search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "knife cut"

    • முன் விரோத தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த கீழ்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 31). தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர்.

    அதே கிராமத்தை சேர்ந்த கல்யாண சுந்தரத்துக்கும், முரளிக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முரளி சித்தாத்தூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே நின்றிருந்தார்.

    அங்கு வந்த கல்யாண சுந்தரம், முரளிடம் முன் விரோத தகராறு காரணமாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஆத்திரமடைந்த கல்யாண சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென முரளியை வெட்டினார்.

    காயம் அடைந்த முரளியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை தேடி வருகின்றனர்.

    • மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
    • மனைவி ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா? என விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரிய கோமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி ரூபா(38) மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ராஜேஷ்குமார் நேற்று இரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராஜேஷ்குமாரை சரமாரியாக தாக்கியதோடு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    வலி தாங்க முடியாமல் கூச்சுலிட்டபடி ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், படுகாயம் அடைந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ராஜேஷ்குமார் முன்னதாக ஒரு கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்துள்ளார். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்யும் அவரது மனைவி ரூபாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.

    இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. விசாரணையின் போது அவரது மனைவி ரூபா மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா தனது கணவனை ஆள் வைத்து கொலை செய்ய திட்டமிட்டாரா?, அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்த பின்னரே, ராஜேஷ் குமாரை வெட்டியதற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மனநலம் பாதிக்கப்பட்டவர்
    • சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (வயது85). இவர் அதே ஊரில் தனது மகள் அமுதா, மகன் அசோக் ஆகியோருடன் வசித்து வந்தார்.

    அமுதாவின் மகள் தங்கமணி (36) திருமணமாகாதவர். மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணி பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் அனைவரும் வீட்டில் இருந்த நேரத்திலேயே தங்கமணி திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது பாட்டி சின்னம்மாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட தங்கமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூகுள் பே-ல் பணம் இல்லாததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த துத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), பெயிண்டர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மருந்து வாங்குவதற்காக அடுக்கம்பாறைக்கு தனது பைக்கில் வந்தார். அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சக்திவேலை வழி மடக்கினர். கத்தியை காட்டி, சக்திவேலிடம் இருந்த ரூ.500-ஐ வழிப்பறி செய்துள்ளனர்.

    மேலும் செல்போனில் 'கூகுள் பே' வில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் எனக் கேட்டு மிரட்டியதுடன், அவற்றை தங்கள் செல்போன்களுக்கு பரிமாற்றம் செய்யும்படி கேட்டனர்.

    அவர் எனது போனில் பணம் இல்லை என கூறினர். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சக்திவேல் கை மற்றும் தொடை மீது வெட்டினர்.

    வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனையஅடுத்து அங்கிருந்தவர்கள் சக்திவேலை மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (36). இவர் கணியம்பாடி டோல்கேட் அருகேயுள்ள வல்லம் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் டீக்கடையுடன் கூடிய பழக்கடையை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் கணியம்பாடி அடுத்த சின்னபாலம்பாக்கம் பகுதியை சேர்ந்த குமரன்(23) என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பழக்கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் செல்வகுமாரிடம் ஜூஸ் கேட்டுள்ளனர்.

    அப்போது, 4 பேர் கும்பல் சத்தம்போட்டு பேசியுள்ளனர். இரவு நேரம் என்பதால் சத்தம்போடதே என்று கடை உரிமையாளர் செல்வகுமார் கூறியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல், குமரன் மற்றும் கடை உரிமையாளர் செல்வகுமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    கத்தி வெட்டு

    மேலும் பழங்களை வெட்ட பயன்படுத்தக்கூடிய கத்தியை கொண்டு இருவரையும் கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    இதில், குமரன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ரத்த காயங்களுடன் சரிந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த, புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    அதில் 2 பேரையும் கத்தியால் வெட்டியது ஆரணி குன்னத்தூர் பகுதியை சேர்ந்த கோபி (28), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் மற்றும் மகேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கோபியை கைது செய்த போலீசார், தப்பியோடிய மதன் மற்றும் மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் முகிலன் என்ற குணால் (வயது 23), பெயிண்டர். இவர் கடந்த 16-ந் தேதி இரவு 11 மணியளவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பஸ்நிறுத்தம் அருகே நண்பர்கள் சரவணன், சுரேஷ் ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே முகாமை சேர்ந்த பழனி என்ற அர்ஜூனன் (27), மவிஷ் (20) ஆகியோர் திடீரென முகிலனை தகாத வார்த்தைகளால் திட்டிசரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அப்போது மவிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் முகிலனின் தலையில் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவருக்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முகிலன் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பழனி, மவிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    • கடன் தகராறில் பயங்கரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஆகாஷ் (வயது 24), மேகநாதன் என்பவரின் மகன் அஜித் ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அருண்குமார் (24) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.1500 கடனாக கொடுத்து ள்ளனர். அதில் ரூ.1000 அவர் கொடுத்துள்ளார். மீதி ரூ.500 கொடுக்க வேண்டும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஆகாஷ் அருண்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை அன்று மாலை திருப்பி தருவதாக கூறி அனுப்பி வைத்தார்.

