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும்படி போட்டு சென்றால் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நினைத்து போட்டு சென்று விட்டோம். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    சாமுவேல், சாந்தவேல் இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    முசிறியில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முசிறி அய்யம்பாளையம் கடைவீதியில் ஆனஸ்ட்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம் மற்றும் தாஸ் ஆகிய 2 பேரும் ஆனஸ்ட்ராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  
    திருப்பத்தூரில் தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு திருப்பத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சக்தி, தச்சு தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 30). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருந்தனர்.

    ஆனால் ஜெயக்குமாரின் மனைவி கனிமொழி மட்டும் அவரது வீட்டிற்கு தெரியாமல் சக்தியின் மனைவி விஜயாவிடம் பேசி வந்தார். இந்த தகவல் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.

    மேலும் சக்தி குடும்பத்தினர் சொல்லி கொடுத்துதான் தனது மனைவி தன்னுடன் சண்டை போடுகிறாள் என ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது தாயார் பத்மினி, தம்பி உதயகுமார் ஆகியோர் கடந்த 15.10.16 அன்று சக்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் சக்தியை கையால் தாக்கினார். ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

    நேற்று வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். உதயகுமார், பத்மினி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    விதவைப்பெண்ணை திருமணம் செய்த வாலிபரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    கடையம் அருகேயுள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் பாரதிராஜா (வயது 19). பொக்லைன் டிரைவர். இவருக்கும் ராஜாங்கபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 5 வயதில் ஒரு மகன் உள்ளான். பாரதிராஜாவுக்கும், அந்த பெண்ணுக்கும் 6 வயது வித்தியாசம் இருந்தது. அந்த பெண் பாரதி ராஜாவை விட மூத்தவர். 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜா அந்த பெண்ணை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தார். இது பாரதிராஜாவின் வீட்டுக்கு தெரியவந்தது. அவர்கள் பாரதிராஜாவை கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாரதிராஜா சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டார். 

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாரதிராஜா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×