search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுப்பயணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர், தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?
    • பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

    சென்னை, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர், இப்போது அடிக்கடி வருகிறாரே அதற்கு என்ன காரணம் ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணங்கள் வெறும் வெற்றுப் பயணங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் - வெற்றுப்பயணங்களே!

    பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?

    நிதிதான் மாநிலங்களின் ஆக்சிஜன். அதையே நிறுத்திவிட்டுத் தமிழ்நாடு மேல் பாசமிருப்பது போல் நடிப்பதா?

    ஜல்ஜீவன், பிரதமர் வீடு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்க, அதில் பிரதமர் தனது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது நியாயமா?

    பொய்களால் எங்களை ஒருபோதும் வீழ்த்த முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
    • ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கோவை:

    அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில், இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி தனது ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.

    சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    கோவையில் ஆலோசனை கூட்டம் முடிந்ததும், இன்று மாலை நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அங்கு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் ஜனவரி 24-ந் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:-

    மக்களவை தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைக்கும் பணியை இன்று கோவையில் தொடங்கியுள்ளோம். அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த மாதம் வரை இந்த பணிகள் நடக்க உள்ளது.மேலும் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

    அ.தி.மு.க ஒருங்கிணை ப்பாளராகத் தான் இன்னும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயர் உள்ளது. மக்களவை தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன்.
    • தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கேரள மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குறிப்பாக தனது தொகுதியான வயநாட்டில் மக்களை சந்தித்தும் வருகிறார். திருவாலியில் வலி மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி அவர் பேசியதாவது:-

    கேரளாவின் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு துறை நாட்டிலேயே மிகச்சிறந்த துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் நோய் தடுப்பு சிகிச்சையில் கேரளா ஒரு முன்னோடியாக உள்ளது. தன்னால் இயன்ற உதவிகளை செய்யத்தயாராக இருப்பதாகவும், ஆனால் எம்.பி.யாக இருந்து தனக்கு கிடைத்த நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவும், கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டியதாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மறைந்த முஸ்லீம் லீக் தலைவர் சீத்தி ஹாஜி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வயநாடும், கேரளாவும் தனக்கு 2-வது வீடு போன்றது என்றார். கேரளா மற்றும் வயநாட்டுக்கு நான் எவ்வளவு அதிகமாக வருகிறேனோ, அவ்வளவு அதிகமாக இது எனது வீடு என்று உணர்கிறேன். வயநாடு மக்கள் அனைவரையும் எனது குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதுகிறேன். மேலும் அடுத்த திட்டமாக எனது தாய் சோனியா காந்தியை இங்கு அழைத்துவர உள்ளேன். நான் இங்கு வரும்போது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தொகுதியின் வளர்ச்சிக்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.

    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-பிரதமர் ரிஷிசுனக்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
    • ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷிசுனக் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    11 மற்றும் 12-ந்தேதிகளில் லிதுவேனியாவுக்கு செல்லும் ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் பின்லாந்து நாட்டுக்கு செல்லும் அவர் பின்லாந்து-அமெரிக்க நார்டிக் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    • இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.
    • இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் ஜூலை 12-ந் தேதியும், ஒருநாள் போட்டிகள் ஜூலை 27-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஆகஸ்டு 3-ந் தேதியும் தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதியுடன் இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.

    அதை தொடர்ந்து இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

    அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது.

    ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்ட மும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது.

    அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
    • பல வருடங்களாக விசா பெற முயற்சி செய்த பிறகு இந்தியாவுக்கு வருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். 30 நாட்களில் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் சென்றார்.

    அவர் டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மும்பை, கேரளா மற்றும் பல நகரங்களில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு பலரும் உணவு வழங்குவதையும் காண முடிகிறது.

    தொடர்ந்து கேரளா, ராஜஸ்தானில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள அவரது வீடியோக்களை பார்த்த சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஞ்சி :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

    ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

    இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

    ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் போய்விட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சிவருக்கே நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
    • என்ன நடக்கிறது என்பதே முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை.

    தருமபுரி,

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தருமபுரியில் நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார்.

    ஏற்கனவே துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று எந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. அவரது வெளிநாடு சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

    2000 ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மற்ற மதிப்பீட்டு நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை. இது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே அதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

    கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் போய்விட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சிவருக்கே நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதே முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை.

    எனக்கு நேரமே இல்லை என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்ப்பதற்கு 6 மணி நேரம் செலவிடுகிறார். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

    நீட் தேர்வு, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    மொத்தத்தில் இந்த அரசு போட்டோ சூட் ஆட்சியாகவே இருக்கிறது. மக்களுக்காகவே தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள். இதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களுக்கு தான் பாதிப்பு.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் கேப்டன் விஜயகாந்த் முடிவு செய்வார்.

    இவ்வாறு விஜய் பிரபாகரன் கூறினார்.

    அப்போது கட்சியின் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் குமார், விஜய் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நிலா, கோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று மாணவர்களை பாராட்டினர்.
    • தொலைநோக்கியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் மாணவர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளின் வழி நடத்தலில் ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார்கள்.

    இதன் மூலம் வானில் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியனையும், 3,82,500 கி.மீ. தொலைவில் உள்ள நிலாவின் மேடு பள்ளங்களையும், கோள்களையும், செயற்கை–கோள்களையும், விண்மீன் களையும் மிக அருகில் காணமுடியும்.

    முற்றிலுமாக மாணவர்களால் உருவாக்கப் பட்ட இந்த தொலை நோக்கியை பொதுமக்கள் பயனடையும் வகையில் சீர்காழி சுபம் லிட்டில்ஸ் ஏஞ்சல் பள்ளியில் காட்சி படுத்தப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இரவில் தோன்றிய நிலாவி னையும், கோள்களையும், செயற்கைகோள்களையும் மிக அருகில் கண்டு வியப்புற்று, மாணவர்களை பாராட்டினர்.

    மேலும், சீர்காழி சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வானி யியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட, சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் தொலைநோக்கியுடன் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கொள்ளி டத்தில் உள்ள ஜெயின் சங்க கட்டடத்திலும் தொலை நோக்கி வைத்து பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    11 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்ற குழு இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது.

    இந்த குழுவில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்துக்கு செல்கிறார்கள். அங்கு நடைபெற்று வரும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகளை எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். இரவு கன்னியாகுமரியில் இந்த குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனி படகில் சென்று பார்வை யிடுகிறார்கள்.

    அதன் பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்கள்.

    ×