search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visit"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #Stalin
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால், ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

    புயல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் தமிழக அரசு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசை பாராட்டினேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக.



    புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கஜா புயலால் எட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு அடைந்துள்ளது. 

    மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் சீரமைப்பு பணியை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். #GajaCyclone #Stalin
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒரு வார காலமாக அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்கிறார். #RamnathKovind ##Vietnam #Australia
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருவார கால அரசுமுறை பயணமாக வரும் நவம்பர் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வியட்நாம் செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது  பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    நவம்பர் 21ம் தேதி வியட்நாமில் இருந்து புறப்படும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியா செல்கிறார். அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்திக்கிறார்.

    மேலும், மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பாராமட்டா பகுதியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழாவில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார் என தெரிவித்துள்ளது.

    ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamnathKovind ##Vietnam #Australia
    சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். #ImranKhaninChina
    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக தேர்வானவர் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான்.

    இவர் அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை பெய்ஜிங் சென்றடைந்த இம்ரான் கானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, தியானன்மென் சதுக்கத்தில் அமைந்துள்ள அரசு அரங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இந்த சுற்றுப்பயணம் உதவும். இதன்மூலம் இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகும் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கானின் இந்த சீனப் பயணம் அவரது முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhaninChina
    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார். #ADMK #EdappadiPalaniswami
    கோவை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.

    விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து ஈச்சனாரி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை(சனிக்கிழமை) காலை கொடிசியாவில் நடைபெற உள்ள ‘உயிர்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். தமிழ் நாட்டில் விபத்து உயிரிழப்பு நடைபெறும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை நகரம் உள்ளது.

    விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தினால் உடல் ஊனம் ஏற்படுவதை தவிர்க்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை நகரின் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களால் ‘உயிர்’ அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘உயிர்’ அமைப்பை தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள், உக்கடம் பெரியகுளம் உள்பட ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை பார்வையிடுகிறார்.

    பின்னர் கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். மாலையில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு கோவை திரும்பி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை நகரின் பல இடங்களில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடி, தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார். #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் நேற்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

    ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே மற்றும் மாநிலங்களவை எம்.பி. சாம்சேர் சிங் மன்ஹாஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்று இருக்கிறார்கள்.



    தஜிகிஸ்தான் போய்ச்சேர்ந்த ஜனாதிபதிக்கு தலைநகர் துஷன்பேயில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான், பிரதமர் கோஹிர் ரசூல்சோடா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுகுர்ஜோன் சுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைநகர் துஷன்பேயில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நினைவிடங்களில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மாரியாதை செலுத்துகிறார்.

    அதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் தேசிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு மாணவர்கள் மத்தியில் ‘பிரிவினைவாதத்தை ஒழிப்போம்; நவீன சமுதாயத்தின் சவால்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் தஜிகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Tajikistan #RamNathKovind
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை முதல் 9-ம் தேதி வரை தஜகிஸ்தான் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானுக்கு அரசுமுறை பயணத்தை நாளை துவங்க உள்ளார். நாளை முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் அந்நாட்டு தஜகிஸ்தான் ஜனாதிபதி எமாமோலி ரஹ்மோன், பாராளுமன்ற சபாநாயகர் ஷுகுர்ஜோன் ஜுஹுரோவ், மற்றும் அந்நாட்டு பிரதமர் கோஹிர் ரசுல்ஜோடா ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தஜகிஸ்தான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் நவீன சமூகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடமும் சந்தித்துபேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன், லோக் சபா உறுப்பினரான சுபாஸ் பம்ரே மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான ஷம்ஷெர் சிங் ஆகியோர் உடன் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan  #RamNathKovind
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷியா நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #VladimirPutin #SushmaSwaraj
    புதுடெல்லி:

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். ரஷ்ய அதிபர் புதினை அரசு மரியாதையுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.



    இதனை அடுத்து, பிரதமரின் இல்லத்துக்கு வந்த புதினை மோடி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர்,  இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்த சந்திப்பில் இந்தியா ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. குறிப்பாக 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #SushmaSwaraj
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
    திருவாரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.

    3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    அதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.

    இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார்.
    திருவாரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனு பெற்று வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 3-ந் தேதி(புதன்கிழமை) கவர்னர் வருகிறார். திருவாரூர் விளமலில் உள்ள சுற்றுலா மாளிகையில் 3-ந் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4.20 வரை தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து கவர்னர் கோரிக்கை மனு பெறுகிறார். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். 
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்த நாட்டின் உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் 8 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ImranKhan #ISIHeadquarters #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், கடந்த மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அந்த வகையில் கடந்த மாதம் 30-ந் தேதி அவர் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு மூத்த மந்திரிகளுடன் சென்றார். அங்கு அவர் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவை சந்தித்துப் பேசினார். உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை தாண்டிய பிரச்சினைகள், ராணுவ நிலவரம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ பாகிஸ்தானிலும், பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரதமரும், ராணுவ தளபதியும் இணைந்து பணியாற்றுவது என உறுதி எடுத்துக்கொண்டனர்” என கூறப்பட்டது.

    இந்த நிலையில், இம்ரான்கான் நேற்று முன்தினம் அந்த நாட்டின் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வாவும், ஐ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரும் வரவேற்றனர்.

    இம்ரான்கானுடன் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி, ராணுவ மந்திரி பர்வேஸ் கட்டாக், தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி, உள்துறை ராஜாங்க மந்திரி ஷெர்யார் அப்ரிடி ஆகியோரும் சென்றிருந்தனர்.

    அங்கு இம்ரான்கான் 8 மணி நேரம் இருந்து, ராணுவ தளபதியுடனும், உளவுத்துறை தலைமை இயக்குனருடனும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள், உளவுத்தகவல்கள் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    அப்போது உளவுத்துறையின் செயல்பாடுகளை இம்ரான்கான் மனம் திறந்து பாராட்டினார். குறிப்பாக தேசப்பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவற்றில் உளவுத்துறையின் செயல்பாடுகள் மெச்சத்தகுந்தவை என அவர் கூறினார்.

    இம்ரான்கான் தொடர்ந்து கூறும்போது, “பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும், பாதுகாப்பு படைகள் மற்றும் ராணுவ உளவு அமைப்புகளின் பின்னால் உறுதிபட நிற்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

    இம்ரான்கான், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை நடத்தியது தொடர்பாக தகவல் துறை மந்திரி பவாத் சவுத்ரி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “பிரதமருக்கும், அவருடன் சென்றிருந்த மூத்த மந்திரிகளுக்கும் ராணுவ தளபதியும், உளவுத்துறை தலைமை இயக்குனரும் 8 மணி நேரம் முக்கிய தகவல்கள் அளித்தனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சவால்கள் குறித்தும் அவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது” என கூறப்பட்டு உள்ளது. இம்ரான்கான் அடுத்தடுத்து ராணுவ தலைமையகத்துக்கும், உளவுத்துறை தலைமை அலுவலகத்துக்கும் சென்று ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #ImranKhan #ISIHeadquarters #Pakistan
    வெள்ளம் பாதித்த பகுதிகளில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளாவுக்கு பயணம் செய்யவுள்ளது. #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 370க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு இன்று கேரளா சென்று ஆய்வு நடத்த உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #PonRadhakrishnan
    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை சிவகங்கை வருகிறார்.
    தேவகோட்டை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (29-ந் தேதி) சிவகங்கை வருகிறார்.

    காளையார்கோவிலில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்கும் தினகரன் பின்னர் பனங்குடி, சொக்கநாதபுரம், செம்பனூர், ஆலங்குடி, மானகிரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து தேவகோட்டையில் வடக்கு ஒன்றியம், முள்ளிக்குண்டு ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுகிறார். சாத்தான்கோட்டையில் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்கிறார்.

    இறகுசேரியில் குமார் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்கும் தினகரன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் வீடுகளுக்கு செல்கிறார்.

    டி.டி.வி. தினகரன் சிவகங்கை மாவட்டம் வருவதையொட்டி அவருக்கு மேள,தாளங்கள் முழங்க பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில் அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், தேவகோட்டை நகரச் செயலாளர் கமலக்கண்ணன், கண்ணன் குடி ஒன்றியம் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக், இறகு சேரி குமார், தமிழ்குமரன், கண்ணன், நிலவழகன், செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×