search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது
    X

    முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது

    • முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×