search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்.ராதாகிருஷ்ணன்"

    • மத்திய அரசின் திட்டங்கள் மக்களை தற்போது நேரடியாக சென்றடைகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்தார்.
    • கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பி னரும், நாடா ளுமன்ற பொறுப்பா ளருமான முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பிரதமர் மோடி தலைமை யில் பா.ஜ.க. அரசு பொறுப் பேற்று 9 ஆண்டுகள் நிறை வடைகிறது. இந்த 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒருமாத காலம் அனைத்து பா.ஜ.க. பொறுப் பாளர்களும் தீவிர பிரசா ரத்தில் ஈடுபட தேசிய தலைவர் நட்டா உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி அனைத்து பொறுப்பாளர்களை கொண்ட குழுக்கள் அமைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களை நோக்கி பிரசாரம் செய்ய உள்ளோம். இந்த பணியில் 16 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். உலகின் வழி காட்டியாக பிரதமர் மோடி வரவேண்டும் என்று அனைத்து நாடுகளும் அவரை பாராட்டுகின்றன.

    கடந்த காலங்களில் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வில்லை. தற்போது மத்திய அரசின் திட்டம் நேரடியாக மக்களை சென்றடைகிறது. இதனால் உலகில் உயர்ந்த நாடுகள் வரிசையில் முதல் 5 இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வளர்ச்சியை நோக்கிய பாதையில் இந்தியாவை பா.ஜ.க. செல்ல வைத்துள்ளது.

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழகத்தில் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மீது தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மத்திய அரசின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்கிறது. கர்நாடகத்தில் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி புதிய அணை கட்டமுடியாது.

    இவ்வாறு கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், விவசாய அணி மாநில செயலாளர் பிரவீன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் ஆத்மா கார்த்திக், மணிமாறன், நாகேந்திரன், கணபதி, ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெய குரு, மாவட்ட பார்வை யாளர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பா.ஜனதா கட்சியால் அல்ல.
    • 3 பிரதமர்கள் உருவாக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் ராகுல். இன்னும் சமூக அமைப்புகள் பற்றி அறியவும் இல்லை.

    சென்னை:

    ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.

    இதுபற்றி பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    அரசியலில் வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த காங்கிரசார் தற்காலிக வேலை வாய்ப்பாக இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள்.

    சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட போது கூட காங்கிரசார் வேலை பார்க்கவில்லை. எல்லாம் மேலே இருப்பவன் (தி.மு.க.) பார்த்து கொள்வான் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள்.

    இப்போதும் ராகுல், எம்.பி. பதவியை தகுதி இழந்ததும் கே.எஸ்.அழகிரி உள்பட 4 பேர் மட்டும் போராட்டம் நடத்தி வேடிக்கை காட்டினார்கள்.

    இன்று 76 இடங்களில் போராட்டம் நடக்கிறது. எப்படியும் 304 பேர் களத்தில் நிற்பார்கள்.

    தற்போது ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பா.ஜனதா கட்சியால் அல்ல. கோர்ட்டு தீர்ப்பால். எனவே போராட வேண்டுமென்றால் ராகுல் காந்தி எந்த சமூகத்தை இழிவாக பேசினாரோ அதே சமூகத்தை எதிர்த்து போராட வேண்டும். அல்லது கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.

    3 பிரதமர்கள் உருவாக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் ராகுல். இன்னும் சமூக அமைப்புகள் பற்றி அறியவும் இல்லை.

    சமூகங்களை பற்றி தெரியவும் இல்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மரியாதைக்குரிய கார்கே போன்ற தலைவர்கள் ராகுலுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மாதிரி பேசக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். இனிமேலாவது ராகுல் திருந்த பார்க்க வேண்டும்.

    பா.ஜனதாவுக்கு இந்த பிரச்சினையால் எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×