டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அறிவிப்பு
Published on

இந்தியா மற்றும் இலங்கையில் 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன.

வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ளது. கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.

இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இயலாது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன் நாங்கள் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்காது என்று பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. .

X

Maalai Malar
www.maalaimalar.com