என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young men"
ராமநாதபுரம்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் செலுத்தப்பட்ட ரத்தம், அவருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அந்த ரத்தம் ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என தெரியவந்தது.
தானமாக பெறப்பட்ட ரத்தத்தை முறையாக பரிசோதிக்காத ரத்த வங்கி ஊழியர் வளர்மதி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வரப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கியவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரியவந்தது. அவர் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்த போது தனது உறவு பெண்ணுக்காக ரத்ததானம் வழங்கி உள்ளார்.
ஆனால் அந்த ரத்தம் உறவுப்பெண்ணுக்கு வழங்கப்படாமல் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மதுரையில் ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக சிவகாசி ரத்த வங்கியை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்ததோடு, தான் கொடுத்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இதனை மருத்துவர்கள் தெரிவித்தவுடன் வாலிபர் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண் பாதிப்புக்குள்ளாகி விசாரணை பெரிதானது. வாலிபரிடம் மருத்துவர்கள், போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்து (விஷம்) குடித்து மயங்கினார்.
அவரை பெற்றோர் மீட்டு கமுதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதை அறிந்ததும் மனிதாபினமானத்தோடு, ரத்த வங்கிக்கு சென்று தானாக முன்வந்து அதனை தெரிவித்த எனது மகனை, தற்கொலை முடிவுக்கு மற்றவர்கள் தள்ளியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது என்று வாலிபரின் தந்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரை பலரும் சந்தித்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மனவேதனைக்கு ஆளான அவர், நான் வாழ விரும்பவில்லை. சாகப் போகிறேன் எனக்கூறி கொண்டு தனது உடலில் பொருத்தப்பட்டு இருந்த மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வாலிபரை பிடித்து வந்து மீண்டும் சிகிச்சையை தொடங்கினர்.
மேலும் வாலிபர் மீண்டும் தற்கொலைக்கு முயலக்கூடும் என்பதால் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த வாலிபர் பாதுகாப்புடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டதும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HIVBlood #PregnantWoman
ஈரோடு:
ஈரோடு திண்டல் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது19). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டார்.
தனது பாட்டி பாதுகாப்பில் மணிகண்டன் வளர்ந்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் ஈரோடு பஸ் நிலையத்தில் சுற்றி வந்து சிறு சிறு திருட்டு சம்பவ செயலில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு மணிகண்டன் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.
பின்னர் மணிகண்டனை ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் அழைத்து திருந்தி வாழுமாறு அறிவுரை வழங்கினார். இதை ஏற்று மணிகண்டன் தான் திருந்தி வாழ்வதாக எஸ்.பி.யிடம் உறுதி கூறினார்.
ஆனால் மணிகண்டனுக்கு யாரும் வேலை கொடுக்க முன் வரவில்லை. இதையறிந்த எஸ்.பி. சக்திகணேசன் மணிகண்டனுக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்ய உதவினார்.
இதையடுத்து தற்போது மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். எஸ்.பி.சக்திகணேசனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். #Fruitbusiness #erodebusstand
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் மனோஜ் (வயது25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அன்று முதல் மனோஜ் மற்றும் தனலட்சுமி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இருந்த போதும் தொடர்ந்து 3 மாதங்களாக 2 பேரும் செல்போனிலேயே பேசி வந்தனர்.
வத்தலக்குண்டுவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அப்போது மனோஜ் திடீரென தனலட்சுமியை தனக்கு பிடிக்க வில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசம் செய்தபோதும் மனோஜ் திருமணம் செய்ய முன்வரவில்லை.
இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சவரியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 27). இவர்களுக்கு பீலா (7), வீக்னா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சவரியப்பன் கர்நாடகாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். பழனியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் தாய் முத்தம்மாள் வீட்டில் தங்கி இருந்தார்.
சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற பழனியம்மாள் மாயமானார். இது குறித்து அவரது தாய் முத்தம்மாள் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (30) என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.
இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே உள்ள வெளிதாங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 33), தொழிலாளி. சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில் உள்ள நாரைகுளம் பகுதியை சேர்ந்த தினகரன் (28). இவர்கள் இருவரும் பாண்டியநெல்லூர் சுடுகாடு அருகே உள்ள மதுபானகடையில் தனித்தனியே மதுகுடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது சாலையோரத்தில் இருந்த கிணற்றில் இருவரும் விழுந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவர்களை மேலே தூக்கி வந்தனர். அப்போது சாந்தகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினகரனை கைது செய்தனர்.
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமல்ராஜ் (வயது 25). மும்முனி குளக்கரையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலில் வெட்டு காயத்துடன் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.
வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி, ஏட்டுக்கள் முருகன், தட்சணாமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஐந்து கண் பாலம் அருகே சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் முறையான ஆவணம் காட்டாமல் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஓட்டி வந்த பைக் கொலையான கமல்ராஜிக்கு சொந்தமானது என தெரியவந்தது,
மேலும் அவர்கள் விளாநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சாந்தவேல் (35) வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பின்னர் இருவரும் கமல்ராஜை கொலை செய்து மும்முனி குளக்கரையில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் 21ந்தேதி 3 பேரும் கிருஷ்ணாவரம் கூட்டுசாலை அருகே அமர்ந்து மது குடித்தோம். அப்போது மதுவில் போதை பொருளை கலந்து சாந்தவேலுக்கு கொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்த போது அவரது பாகெட்டில் இருந்த ரூ.4 ,500 பணத்தை கமல்ராஜ் திருடி விட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நாங்கள் இருவரும் கமல்ராஜை மது அருந்த அழைத்தோம். ஆயிலவாடி கூட்டுசாலையில் வைத்து மது அருந்தினோம். பணத்தை திருடியது குறித்து கமல்ராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்தார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கமல்ராஜை காலில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டினோம். பின்னர் பைக்கில் கொண்டு வந்து மும்முனி குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும்படி போட்டு சென்றால் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நினைத்து போட்டு சென்று விட்டோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
சாமுவேல், சாந்தவேல் இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பத்தூரில் உள்ள ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சக்தி, தச்சு தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 30). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமல் இருந்தனர்.
ஆனால் ஜெயக்குமாரின் மனைவி கனிமொழி மட்டும் அவரது வீட்டிற்கு தெரியாமல் சக்தியின் மனைவி விஜயாவிடம் பேசி வந்தார். இந்த தகவல் ஜெயக்குமாரின் குடும்பத்தினருக்கு தெரிந்தது. இதன் காரணமாக ஜெயக்குமாருக்கும், கனிமொழிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
மேலும் சக்தி குடும்பத்தினர் சொல்லி கொடுத்துதான் தனது மனைவி தன்னுடன் சண்டை போடுகிறாள் என ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயக்குமார், அவரது தாயார் பத்மினி, தம்பி உதயகுமார் ஆகியோர் கடந்த 15.10.16 அன்று சக்தியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் சக்தியை கையால் தாக்கினார். ஜெயக்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்தியின் வயிற்றில் குத்தினார். இதில் சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். உதயகுமார், பத்மினி ஆகிய 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்