search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ammk party"

    • டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும்.
    • கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாலுச்சாமி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான சி.சண்முகவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும்போது " அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும் உறுதியாக எடுத்து வருகிறார். தமிழக மக்களுக்கான பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்" என்றார். மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி பேசும்போது, டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழக அரசியல் வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்காக நாம் அயராது உழைக்க வேண்டும் என்றார்.

    இந்தக் கூட்டத்தில் துணை செயலாளர் புல்லட்ரவி, பொருளாளர் முத்துக்குட்டி, இணைச் செயலாளர் வினுபிரியா, துணை செயலாளர் கீதா, பொதுக்குழு உறுப்பினர்கள் நாகேந்திரகுமார், சத்யா, பகுதி செயலாளர்கள் சுகம் வீர.கந்தசாமி, சுதாகர், சிவசக்தி, முருகன், ராஜாங்கம், பாலு, ஹைதர் அலி, முத்துராஜன், நாகேஷ், சதீஷ், ஆனந்த், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் இறை வெங்கடேஷ், தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேப்பூர் ஒன்றிய மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா பெரம்பலூரில் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேப்பூர் ஒன்றிய மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணையும் விழா பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி மற்றும் காடூர் கிராமங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆண்கள் திரளாக ஓபிஎஸ், இபிஎஸ் அணி உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் வேப்பூர் நாகராஜன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் குலோத்துங்கன், ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் செல்வகுமார், ஆலத்தூர் வீரமுத்து, பொது குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, ஜெயக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர் நடராஜன், வேப்பூர் ஒன்றிய துணை செயலாளர் கதிரேசன், நகர செயலாளர் பீமா ரஞ்சித்குமார், இளைஞரணி ஒன்றிய செயலாளர் அருண்குமார், மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்கள் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #admk #edappadipalanisamy #opanneerselvam

    ஆண்டிப்பட்டி:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் இன்று ஆண்டிப்பட்டி வந்தார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்கள்.

    தினகரனுடன் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் கட்சியினர் பயப்படுகின்றனர். ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வரு‌ஷநாடு கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை கிடப்பிலேயே போடப்பட்டு பயனற்று உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

    தற்போது நடைபெறுகின்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இவற்றை கண்டித்து வருகிற 10-ந் தேதி ஆண்டிப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இதில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்ள உள்ளார்.

    ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்ட எங்களை துரோகம் செய்து தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #edappadipalanisamy #opanneerselvam

    ×