search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்விரோதம்"

    • கொடியரசிக்கும் அதே பகுதியை 2 பேருக்கும் முன்விரோதம் இருந்தது.
    • இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நாகப்பட்டினம்;-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மனைவி கொடியரசி (வயது 28).

    இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (23), ரஞ்சித் (22) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகானந்தமும், ரஞ்சித்தும் சேர்ந்து கொடியரசி வீட்டின் அருகே சென்றுள்ளனர்.

    பின்னர் வீட்டில் இருந்த கொடியரசியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கொடியரசி வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், ரஞ்சித் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 41). ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் தோட்டப் பட்ைட சேர்ந்த விஸ்வநாத னுக்கும் முன்விரோத தக ராறு இருந்து வந்தது. சம்ப வத்தன்று விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கபில் தேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விஸ்வநாதன் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விஸ்வ நாதன் மற்றும் கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விஸ்வ நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ் மீதும், கபில்தேவ் கொடுத்த புகா ரின் பேரில் விஸ்வநாதன், பாவாணன் ஆகியோர் மீதும் போலீசார் தனித்தனி யாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது.
    • ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும் இவரது உறவினர் அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக அன்பரசன் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் முத்துக்குமரன் மனைவி ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ரூபி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அன்பரசன், இந்துமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தியாக வல்லி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 47). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமர வேலுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பழனி வேல் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றோர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.
    • இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்ற ராம்குமார் (வயது 30). இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் ரூ.2 ஆயிரம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராம் எந்த வேலை யும் செய்யாமல் ஊதாரித்த னமாக சுற்றிவரும் உனக்கு கடன் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.

    பணம் தராமல் அனுப்பிய கோபத்தில் இருந்த பாலாஜிக்கு இந்த புகார் சம்பவம் கடும் ஆத்திரமடையச் செய்தது. இதனால் ஸ்ரீராமை பாலாஜி கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக பாலாஜி ஸ்ரீராம் எங்கெங்கு செல்கிறார். தனியாக செல்லும் இடங்களை கண்காணித்து திட்டம் தீட்டினார். இதனையடுத்து நேற்று மாலை தனியாக தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் வந்த ஸ்ரீராமை பாலாஜி மற்றும் பாலாஜியின் கூட்டாளி யான கண்டமங்கலம் பகுதி யை சேர்ந்த அய்யப்பன் (28), பிரகாஷ் (25) ஆகி யோர் வழிமறித்து வீச்சரி வாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் சாலையில் சரிந்தார். பின்னர் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து முன்விரோதத்தில் ஸ்ரீராமை கொலை செய்த பாலாஜி மற்றும் பாலாஜி யின் கூட்டாளி களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
    • சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணா ம்புக்கார தெருவை சேர்ந்தவர் காத்தாடி ராஜா (வயது 52) பூ வியாபாரி . இவர் பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (37), வீரமணி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபம் அருகே ராஜா நின்று கொண்டிருந்தார். அங்கு காலை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்களும் நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த கார்த்தி, வீரமணி முன்விரோதத்தை மனதில் கொண்டு ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கார்த்தி, வீரமணி ஆத்திரம் அடைந்து அரிவாளால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காத்தாடி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காத்தாடி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடிய இடத்தில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்தவர் தியாகராஜன், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவரது மகனான இளையராஜா. தி.மு.க பிரமுகர். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளநல்லூர் அருகே விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் இவரை துப்பாக்கியால் சுட்டது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த இளையராஜா தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்ப ட்டது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமை யிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் தே.கோபுராபுரம் அருகே பதுங்கி இருந்த மணவா ளநல்லூரை ஆடலரசு, புகழேந்தி, சரவணன், வெங்கடேசன், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த விஜயகுமார், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சூர்யா, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த அருண்குமார் மற்றும் வெங்கடா ம்பேட்டையை சேர்ந்த சதீஸ்வரன் ஆகிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்படட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், 2 இரும்பு ராடுகள், 1 கத்தி, 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ப ட்டவர்கள் பின்னர் கோ ர்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்க ப்பட்டனர்.

