search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "river cauvery"

    • கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
    • காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

    அம்மாபேட்டை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், நெரிஞ்சி ப்பேட்டை, கோனே ரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் தேக்க நிலைய கதவணை பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது.

    இதில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகள் வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நீர்மின் தேக்க கதவணைகளிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்தி ரங்கள் மூலம் 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காவிரி யில் வரும் தண்ணீரின் வரத்துக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலை யில் ஆண்டு தோறும் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளி யேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    இதனையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் இன்னும் 15 நாட்களுக்கு நடைபெறுவதால் கடல்போல் தேங்கி இருந்த காவிரியாறு தண்ணீரின்றி பாறை திட்டு களாக காட்சி அளிக்கிறது.

    இதனால் கதவணை நீர்த்தேக்கத்தில் தயாரிக்க ப்படும் மின் உற்பத்தி தற்செயலாக நிறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் கோனேரி பட்டி நீர் மின் தேக்க பகுதிகளான கோனேரிபட்டி படித்துறை, ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, அம்மா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடல்போல் தேங்கி இருந்த காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது.

    இதனால் அதிகளவில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

    கொடுமுடி அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவருடைய மகன் விவேக் (வயது 28). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று முன்தினம் விவேக் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் கொடுமுடி மணல்மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது விவேக் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.

    இதைப்பார்த்த நண்பர்கள், விவேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் விவேக் ஆற்று தண்ணீரில் மூழ்கினார். இதுபற்றி கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய விவேக்கின் உடலை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு சென்று, விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த விவேக்கின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
    காவிரி ஆற்றில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சினம்பூண்டி பகுதியில் காவிரி ஆறு செல்கிறது. நேற்று மாலை இப்பகுதி காவிரி ஆற்றில் அம்பேத்கர் நகர் அருகே ஆண் மற்றும் பெண் பிணங்கள் கரை ஒதுங்கின.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தோகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ் பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ் பெக்டர் கார்த்தி ஆகியோர் விரைந்து வந்தனர். அந்த உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இறந்து கிடந்த ஆணின் ஜட்டியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் கார்டு, வழக்கறிஞர் ஒருவரின் விசிட்டிங் கார்டு ஆகியவை இருந்தது. ஆதார் கார்டு மற்றும் பான்கார்டில் முத்துராஜ் என்ற பெயர் உள்ளது.

    இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆற்றில் இறந்து மிதந்து வந்த இருவரும் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வெவ்வேறு சம்பவங்களில் இறந்து இருவரதும் உடலும் ஒரே இடத்தில் ஒதுங்கியதா? என்றும் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டில் உள்ள செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது இறந்து கிடந்த ஆண் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதி முருக்குப்பட்டி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த முத்துராஜ் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×