search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது
    X

    முன் விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது

    வீட்டின் முன் பைக்கை நிறுத்திய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    பாகாயம் பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (வயது38). சின்ன அல்லாபுரம் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் (29). இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இந்துள்ளது.

    இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அருள் பைக்கில் சென்று நவாஸ் வீட்டின் எதிரே பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த நவாஸ் என் வீட்டின் எதிரே ஏன் பைக்கை நிறுத்தினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அருள்தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவாசின் காது, முதுகு பகுதியில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த நவாசை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து நவாஸ் பாகாயம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அருளை கைது செய்து வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×