search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  இரு தரப்பினரிடையே மோதல்; 10 பேர் மீது வழக்கு
    X

    கடலூரில் இரு தரப்பினரிடையே மோதல்; 10 பேர் மீது வழக்கு

    • இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் புருக்கீஸ் பேட்டை சேர்ந்தவர் ரேவை (வயது 70). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு மற்றும் சிலர் பணம் கடனாக வாங்கினர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் மூதாட்டி ரேவை மற்றும் விஜயலட்சுமி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி ரேவை கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு மற்றும் 4 பேர் மீதும், ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மூதாட்டி ரேவை மற்றும் 6 பேர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×