என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thanga tamilselvan"
தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். அவரிடம் 10-க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தன. அவ்வாறு இருந்தபோதும் தேனி மாவட்டத்துக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நான் சட்டமன்றத்தில் மாவட்டத்துக்கான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பல முறை பேசியுள்ளேன். ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்த கூடிய இடத்தில் இருந்த பன்னீர் செல்வம் தொடர்ந்து தேனி மாவட்டத்தையும், ஆண்டிப்பட்டி தொகுதியையும் புறக்கணித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வளர்ச்சி அடையாததற்கு ஓ.பி.எஸ்.தான் காரணம்.
எங்களுக்கு சின்னம் கிடைக்காவிட்டாலும் தனித்தனியாக ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் அ.ம.மு.க.வுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தற்போது அ.ம.மு.க. பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. இன்றைய அரசியல் களத்தில் புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேரும் பொது மக்கள் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.
மக்களவை தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன் இத்தொகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LSPolls #ThangaTamilselvan #OPS
ஆண்டிப்பட்டி:
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.டி.டி.வி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்து வரும் தங்க தமிழ்ச்செல்வன் கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருப்பதாகவும் இதனால் தான் பெங்களூருவில் சசிகலாவை தினகரன் சந்திக்கும் சமயங்களில் உடன் செல்வதில்லை என்றும் செய்திகள் பரவின.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுபற்றி அவரிடம் மாலைமலர் நிருபர் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நான் தி.மு.க.வில் சேரப் போவதாக சொல்வது கற்பனைக்கு எட்டாதது. அதற்கு வாய்ப்பே இல்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் நான் இருப்பதாக கூறினால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லையே?
எங்களுக்கு அரசியல் நெருக்கடிகள் பாதிப்புகள் வரும் என தெரிந்துதான் இப்போது இருக்கும் தலைமையை பின் தொடர்ந்து வருகிறோம். எனவே எந்த பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் எனக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #TTVDhinakaran #ADMK #DMK
வேடசந்தூர்:
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய, நகர அ.ம.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அங்கேயே இருந்தனர். அப்போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் தற்போது அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர். அதுவும் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா பாணியில் நாங்கள் யாரையும் எதிர் பார்க்காமல் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினோம். ஆனால் கஜா புயலை காரணம் காட்டி தேர்தலை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நிறுத்தி விட்டன.
திருவாரூரில் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதால் அதனை எதிர்கொள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினருக்கு பயம் வந்து விட்டது.
தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னம் கேட்டு மனு அளித்திருந்தோம். ஆனால் அதனையும் தர மறுத்து விட்டனர். இரட்டை இலை சின்னத்தை வைத்துள்ளபோதும் குக்கர் சின்னத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பயப்படுவது ஏன்? வருகிற பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல்களில் அ.ம.மு.க. மகத்தான வெற்றியை பெற்று நிரந்தரமான ஒரு சின்னத்தை பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார். #ThangaTamilSelvan
தேனி மாவட்டம் கம்பத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூரில் பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அறிவித்தது. ஆனால் தற்போது தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லை என தலைமைச்செயலாளர் மற்றும் கலெக்டர் கூறியதாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து தேர்தலை ரத்து செய்துள்ளனர்.
தேர்தல் அறிவித்தாலும் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. எம்.எல்.ஏ. இல்லாததால் அந்த தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
தற்போதைய கள நிலவரப்படி அ.தி.மு.க. தோல்வி அடையும். அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற காரணத்தால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஆனால் தோல்வி பயம் காரணமாகவே அனைத்து கட்சிகளும் தேர்தலை ரத்து செய்ய உதவி உள்ளன.
ஜெயலலிதா பொங்கல் பரிசாக ரூ.100 தான் வழங்கினார். ஆனால் எடப்பாடி அரசு ரூ.1000 வழங்குகின்றனர். அப்படியானால் ஜெயலலிதாவின் ஆட்சியை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி நடத்துகிறார்களா? ஒரு தலைமைச் செயலாளரே முன்னுக்கு பின் முரணாக பேசினால் அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யாது. ஏனெனில் பா.ஜ.க.வின் பேச்சை கேட்டுதான் தேர்தல் ஆணையமே செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #AMMK #ThangaTamilselvan #BJP #ElectionCommission
தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக எதிர்த்து ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். இதில் எங்களுக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதியா? இதை தெளிவுபடுத்ததான் கோர்ட்டுக்கு சென்றோம்.
