என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே தங்கையின் குழந்தையை கொலை செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்4 Jan 2019 2:04 PM GMT (Updated: 4 Jan 2019 2:04 PM GMT)
திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சடையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் (வயது 23) என்ற மகனும், சுபாஷினி (21) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. லோகநாதன், தா.பேட்டை பை-பாஸ் சாலை அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் லோகநாதன் சொத்தை பிரித்து தருமாறு அவரது தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது தந்தை சொத்தை பிரித்து கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் தந்தை -மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சாமிதாஸ், முசிறியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு சுபாஷினி வீட்டிற்கு சென்ற லோகநாதன், சொத்து தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த லோகநாதன், சுபாஷினியின் 1 1/2 வயது குழந்தையான சாதனாஸ்ரீயை கொலை செய்யும் நோக்கத்தோடு தூக்கி தரையில் போட்டார். இதில் குழந்தை பலத்த காயமடைந்தது.
இதையடுத்து குழந்தைக்கு முசிறி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று சாதனாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுகுறித்து சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குபதிந்து, லோகநாதனை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X