என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி 2-ம் கட்ட சுற்றுப்பயணம் 7-ந்தேதி ஆரம்பம்- வந்தவாசியில் இருந்து தொடங்குகிறார்
- ஆகஸ்ட் 18-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது.
- தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25ந்தேதி திருப்போரூர் நகரில் தொடங்கி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4-ந் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ளது.
அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தின் விவரங்கள் வருமாறு:-
ஆகஸ்ட் 7 - வந்தவாசி, செய்யாறு
ஆகஸ்ட் 8 - பென்னாத்தூர், போளூர்
ஆகஸ்ட் 11 - திண்டிவனம், செஞ்சி
ஆகஸ்ட் 12 - மைலம், விழுப்புரம், விக்கிரவாண்டி
ஆகஸ்ட் 13 - ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை
ஆகஸ்ட் 17 - பர்கூர், ஊத்தங்கரை
ஆகஸ்ட் 18 - கிருஷ்ணகிரி, ஓசூர்
மூன்றாம் கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






