search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ear cut"

    • மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார்
    • 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசம்மாள் (வயது 81). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ராசம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராசம்மாளின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.

    இன்று காலை ராசம்மாள் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூரில் முன்விரோத தகராறில் வாலிபரின் காதை அறுத்த 2 தொழிலாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    ஆறுமுகநேரி:

    ஆத்தூர் அருகே உள்ள முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பூவண் மகன் மாரியப்பன் (வயது 28). கூலித்தொழிலாளி.

    இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வண்ணமுத்து (35). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாரியப்பன் முக்காணி மெயின் பஜார் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் வழிமறித்து மாரியப்பனை தாக்கினர். பின்னர் கத்தியால் குத்தி அவரது காதை அறுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்து கூலித்தொழிலாளிகளான வண்ணமுத்து, சின்னதம்பி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×