    அன்று மாலை ஆகாஷ் தனது செல்போனில் அருண்குமாரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது நான் வெளியே இருப்பதாக கூறி அருண்குமார் போனை துண்டித்துள்ளார். அருண்குமார் எங்கே இருக்கிறார் என ஆகாஷ் விசாரித்ததில் அவர் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து கொண்டு அருண்குமார் வீட்டிற்கு வந்தார். அங்கு பணத்தை கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். பின்னர் வாய் தகராறு முற்றியது.

    அப்போது அவர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அருண்குமாரை தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனை தடுக்க வந்த அருண்குமார் மனைவி காவியா (வயது 21) மற்றும் தங்கை ஐஸ்வர்யா (வயது 16) ஆகியோருக்கு கத்தி வெட்டு விழுந்தது.

    படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து காவியா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அஜித், ஆகாஷ் சிலர் மீது வழக்கு பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • அண்ணன், தம்பி கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே சான்றோர் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் அஜய் (வயது 20).

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார்.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கருணா மகன்கள் வினோத் குமார் (20) அவரது அண்ணன் சக்திவேல் வயது (22) ஆகிய இருவரும் சேர்ந்து அஜயை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அஜயை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விநோத்குமார், சக்திவேல் ஆகியோரை போலிசார் கைது செய்தனர்.

    முன்விரோத தகராறு காரணமாக வெட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத்தகராறில் பயங்கரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு அருகே உள்ள பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன்கள் ஜெயசங்கர்(வயது 45), பாபு(40). இவர்களுக்கு திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே பூர்வீக நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கை கலப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நிலம் எப்டியாவது யாராவது ஒருவருக்கு சொந்தமாக வேண்டும் என்று அவரவர் சதி திட்டம் தீட்டி பகையை வளர்த்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை சுற்றி பாபு முள் வேலி போட்டுள்ளார். இதனை ஜெயசங்கர் தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    தனது தம்பியை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இந்நிலையில், நேற்று மாலை பாபு தனது பைக்கில் ஒடுகத்தூர் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது பைக்கை தடுத்து நிறுத்திய ஜெயசங்கர் நிலத்தை சுற்றி நீ எப்படி முள் வேலி போடலாம், நீ இதோடு ஒழிந்து போ என்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாபுவின் தலையில் வெட்டினார். அப்போது அவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் குமார் ஆகியோரும் சேர்ந்து பாபுவை தாக்கியுள்ளனர்.

    பாபுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பாபுவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஜெயசங்கர், மற்றும் குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து, பாபு கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிந்து லட்சுமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தந்தை மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன் - மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
    • போலீசாார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட அம்பேத் கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 29). இவரது மகள் பிறந்த நாள் விழாவை கடந்த மாதம் 26-ந் தேதி பலூன் கட்டி கொண்டாடினர்.

    இந்தநிலையில் நேற்று காலை தென்னரசு தனது வீட் டில் கட்டி வைத்து இருந்த பலூனை அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார்.

    அப்போது பலூன் ஒன்று எதிர் வீட்டில் வசிக்கும் தமி ழரசன் வீட்டில் விழுந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது தமிழரசன், அவரது மனைவி சாவிதா மற்றும் ராணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தென்னரசுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

    மேலும் தமி ழரசன் தான் மறைத்து வைத்து இருந்த பட்டன் கத் தியால் தென்னரசு தலை மீது வெட்டியதால் படுகாயம் அடைந்தார்.

    அவரை சிகிச் சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து தென்னரசு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீசார் தமிழர சன் சாவிதா மற்றும் ராணி ஆகிய 3 பேர் மீதும் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அம்மனூர் பகுதி சேர்ந்தவர் அருள் (வயது 32). இவர் நேற்று பழனி பேட்டை பகுதியில் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரக்கோணம் மதுரப்பிள்ளை தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான்(34) என்பவர் அருளிடம் வந்து தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்றும் அதனால் உன்னுடைய செல்போனை தருமாறு அருளிடம் கேட்டார்.

    அதற்கு அவர் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரகுமான் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருளை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அருளுக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் இதுகுறித்து அருள் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமானை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த பட்டா கத்தி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
    • விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டீ தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் சக்திவேல் (வயது 54). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தே.மு.தி.க. மனம்பூண்டி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் (48) என்பவர் சக்திவேலை மடக்கி பிடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வெங்கடேசனை கத்தியால் தலையில் வெட்டி இருக்கிறார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு பொதுமக்கள் துணையுடன் சக்திவேலை மடக்கி பிடித்தார். அப்போது பிரபுவுக்கும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக மடக்கி பிடிக்கப்பட்ட சக்திவேலிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அரக ண்டநல்லூர் போலீசில் சக்திவேல் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    ×