search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருகை"

    • கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

    • தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சின்னமனூர் வருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். விழாவிற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அவிநாசி லிங்கம் பல்லைக்கழக துணை வேந்தர் பாரதிஹரிசங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் சேக்மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கருத்தரங்கில் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும்.

    வேதாரண்யம்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையோர பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.

    இந்த ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும் என கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

    • சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார்.
    • வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த பகுதியில் 60 செல்போன் மற்றும் 19 தொலைபேசி டவர்களின் இடங்கள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பான கேசட் ஒன்று திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த கேசட்டில் உள்ள தகவல்களை சேகரிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 5-ந் தேதி கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கோர்ட்டு மூலமாக குஜராத் மாநிலத்திற்கு செல்போன் டவர்கள் தொடர்பான கேசட் அனுப்பப்பட்டது.

    அந்த கேசட் தந்தால் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு உதவும். அதில் இருக்கும் தகவல்களை கொண்டு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அதனை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனை ஏற்று, குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்தில் உள்ள கேசட் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது ஒரு வருடம் ஆகிவிட்டதால் அதனை நேரில் தான் எடுக்க முடியும் என்பதால் குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்குழு வருகிற 26-ந் தேதி திருச்சிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    அவர்கள் திருச்சியில் உள்ள பி.எஸ்.என். அலுவலகத்தில், நேரில் சென்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர். அதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியுள்னர். அதில், வருகிற 11-ந் தேதி காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரும் 11-ந் தேதி சயான் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

    தற்போது இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் பெறப்படும் தகவல்கள் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தன்னிடம் சில ஆவணங்கள் உள்ளதாக கூறி சயான் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததும், அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
    • பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


    விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.

    அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.


    அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    • சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும்.

    கோவை,

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் 2-ந் தேதி கோவை வருகிறார்.

    பீளமேடு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசுகிறார். சேலத்தில் டிசம்பர் 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டை விளக்கும் விதமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

    இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள் கொடிசியா மைதானத்தில் தொடங்கி உள்ளது. அந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் டிசம்பர் 2-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 20 ஆயிரம் இளைஞர் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான பணிகளை மாவட்ட செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் தொடங்கி உள்ளனர்.

    இந்த கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெற உள்ள மாநில இளைஞர் அணி மாநாட்டிற்கான முன்னோட்டமாக அமையும். சேலத்தில் நடைபெறும் மாநாடு இதுவரை நடந்திராத மாநாடாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
    • ரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குழித்துறை, கோதையாறு பகுதிகளில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஆற்றின் கரையோர பகுதிகளில் செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தொடர் மழையால் மேற்கு மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் சானல்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்புகளையும் வெள் ளம் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொது மக்களை பாதுகாத்து கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து போலீஸ் துறையை சேர்ந்த பேரிடர் மீட்பு குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்தனர்.

    நாகர்கோவிலுக்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள மீட்பு குழுவினரை குமரி மாவட்டத்தில் ஏதாவது பேரிடர் ஏற்பட்டால் முன்னேற்பாடு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    • பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
    • சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு

    கோவை,

    எழுத்தாளர் கலைஞர் குழுமூலம் தயார் செய்யப்பட்ட முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு நாளை மறுநாள் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்துவதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.

    அதில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் படைப்புலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த கருணா நிதி தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிணாமங்களைப் போற்றும் வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரின் பன்முக தன்மையை எடுத்துச் சொல்லும் வகை யிலும் அவரது புகழ்பாடும் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த ஊர்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகேயுள்ள முக்கோண பூங்காவில் இருந்து கடந்த 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் 5-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல உள்ள இந்த ஊர்தி, கோவைக்கு நவம்பர் 21-ந் தேதி வருகிறது.

    சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் இந்த அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, கவியருவி, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்க ளுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாபயணிகள் வருகை அதிகளவு உள்ளது.

    இதில் ஆழியாருக்கு உள்ளூர் சுற்று வட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரள உள்பட வெளியூ ர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அதிலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவில் சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 11-ந்தேதியில் இருந்து விடுமுறை என்பதால் ஆழியாரில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

    நேற்று தொடர்ந்து 3 நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அங்கு வந்த பயணிகளின் வாகனங்கள் பூங்கா அருகே உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனால் அடிக்கடி போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் இல்லாத வகையில் 3 நாட்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதுபோல் ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு கடந்த 3 வாரமாக வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கடந்த 3 நாட்களாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து கவியருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    அவர்கள், அருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர்.

