search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men arrested"

    போடி அருகே முன்விரோத தகராறில் தந்தை, மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    போடி அருகே சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது40). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது குமார்பொம்மு (39) என்ற வாலிபர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கணேசன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று அவ்வழியே சென்ற கணேசனை, குமார்பொம்மு வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் உடலை கீறினார்.

    இதனை தடுக்க வந்த கணேசனின் தந்தை மல்லையனும் தாக்கப்பட்டார். 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் பொம்முவை கைது செய்தனர்.

    தடையை மீறி சிவப்பு சுழல் விளக்கை காரில் பொருத்திச்சென்ற 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நொய்டா:

    ஆட்சி, அரசு பதவியில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய கார்களில் பவனி வந்தது உண்டு.

    இப்படி சிவப்பு சுழல் விளக்குகளை காரில் பொருத்துவதற்கு நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில், அரியானா மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் 6 வாலிபர்கள் ஒரு திருமண விழாவில் பந்தாவாக கலந்து கொள்ள நினைத்து சிவப்பு விளக்கை காரில் பொருத்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் பயணம் செய்தனர்.

    ஒரு இடத்தில் அவர்கள் காரை நிறுத்தி செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த கிரேட்டர் நொய்டா போலீசார், அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
    வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உண்டாகி கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் அண்மையில் எச்சரிக்கை செய்து இருந்தனர்.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த்(வயது 25). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்- அப்பில் ஒரு தரப்பு சமூகத்தினரை பற்றி மிரட்டும் வகையில் அவதூறாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த உதயநத்தம் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக்கேயன், இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மனைவியை சேர்த்து வைக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காஞ்சீபுரம் மாவட்டம் இளநகரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் பாபு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    தகராறு முற்றிய நிலையில் பாபுவின் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாபு நேற்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அலுகலகத்தின் முன்பு நின்று கொண்டு, தான் எடுத்து வந்த பெயிண்டு தின்னரை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்ததும் அங்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருச்சியில் 6 பேரின் வங்கி கணக்கை பெற்று கடன் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருச்சி:

    திருச்சி ஒத்தக்கடை புதுதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி தரணி (வயது 25). இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது;-

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாயக்கரை பாளையம் வடக்கு  தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 28)இவர் தனியார் செல்போன் ஷோருமில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் என்னுடைய தனி நபர் அடையாளம், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட  விபரங்களை பெற்றுக் கொண்டார். 

    இதேபோல் மேலும் 6 நபர்களிடம் ஆவணங்களை பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள்அனைத்தும் பயன்படுத்தி ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் நுகர்வோர் கடன் பெற்றுள்ளார். தற்போது அதில் ரூ.3 லட் சத்து 30 ஆயிரம் திரும்ப செலுத்தியுள்ளார். ஆனால் மீதம் உள்ள ரூ.2 லட்சம் பணத்தை திரும்ப செலுத்த வில்லை. அந்த பணத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் இது குறித்து விசாரிக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
    வந்தவாசி அருகே வாலிபரை வெட்டி வீசிய நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் கமல்ராஜ் (வயது 25). மும்முனி குளக்கரையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலில் வெட்டு காயத்துடன் கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

    வந்தவாசி டி.எஸ்.பி பொற்செழியன் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மகாலட்சுமி, ஏட்டுக்கள் முருகன், தட்சணாமூர்த்தி, ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை ஐந்து கண் பாலம் அருகே சப்.இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் முறையான ஆவணம் காட்டாமல் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் ஓட்டி வந்த பைக் கொலையான கமல்ராஜிக்கு சொந்தமானது என தெரியவந்தது,

    மேலும் அவர்கள் விளாநல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சாந்தவேல் (35) வந்தவாசி டவுன் கோட்டை பகுதியை சேர்ந்த சாமுவேல் (25) என தெரியவந்தது. பின்னர் இருவரும் கமல்ராஜை கொலை செய்து மும்முனி குளக்கரையில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டனர்.

    அவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் 21ந்தேதி 3 பேரும் கிருஷ்ணாவரம் கூட்டுசாலை அருகே அமர்ந்து மது குடித்தோம். அப்போது மதுவில் போதை பொருளை கலந்து சாந்தவேலுக்கு கொடுத்து அவர் மயங்கிய நிலையில் இருந்த போது அவரது பாகெட்டில் இருந்த ரூ.4 ,500 பணத்தை கமல்ராஜ் திருடி விட்டார்.

    இதனை தொடர்ந்து கடந்த 24ந்தேதி நாங்கள் இருவரும் கமல்ராஜை மது அருந்த அழைத்தோம். ஆயிலவாடி கூட்டுசாலையில் வைத்து மது அருந்தினோம். பணத்தை திருடியது குறித்து கமல்ராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்தார்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து கமல்ராஜை காலில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டினோம். பின்னர் பைக்கில் கொண்டு வந்து மும்முனி குளக்கரையில் பொதுமக்கள் பார்க்கும்படி போட்டு சென்றால் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் என நினைத்து போட்டு சென்று விட்டோம். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    சாமுவேல், சாந்தவேல் இருவரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    பெரியகுளம் அருகே இடப்பிரச்சினையில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி நேருஜிநகரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது45). இவர் வீடு கட்டும் பணிக்காக ஜல்லி கற்களை குவித்து வைத்திருந்தார். இவரது வீட்டிற்கு எதிரில் வசிக்கும் முனியாண்டி என்பவர் எதற்காக இங்கே ஜல்லி கற்களை கொட்டி வைத்துள்ளாய்? என கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முனியாண்டி கத்தியால் ராஜாமணியை குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த ராஜாமணி கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மகன் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது19). இவர் போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    பின்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலி பீடி பண்டல்களுடன் நின்ற சுரண்டை வாலிபரை கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரபல பீடி நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    பீடி நிறுவனத்தினரும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மேலப்பாளையம் ஆசுரா தெருவில் ஒரு இடத்தில் போலி பீடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 80 பண்டல்களில் போலி பீடிகள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். 

    இது தொடர்பாக சுரண்டை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த நாகராஜன்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    வீட்டின் முன் பைக்கை நிறுத்திய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    பாகாயம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (வயது38). சின்ன அல்லாபுரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் (29). இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இந்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அருள் பைக்கில் சென்று நவாஸ் வீட்டின் எதிரே பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த நவாஸ் என் வீட்டின் எதிரே ஏன் பைக்கை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருள்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவாசின் காது, முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த நவாசை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நவாஸ் பாகாயம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அருளை கைது செய்து வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

    சேலம் அருகே மாட்டின் வாலைப்பிடித்து திருக்கிய தகராறில் வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலத்தை அடுத்த நெய்க்காரப்பட்டியில் உள்ள மூங்கில் குத்து முனியப்பன் கோவிலில் கடந்த 18-ந் தேதி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கோவில் அருகே மாடு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பிரதாப் (வயது 25) என்பவர் மாட்டின் வாலைப்பிடித்து திருகினர். இதைப்பார்த்த சிலர் பிரதாப்பை சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பிரதாப்பின் அண்ணன் குணசேகரன் கொண்டலாம் பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக போலீசார் நெய்க் காரப்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து, குமார், செல்வராஜ், சுரேஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

    கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளத்தை சேர்ந்தவர் சின்னசேட்டு மகன் ரமேஷ் (வயது36). திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டார்.

    இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு வந்தார். திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கடைக்கு சென்று கலர் ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரத்தை விலைக்கு வாங்கினார்.

    அவரது வீட்டுக்கு எந்திரத்தை கொண்டு சென்ற அவர் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை உண்மையான ரூபாய் நோட்டுகள் போல மாற்றினார்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் அருள் மற்றும் போலீசார் இன்று புது பூங்குளம் கிராமத்துக்கு சென்றனர். அப்போது ரமேஷ் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரமேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து 80 கள்ள 100 ரூபாய் நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ரமேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் பகுதியில் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கபட்டதை பார்த்து தானும் அது போல ஈடுபட்ட தாக ரமேஷ் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×