search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகராறு"

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
    • மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், டெல்லி சீமாபுரி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

    இவர்களது திருமணம் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற இருந்த நிலையில் மணமகள் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.

    அதன்படி டெல்லியில் இருந்து இரவு 8 மணி அளவில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


    இந்நிலையில் மணமகனின் வயதான பாட்டி உட்காருவதற்காக ஒரு நாற்காலி கேட்டுள்ளார். ஆனால் மணமகளின் உறவினர்கள் அவருக்கு நாற்காலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதுபற்றி பாட்டி மணமகனிடம் முறையிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் பெரிதாகியது. இதையடுத்து மணமகனும் அவரது குடும்பத்தினரும் குழப்பம் அடைந்தனர்.

    அவர்கள் மணமகளிடம் சென்று நீ எங்களுடன் வீட்டுக்கு வந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் மேலும் அதிகரித்தது.

    இதைத்தொடர்ந்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகன் அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருமண வரவேற்புக்காக தாங்கள் செலவழித்த தொகையை தந்த பின்னரே இடத்தை விட்டு போகுமாறு மணமகனின் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறினர்.

    அதன்படி மணமகன் குடும்பத்தினர் நஷ்டஈடு தொகையை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என அப்பகுதியை சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அனுக்ரிதிசர்மா கூறினார்.

    • பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர்.
    • ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத வாலிபர்கள் 2 பேர் அங்கு பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பங்கிற்கு அடிக்கடி வந்து, அங்கு பெட்ரோல் போடும் வேலையில் இருந்த இளம்பெண் நிஷா வயது.21 என்பவரிடம் பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சக ஊழியர்களான தனுஷ் வயது.38, இனியன் வயது.28, இருவரும் அந்த வாலிபர்களிடம் அடிக்கடி இங்கு வந்து பெட்ரோல் போடும் சாக்கில் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று எச்சரித்து உள்ளனர், பெண்ணிடம் பேசும் காட்சி இங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறி அந்த வாலிபர்களை கண்டித்துள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு வாலிபர்களும் எங்கள் ஏரியாவில் பெட்ரொல் பங்க் வைத்து கொண்டு எங்களுக்கே அறிவுரை சொல்கிறாயா? என தகராறு செய்து உறவினர்கள் ஆண்கள், பெண்கள் என 20 பேர் கொண்ட கும்பலுடன் வந்த பங்கில் வேலை செய்பவர்களை சராமரியாக தாக்கினர். அங்கிருந்த கண்ணாடி டோர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியதுடன் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தனுஷ், இனியன், மற்றொரு பெண் ஊழியர் வாசுகி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    காயமடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமாவில் நடக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் 1 மணி நேரம் நடந்த இந்த சம்பவங்கள் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தன. பிறகு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கல்பாக்கம் போலீசார் சி.சி.டி.வி. காட்சி பதிவினை வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும்.
    • இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பெரம்பட்டு பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 40). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (36). வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சமையல் வேலை செய்யும் முருகன் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனை ரேவதி கண்டிப்பதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வரும். அக்கம்பக்கத்தினர் முருகனை சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சமையல் வேலைக்கு சென்ற முருகன், வேலை முடித்து நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் மது குடித்து முழு போதையில் வீட்டிற்கு வந்ததை பார்த்த ரேவதி, இதனை கண்டித்துள்ளார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழித்தால் அவர்களை எவ்வாறு கரை சேர்ப்பது என கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படடு, முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியில் சென்று மீண்டும் குடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பினார். மீண்டும் குடித்துவிட்டு கணவன் வந்ததை கண்ட ரேவதி மேலும் ஆத்திரமடைந்தார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதால், ரேவதியை முருகன் தாக்கினார். மேலும், சமையல் பணியில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ரேவதியின் கழுத்தினை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்ததை கண்ட குழந்தைகள் அலறி அழுதனர். சத்தம் கேட்டு வீட்டிற்குள் வந்த அக்கம்பக்கத்தினர் ரேவதியை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த அண்ணாமலை நகர் இனஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பதை கண்டித்த மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல கணவன் முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்லமுத்து (வயது 35). கடந்த 12-ந் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் பூபதி (20) உட்பட 4 பேர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது குறித்து தட்டி கேட்ட அண்ணாமலை என்பவரை பூபதி தரப்பினர் தாக்கியுள்ளனர்.

    இதை தடுக்கச் சென்ற செல்லமுத்து மற்றும் சிலரை பூபதி தரப்பினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பூபதி, கண்ணு மகன் சுப்ரமணியன், ஏழுமலை மகன் வெங்கடேசன், வேலு மகன் கோவிந்தராஜ் ஆகிய 4 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூபதியை கைது செய்தனர்.