ஆனால் இப்போது சில அதிகாரிகளிடம் நாங்கள் விசாரித்த போது வேறுவிதமான தகவல்களை சொல்கிறார்கள்.
18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அப்போது எங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காரணம் கேட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாவிட்டால் மாற்று வேட்பாளர்தான் தேர்தலில் நிற்க முடியும். இதனால் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று எடப்பாடி அணியினர் மனக்கணக்கு போடுகிறார்கள்.
இதையும் மீறி தேர்தல் நடந்தால் 10 தொகுதி தேர்தலை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தி விடுவார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் இடைத்தேர்தலில் நின்றால் எங்கள் மனு தள்ளுபடி ஆகுமா? ஆகாதா? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவரும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதற்காக நாங்கள் அனைவரும் சென்னையில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போக வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர். அப்பீல் செய்யாவிட்டால் வேறு கட்சிக்கு சிலர் சென்று விடுவார்கள் என்ற பயமும் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பீல் முடிவை தினகரன் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் நேற்று அ.ம.மு.க. சார்பில் நிலக்கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அறிந்த வரை, ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இட்லி, இடியாப்பம் சாப்பிட்டார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு கூறினார். ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா இட்லி, இடியாப்பம் சாப்பிடவில்லை என்றும், தான் பொய் சொன்னதாகவும் கூறினார். தற்போது ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டதாக, திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.
‘ஸ்லோ பாய்சன்’ கொடுப்பதை கூட அறியாமல் சாப்பிடும் அளவுக்கு எப்போதும் ஜெயலலிதா இருந்தது இல்லை. என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதை ஜெயலலிதா அறிந்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஜெயலலிதா புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்.
எனவே, விசாரணை ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் திண்டுக்கல் சீனிவாசன் தவறாக பேசி இருந்தால் அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan #DindigulSreenivasan
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பசும்பொன்னில் கடந்த 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவின் போது துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் மதியம் 1 மணிக்குச் சென்று மரியாதை செலுத்தினோம்.
அப்போது 8 மாவட்ட மக்கள் துணைப் பொதுச்செயலாளருக்கு வரவேற்பு கொடுத்தனர். தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு நாங்கள் அமைதியாக திரும்பினோம்.
அந்த நேரத்தில் அ.தி.மு.க. கொடிகளை தலையில் மஞ்சள் துணி கட்டியிருந்த சிலர் சேதப்படுத்தினர். எங்கள் கட்சியினர் யாரும் பேனர்களை சேதப்படுத்தவில்லை. அப்படி கிழித்திருந்தால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பிடித்திருக்க வேண்டியது தானே.
அதை விட்டு விட்டு தற்போது போலீசாரின் துணையோடு எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இதில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?
தற்போது நடப்பது மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி. நாங்களும் அ.தி.மு.க. தான். ஜெயலலிதாவின் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் தான் வெற்றி பெற்றோம். ஆனால் தற்போது துரோக கும்பலிடம் இருந்து வெளிவந்து விட்டோம்.
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டு முன்ஜாமீன் பெற்றிருப்பவர்களை கூட கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். தீபாவளி நேரத்தில் திட்டமிட்டு எங்களுக்கு தேவையற்ற தண்டனையை கொடுத்துள்ளனர்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரனிடம் மனு கொடுக்க வந்தோம். அவர் இல்லாததால் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
தற்போதுள்ள மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மைனாரிட்டி அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே தற்போது 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு வேண்டுமானால் ஒரு வேளை இடைத்தேர்தல் நடத்தப்படலாம். மற்ற 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வராது.
பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தான் 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். நாங்கள் மேல்முறையீடு செய்தால் அது நிலுவையில் இருக்கும் என்பதால் தேர்தலை சந்திக்க உள்ளோம்.
மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தேர்தலின் போது அதனை வெளிப்படுத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் ராஜலிங்கம், ஜெயபால் உடனிருந்தனர். #AmmaMakkalMunnetraKazhagam #ThangaTamilselvan #ADMK
ஆண்டிப்பட்டி:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் இன்று ஆண்டிப்பட்டி வந்தார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்கள்.
தினகரனுடன் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் கட்சியினர் பயப்படுகின்றனர். ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருஷநாடு கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை கிடப்பிலேயே போடப்பட்டு பயனற்று உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
தற்போது நடைபெறுகின்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இவற்றை கண்டித்து வருகிற 10-ந் தேதி ஆண்டிப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இதில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்ள உள்ளார்.
ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்ட எங்களை துரோகம் செய்து தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #edappadipalanisamy #opanneerselvam
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்ததால் 18 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பளித்தார். செல்லாது என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் தனது தீர்ப்பை வெளியிட்டார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து 18 தொகுதிகளையும் காலி இடமாக அறிவிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணியை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மதுரையில் கூடி ஆலோசித்தனர். டி.டி.வி.தினகரன் முன்னிலையில் நேற்று அந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வக்கீல்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மூன்றாவது நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்வதா? என்று ஆய்வு செய்தனர். அப்பீல் செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது. என்றாலும் அதற்கு முன்னதாக அப்பீல் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எங்கள் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களான கபில் சிபில், அசோக் சிங்வி ஆகியோரை தொடர்பு கொண்டு எங்களுக்காக சுப்ரீம்கோர்ட்டில் வாதாட ஏற்பாடு செய்து வருகிறார். வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கான மனு தாக்கல் செய்யப்படும்.
ஏற்கனவே 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு 650 பக்கம் உள்ளது. இப்போது 3-வது நீதிபதியின் தீர்ப்பு 450 பக்கம் உள்ளது. இவற்றை டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.
முதல்-அமைச்சரை மாற்றக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக சபாநாயகர் எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சபாநாயகரின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம். இதில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
கர்நாடகத்தில் எடியூரப்பா வழக்கிலும் இதேபோல்தான் நடந்தது. இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி கிடைத்தது. அதேபோல் எங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, சுந்தர் ஆகிய 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால்தான் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார்.
இவர் ஏற்கனவே சொன்ன 2 நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரி என்று பார்த்துதான் தீர்ப்பு கூற வேண்டும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக தீர்ப்பு கூறி உள்ளார். இது விதியை மீறியதாகும்.
இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைத்து வாதாடுவோம். நாங்கள் மேல்முறையீடு செய்தாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் 18 பேரும் மீண்டும் தேர்தலை சந்திக்கவும் தயாராகவே உள்ளோம்.
தினகரனை ஆதரிக்கும் ஒரே காரணத்துக்காக ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உள்ளதாக கேள்விப்படுகிறோம். இவர்கள் 3 பேர் மீதும் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வளவு ஏன்? எங்கள் 18 பேரையும் அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் நீக்க முடியாமல்தான் உள்ளனர். தைரியம் இருந்தால் நீக்கிப் பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #SupremeCourt
மதுரை ஓட்டலில் முகாமிட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து கழக துணை பொதுச்செயலாளர் இன்று எங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது. முன்னதாக தீர்ப்பு குறித்த விபரம் வெளியாகும் முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள இசக்கி ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்கியிருக்குமாறு டி.டி.வி. தினகரன் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, இடம் மாறிய சொகுசு விடுதிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), ஏழுமலை (பூந்தமல்லி) ஆகியோர் வந்தனர்.
இந்த நிலையில் இன்று 4-வது நாளாக எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டிருந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான உமா மகேஸ்வரி இன்று காலை அங்கு வந்தார்.
இதனிடையே டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பானது. கட்சி நிர்வாகிகள் அங்கு வரத்தொடங்கினர். மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா அந்த விடுதிக்கு சென்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். மேலும் அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்கள். நேராக மதுரை செல்லும் அவர்கள் அங்கு டி.டி.வி. தினகரனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
ஏற்கனவே மருது பாண்டியர் நினைவு நாளையொட்டி, சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தங்க தமிழ்ச்செல்வன், ஜான் கென்னடி ஆகிய இருவரும் நேற்றே மதுரை புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #18MLAsCaseVerdict
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்