search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெயிண்டரை கத்தியால் வெட்டிய திருடர்கள்
    X

    பெயிண்டரை கத்தியால் வெட்டிய திருடர்கள்

    • கூகுள் பே-ல் பணம் இல்லாததால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த துத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 29), பெயிண்டர்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மருந்து வாங்குவதற்காக அடுக்கம்பாறைக்கு தனது பைக்கில் வந்தார். அடுக்கம்பாறை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சக்திவேலை வழி மடக்கினர். கத்தியை காட்டி, சக்திவேலிடம் இருந்த ரூ.500-ஐ வழிப்பறி செய்துள்ளனர்.

    மேலும் செல்போனில் 'கூகுள் பே' வில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் எனக் கேட்டு மிரட்டியதுடன், அவற்றை தங்கள் செல்போன்களுக்கு பரிமாற்றம் செய்யும்படி கேட்டனர்.

    அவர் எனது போனில் பணம் இல்லை என கூறினர். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சக்திவேல் கை மற்றும் தொடை மீது வெட்டினர்.

    வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதனையஅடுத்து அங்கிருந்தவர்கள் சக்திவேலை மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×