search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பார்வையிட்டார்"

    • மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் வலியுறுத்தல்
    • மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் வியாபாரத்தையும் பார்வையிட்டார்.

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொள்ளும்போது தோவாளை மார்க்கெட் வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். வேளாண் விற்பனைக்குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக் கூட்டு மையத்திலுள்ள மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் எந்திரம், கரித்தூள் தயாரிக்கும் எந்திரம், தேங்காய் பவுடர் தயாரிக்கும் எந்திரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தென்னை மதிப்புக்கூட்டு மையத்திலுள்ள எந்தி ரங்களை இந்த மாத இறு திக்குள் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.தொடர்ந்து, செண்பகரா மன்புதூர் நேரடி கொள் முதல் நிலையத்தை பார்வை யிட்டார். கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் பேசி முடிவெ டுப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பம்ப்செட் மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் திருப்பதிசாரம் கிராமத்தில் மண் ஆய்வுக்கூட வேளாண்மை அலுவ லர்களால் நடத்தப்பட்ட மண் ஆய்வு முகாமில் கலந்துகொண்டு மண் ஆய்வுக்கு மண் எடுக்கும் முறையை பார்வையிட்ட தோடு, மண் ஆய்வுக்கூடம், நடமாடும் மண் ஆய்வுக் கூடம், உரப்பரிசோ தனை நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×