search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sisters child death"

    திருச்சி அருகே சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சடையப்பநகர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் (வயது 23) என்ற மகனும், சுபாஷினி (21) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. லோகநாதன், தா.பேட்டை பை-பாஸ் சாலை அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் லோகநாதன் சொத்தை பிரித்து தருமாறு அவரது தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்தார். ஆனால் அவரது தந்தை சொத்தை பிரித்து கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் தந்தை -மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சாமிதாஸ், முசிறியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வந்தார். 

    சம்பவத்தன்று இரவு சுபாஷினி வீட்டிற்கு சென்ற லோகநாதன், சொத்து தொடர்பாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த லோகநாதன், சுபாஷினியின் 1 1/2 வயது குழந்தையான சாதனாஸ்ரீயை கொலை செய்யும் நோக்கத்தோடு தூக்கி தரையில் போட்டார். இதில் குழந்தை பலத்த காயமடைந்தது. 

    இதையடுத்து குழந்தைக்கு முசிறி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று சாதனாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். 

    இதுகுறித்து சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில், முசிறி போலீசார் வழக்குபதிந்து, லோகநாதனை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்து பிரச்சினையில் குழந்தையை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×