    இதுகுறித்து விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறிய தாவது:- இளையராஜாவின் அண்ணன் நீதிராஜன் மணவாள நல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்த லின்போது ஆடலரசு வின் தாய் மங்கையர்கரசி தேர்தலில் போட்டியிட்டார் அப்போது இளையராஜா தரப்பினருக்கும் ஆடலரசு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இளையராஜா ஆடலரசுவை தாக்கி உள்ளார். இந்த தாக்குதல் அடிக்கடி நடந்துள்ளது. இந்த விளைவின் காரணமாக ஆடலரசு சென்னையில் உணவு டெலிவரி வேலை செய்யும் பாளைய ங்கோட்டை நண்பரான விஜயகுமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி விஜயகுமார் சென்னையில் சலீம் என்பவர் மூலம் பீகாரில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கு 2 துப்பாக்கிகள் மற்றும் 3 புல்லட்டுகளை கடந்த 2 மாதத்திற்கு முன்பு வாங்கியு ள்ளார். திட்டமிட்டபடி ஆடலரசு தரப்பினர் இளைய ராஜாவை துப்பா க்கியால் சுட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, புல்லட் வாங்கி கொடுத்த சென்னையை சேர்ந்த சலீமை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்து ள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்

    • திடீரென கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • தாக்குதலில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன் ( வயது 40).

    இவர் நேற்று இரவு கொள்ளிடத்திலிருந்து மகேந்திர பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஆரப்பள்ளம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிவபாலன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    உடனே காரில் இருந்து மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி, பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை அரிவாளால் தாக்கினர். சிவபாலனும் திருப்பி தாக்கியுள்ளார்.

    இதில் செல்வமணிக்கும், சிவபாலனுக்கும் காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலச்சந்திரனை கைது செய்தனர். செல்வமணிக்கும் சிவபாலனுக்கும் கடந்த 4 வருடங்களாக முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதனால் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ரிஷிவந்தியம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 46). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பிச்சன் மகன் சக்திவேல் என்பவருக்கும், வீட்டுமனை பிரச்சினை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராமநாதன் அவரது வீட்டுமனையில் மின்இணைப்பு பெற சர்வீஸ் பெட்டியை வைத்துள்ளார். இதை பார்த்த பிச்சன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல், மூர்த்தி ஆகியோர் சர்வீஸ் பெட்டியை சேதப்படுத்தி, இந்த இடம் தங்களுக்கு சொந்தம் என்றும், இடத்தை உரிமை கொண்டாடினால் கொலை செய்து விடுவோம் என்று ராமநாதனை மிரட்டிய தாக தொிகிறது. இதுகுறித்து ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் பிச்சன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.

    • நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்ராஜ், தொழிலாளி. இவர், செம்மான்விளை சந்திப்பில் நின்ற போது அதே பகுதியைச் சேர்ந்த அங்கு வந்து தாக்கி உள்ளார். இதனை பார்த்த அபிலாஷ்ராஜ் தரப்பினர் விரைந்து வந்து ஈவின்ஜெறியை தாக்கினர். இந்த சம்பவத்தில் 2 பேரும் காயம் அடைந்தனர். நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி, ஈவின்ஜெறி மற்றும் அபிலாஷ்ராஜ் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அபிலாஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். ஈவின்ஜெறியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அலங்காநல்லூர் வியாபாரி கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்ததாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி பகுதியில் கீ செயின் தயாரிக்கும் கம்பெனி வைத்து விற்பனை செய்து வருபவர் பாலன் (வயது45). இவர் கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் கம்பெனியை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது எஸ்.வி.டி நகர் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பாலனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த அலங்கா நல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் மதுரை, கோச்சடையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (21), மற்றும் ஆரப்பாளையம், நாக நகரை சேர்ந்த பொன்முருகன் என்ற ஆதி (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.

    பாலனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்த தாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தெரி வித்துள்ளது.

    தொடர்ந்து இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

    • வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.
    • முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள செட்டியார்மடம் வலிய விளை காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 53).

    அதேபகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் மகன் அபீஸ்(20). நேற்று மதியம் முருகன் வீட்டில் இருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அபீஸ், முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி அங்கிருந்த பிரிட்ஜை வெட்டி சேதப்படுத்தி உள்ளார்.

    அதனை தட்டிக்கேட்ட முருகனை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட முருகன் தப்பி ஓடிவிட்டார்.

    அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத அபீஸ், வீட்டில் கட்டப்பட்டிருந்த முருகனின் ஆட்டை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு சென்றுள்ளார்.

    இது குறித்து முருகன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபீஸை கைது செய்தனர்.

    ×