என் மலர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான்"
- பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
காலை நேரத்தில் அந்த அரசு கலை அறிவியல் கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது. வகுப்புகள் ஆரம்பித்து புரொபசர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.
பி.ஏ. வரலாறு வகுப்பில் புரொபசர் சண்முகம் போர்கள் குறித்து மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்திய போர் முறைகள் குறித்து விளக்கினார்.
அப்போது திடீரென எழுந்த பாலாஜி என்ற மாணவன், சார் இப்போதுள்ள நவீன கருவிகள் அப்போது இருந்தால் நீண்ட நாட்களாக போர் நடந்திருக்காது அல்லவா என கேட்டான். அதற்கு, ஆமாம் என சிரித்தவாறே சண்முகம் கூறினார்.
உடனே பாலாஜி, இப்போதுகூட உலக அளவில் உக்ரைன் ரஷியா இடையிலான போர் 3 ஆண்டைக் கடந்தும் நடந்து கொண்டு இருக்கிறதே என கேட்டான்.
அது ஆயுத விற்பனை அரசியல் எனக்கூறிய புரொபசர், இந்தியா பாகிஸ்தான் போர்கள் குறித்து பாடம் எடுத்தார்.
பாலாஜி உடனே எழுந்து, ஆமாம் சார் இந்தியா கூட ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை எடுத்ததே, உலக நாடுகளும் நமக்கு பாராட்டு தெரிவித்ததே என நினைவு கூர்ந்தான்.
ஆமாம், நீ கூறியது சரிதான் என்ற சண்முகம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஏன் நடந்தது என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ம் தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும்.
இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்லது திலகம் என்று பொருள். பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த இந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டன.

அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 28-ம் தேதியிலும், மாநிலங்களவையில் ஜூலை 29-ம் தேதியிலும் விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது என சொல்லி முடித்தார்.
புரொபசரின் விளக்கத்தைக் கேட்ட சண்முகம், வம்பு சண்டைக்குப் போகக்க் கூடாது, வந்த சண்டையை விடக் கூடாது என்பது இதுதானே சார் என கேட்டபடியே, பாடங்களுக்கான குறிப்புகளை எடுக்கத் தொடங்கினான்.
- மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- முதல் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆதிக்கம்
- மலேசியாவை 297 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று துபாயில் தொடங்கியது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் இன்று ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் போட்டியைத் தொடங்கின. அதன்படி இந்திய அணி, யுஏஇயையும், பாகிஸ்தான் மலேசிய அணியையும் எதிர்கொண்டன. முதல் போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 434 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய யுஏஇ அணி தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மறுபுறம், தொடரின் இரண்டாவது போட்டியில் மலேசிய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மலேசியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது.
பின்னர் 346 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மலேசியா, 19.4 ஓவர்களிலேயே 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 297 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானும் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.
இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.
முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன.
- குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாடு.
ஆப்கானிஸ்தான் மீது சமீபத்தில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பாது காப்பு கவுன்சிலில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் தூதர் ஹரிஷ் பேசியதாவது:-
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை நடத்தியதால் அப்பாவி பெண்கள், குழந்தைகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதல்கள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். அப் பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு முழு மரியாதை அளிக்கப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களுக்காக எல்லை தாண்டிய போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆப்கானிஸ் தானுக்கான முக்கிய வழிகளை பாகிஸ்தான் மூடியுள்ளது.
இது வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பயங்கரவாதம் ஆகும். இதுபோன்ற நடவடிக்கைகள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறுவதாகும்.
மேலும் கடினமான சூழ்நிலைகளில் மீண்டும் கட்டியெழுப்பப் போராடும் ஒரு பலவீனமான நாட்டிற்கு எதிரான வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மற்றும் போர்ப்செயல்களுக்கு சமமானவை ஆகும் என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து. துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதேநேரம் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில், இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும்.
- பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் முப்படைகளின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முப்படைகள் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் அதன் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்.
எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் இன்னும் விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும். இதனால் இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது.
எந்தவொரு சுய-ஏமாற்றம் அல்லது அனுமானத்திற்கும் இந்தியா பலியாகக்கூடாது. பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு. ஆனால் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை யாரும் சோதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
- ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
- பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ 2 நாள் பயணமாக இன்றுபாகிஸ்தான் சென்றுள்ளார்.
நூர் கான் விமான தளத்தில் வந்திறங்கிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் வரவேற்றனர். பிரபோவோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் சுபியான்டோவுடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகை தந்துள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அதிபர் பிரபோவோ சுபியான்டோ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே, ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு அப்போதைய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்தார். கடந்த ஜூலை மாதம், இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சரும் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து பாதுகாப்புதுறையில் உற்பத்தி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.
- மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
- ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ராணுவங்கள் இடையே எல்லையில் சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து கத்தார் மத்தியஸ்த்தால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் நள்ளிரவில் எல்லையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
சாமன் எல்லை பகுதியில் இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டு மாறி மாறி துப்பாக்கியால் சுட்டனர். அதேபோல் சாமன்- காந்தஹார் நெடுஞ்சாலையில் சண்டை நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதலில் வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மோதலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர். பதானி பகுதியில் ஆப்கானிஸ்தான் படைகள் மோட்டார் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இதற்கு பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆப்கானிஸ்தான் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி ஹுல்லா முஜாஹித் கூறும் போது,"காந்தஹாரின் ஸ்பின் போல்டாக் மாவட் டத்தில் புதிய தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி உள்ளது. இதற்கு எங்கள் படைகள் பதிலடி கொடுத்தன.ஸ்பின் போல்டாக் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பொது மக்களை குறிவைத்து பாகிஸ்தான் செயல்படுகிறது" என்றார்.
மோதல் காரணமாக இரு நாட்டு எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
- அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
- இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது.
பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. மேலும் ராணுவ தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம் முனீரை நியமித்து அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார்.
இதுதொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு படை அலுவலகத்திற்குப் பொறுப்பேற்கும் முனீர் ராணுவத் தளபதியாகவும் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப் படுத்த வழிவகுக்கும்.
இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கீழ் வரும்.
- எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
- இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.
இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
- இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.
நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.
ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.