    வெகு நாட்களுக்கு பிறகு கவியருவியில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால், தடை விதிக்கப்பட்ட நவமலை வனப்பகுதிக்கு விதிமீறி பயணிகள் செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார்
    • ன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க.வின் 2-வது இளைஞரணி மாநில மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இதனையொட்டி மாநாடு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இளைஞர் அணி மாநாடு விளக்க இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து இளைஞர் அணி மாநாடு விளக்க இரு சக்கர வாகன பேரணியை நாளை மறுநாள் (15-ந்தேதி) தொடங்கி வைக்கிறார்.

    கன்னியாகுமரியில் அதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் பார்வையிட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, பேரூர் செயலாளர் குமரி ஸ்டீபன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை தொடங்கி வைக்க உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 14-ந்தேதி இரவு கன்னியாகுமரி வந்து சேருகிறார். மறுநாள் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைக்கிறார். பின்னர் சிறிது தூரம் அவரும் இருசக்கர வாகன பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பேரணியில் 200 பைக்குகள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள சட்டமன்ற ெதாகுதிகளில் 50 பைக்குகளில் சென்று மாநாடு விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கி விளக்குவர். பின்னர் நவம்பர் 27-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளன்று பைக் பேரணி சென்னை சென்றடையும்.

    • கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.
    • தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன

    திருப்பூர்:

    திருப்பூர் நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. கடும் பனிப்பொழிவால் பனிமலை உருவாகும் நாடுகளை சேர்ந்த பறவைகள் மித தட்பவெப்ப மண்டலமான நம் நாட்டுக்கு வலசை வருகின்றன.கடும் குளிரில், இரை தேடி வாழ முடியாது என்பதால், 4முதல் 6மாதங்கள் வரை நஞ்சராயன் குளத்தில் வந்து தங்கி செல்கின்றன.

    ஒரு வார பயணமாக இங்கு வந்தடையும் பறவைகள், மிதவெப்ப சூழலில் தங்கி இரையெடுத்து, தங்கள் உடலை வலுவாக்கி கொள்கின்றன. கோடை வெப்பம் துவங்கும் போது, மீண்டும் தாய் நாட்டுக்கு சென்று கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன.

    குளிர்பருவம் துவங்கும், அக்டோபர் மாதத்தில் வலசை வரும் வெளிநாட்டு பறவைகள், தற்போது நஞ்சராயன் குளத்தில் தலைகாட்ட துவங்கியுள்ளன. ஏற்கனவே, ஏராளமான உள்நாட்டு பறவைகளும், கூட்டம், கூட்டமாக தங்கியிருப்பதால், பறவைகள் சரணாலயம் இப்போதிருந்தே களைகட்ட துவங்கிவிட்டது.

    திருப்பூர் வரும் பறவைகள், கூட்டம் கூட்டமாக தங்கியிருந்து மார்ச் மாதம் வரை குளத்தில் இளைப்பாறும்.அதற்கு பிறகு, தாய்நாடுகளுக்கு திரும்பி செல்லுமென, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-

    பருவநிலை மாற்றம் காரணமாக, பறவைகள் வலசை வருவது சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில், சைபீரியா மற்றும் வட ஐரோப்பிய நாட்டு பறவைகள் திருப்பூர் வரும். திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் கடந்த 14ல் கணக்கெடுப்பு நடத்தினோம்.

    தற்போது 82 வகையான 2,164 பறவைகள் குளத்தில் தங்கியுள்ளன. உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும், 286 வகையான பறவைகள், நஞ்சராயன் குளம் வந்து செல்வது வழக்கம்.

    இம்மாத இறுதியில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் விடுமுறை

    இதேபோல் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தொடர் விடுமுறையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று மாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர். அவர்கள் இங்குள்ள தங்கும் விடுதிகளில் முகாமிட்டு உள்ளனர். ஏற்காட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் முன்பதிவு செய்து அறை எடுத்து சுற்றுலா பயணிகள் தங்கி வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது.

    விடுதிகளில் இடம் இல்லை

    இதனிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் அறைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் நேற்று இரவு முன்பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அதில் உறங்கினர்.

    கடும் குளிர்

    தற்போது ஏற்காட்டில் லேசான சாரல் மழையுடன் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அறை கிடைக்காமல் இரவு முழுவதும் காரில் தூங்கியவர்கள் குளிர் தாங்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சில சுற்றுலா பயணிகள் திரும்பி ஊருக்கு சென்று விட்டனர்.

    3 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிய வாய்ப்புள்ளது.

    ×