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இவருக்கு முத்துலட்சுமி (35) என்ற மனைவியும், நதியா (14) என்ற மகளும் உள்ளனர். நதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (75) என்பவரும் வசித்து வந்தார். ஈஸ்வரனுக்கு சொந்தமான வயல் இருந்ததால் அதனை பார்த்துக் கொண்டு பசுமாடுகள் வளர்த்து பால் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

    ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடித்துவிட்டு வருவதை தாய் மற்றும் மனைவி கண்டித்துள்ளனர். அவர்களுடன் ஈஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை மனைவி மற்றும் தாய் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அரிவாளால் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்ததும் மனைவி மற்றும் மகள் நதியா ஆகியோர் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான பெரியாண்டி (80) என்பவர் எழுந்து வந்தார். அவரையும் ஈஸ்வரன் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் பெரியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டையும் வெட்டினார். இதைப் பார்த்ததும் மகள் நதியா தடுக்க முயன்றார். இருந்த போதும் அவரது 2 கைகளையும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நதியா மயங்கி விழுந்தார்.

    கையில் அரிவாளுடன் தனக்கு எதிரே வந்த அனைவரையும் வெட்ட முயன்றதால் அவர் அருகில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அவரை பிடித்து கால்களை கட்டினர். அதன் பிறகு நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்ததுடன் மகளையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.
    • விற்பனையாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் அரசு மதுபான கடை உள்ளது.

    அதில் பாலதண்டயுதம் (வயது 50) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி அன்று கடினவயல் நடுக்காட்டைச் சேர்ந்த கோபால் (45) என்பவா் டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்தார்.

    இது குறித்து விற்பனை யாளா் பாலதண்டயுதம் வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபால் (45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர்.

    விருதுநகர்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன்(வயது 35). சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை செல்வதற்காக சங்கரன் கோவில் ரெயில் நிலையத்திற்கு தனது நண்பர் அருண்(34) என்பவருடன் வந்தார். அங்கு வந்த செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் ஏறினர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது பரிசோதகர் சுப்பையா பாண்டியனிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவர் தான் ஆயுதப்படை காவலர் என்பதற்கான விவரங்களை தெரிவித்துள்ளார். பின்னர் அருணிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் இல்லை. அவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு பரிசோதகர் கூறி உள்ளார். ஆனால் சுப்பையா பாண்டியன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இருவரும் மது போதையில் இருப்பதை உணர்ந்து கொண்ட பரிசோதகர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து சுப்பையா பாண்டியனிடம் சமாதானமாக பேசி அருணுக்கு டிக்கெட் வாங்குமாறு கூறி உள்ளனர்.

    ஆனால் சுப்பையா பாண்டியன் அவர்களிடமும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அருணை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். சுப்பையா பாண்டியன் தொடர்ந்து பயணம் செய்தார். இதற்கிடையே சுப்பையா பாண்டியன் ரெயிலில் தகராறு செய்தது குறித்து மதுரை ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருந்த ரெயில்வே போலீசார் சுப்பையா பாண்டியனை ரெயிலில் இருந்து இறக்கி அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அபராதம் விதித்தனர். அவரது நண்பர் அருண் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முன்னிலையில் போலீஸ்காரர், டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயில்வே போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார்.
    • பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓரையூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவர் மினி பஸ் டிரைவர், அதே ஊரை சேர்ந்தவர் இளங்கோ (50), ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளார். இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் மினி பஸ் டைமிங் குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஓரையூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் இளங்கோ, சுரேஷை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பஞ்சாயத்து துணை தலைவர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்தில் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்து பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் கணேச மூர்த்தி-மாரீஸ்வரி தம்பதியினர். நேற்று மாலை வழக்கம்போல் தள்ளுவண்டியில் பலகாரம் செய்து வியாபாரம் நடத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்து அவர்கள் இருவரையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கம் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி அடித்து ஓடினர். அப்போது தள்ளுவண்டி கடை அருகே இருந்த கணேசமூர்த்தியின் சகோதரர் ரமேஷ், அங்கு ஓடிவந்து அரிவாளால் வெட்டியவரை தடுத்து, அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். பின்னர் கணேசமூர்த்தி அந்த அரிவாளை பிடுங்கி அந்த மர்மநபரை வெட்டினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாரீஸ்வரி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பல்லடத்தில் அவர்கள் வசித்து வந்தது மாரீஸ்வரியின் மகன் புஷ்பராஜுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டியில் இருந்து பல்லடத்திற்கு சென்று தனது தாய் மாரீஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்பு மீண்டும் அரிவாள் கலாசாரம் தலை தூக்கியது பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே விருகாவூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன், கலிவரதன், மதுர முத்து ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் ராதா கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆதிமூலம், ராஜி மற்றும் அவரது மனைவி சிவகாமி, மகன் தனுஷ், ஆதிமூலம் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
    • பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் குண்டல சிங்காரம் இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய மகளை பிரசாத் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

    இவர், மஞ்சிரியாலா மாவட்டம் கோடபள்ளி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.

    கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை பிரசாத் சில நாட்களாக திருப்பி கொடுக்குமாறு கமலாவிடம் கேட்டு வந்தார். கமலா பணத்தை தராமல் இருந்தார்.

    இந்நிலையில் பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியது. பிரசாத் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கமலாவை சுட்டார். குண்டு பாய்ந்து கமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    கமலாவை துப்பாக்கியால் சுட்ட பிரசாத்தை பிடித்து கட்டி வைத்தனர்.

    இதையடுத்து சிட்டகபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×