search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu Government"

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-2 தேர்வுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்பலூ ரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணைய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள குரூப்-2ல் பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு 4 மையங்களில் 5 ஆயிரத்து 986 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    இத்தேர்வுக்கு 21 முதன்மை கண்காணிப்பாளர், 4 நடமாடும் குழுக்கள் மற்றும் 2 பறக்கும்படை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தேர்வு நடை பெறும் நாளன்று போட்டித்தேர்வாளர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும், தேர்வு நடை பெறும் மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மேலும் தேர்வு எழுதுவோர் எந்தவித இடையூறும் இன்றி தேர்வு எழுத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் உறுதுணையாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் மற்றும் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. #TNGovernment #Holidays
    சென்னை:

    தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:-




    தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் இவ்விடுமுறை நாட்கள் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி மற்றும் மிலாதுன் நபி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது. #TNGovernment #Holidays

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் கடந்த டிசம்பர் 24 -ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.



    ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற அரசு, விசாரணை ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 மாதத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மூன்றாவது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று ஜிகே வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கும் மற்றும் விற்பனைக்கும் தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மகிழ்ச்சிக்குரியது. மேலும் தீபாவளி மட்டுமல்லாமல் அனைத்து பண்டிகை நாட்களிலும் பட்டாசு வெடிக்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சிவகாசி, விருதுநகர் உள்பட நாடு முழுவதும் பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்கும் நியாயமான, சந்தோசமான தீர்ப்பு. உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பினால் பட்டாசுத் தொழில் மேம்பட்டு, பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவோரும், தொழிலாளர்களும் முன்னேற்றம் காண வேண்டும்.

    நம் நாட்டில் சீனப்பட்டாசு போன்ற வெளிநாட்டின் தயாரிப்பில் கள்ளத்தனமாக விற்கப்படுகின்ற பட்டாசுகளை எவரும் வாங்க முன்வர வேண்டாம். நம் நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை மட்டுமே வாங்கி நம் நாட்டு உற்பத்திக்கும், தொழிலாளர்களுக்கும் நாம் தான் ஆதரவாக இருக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற வேளையில் பட்டாசுக் கடைகளுக்கு உரிய அனுமதி, அங்கீகாரம் கொடுத்து விற்பனைக்கும், வியாபாரத்திற்கும் துணை நிற்கவும், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடான நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    மொத்தத்தில் பட்டாசுத்தொழில் மேம்பட, பட்டாசு உற்பத்தி அதிகரிக்க, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GKVasan
    அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக திமுகவினர் உள்பட 24 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் தலைமையில் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    ‘‘கலெக்சன், கரப்‌ஷன், கமி‌ஷன்’’ என்ற வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தது.

    இதையடுத்து அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் உள்பட 9 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

    இதைப்போல் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி பஸ்நிலையம் பகுதியில் தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், சண்முகம், பழனி, வேலு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    சிலை கடத்தல் வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை நீக்க கோரியது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில், சாமி சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பதிவான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சி.பி.ஐ. சொல்லி விட்டதால், இந்த வழக்குகளை எல்லாம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப் பிரிவு போலீசார் விரைவாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது, மனுதாரர் வக்கீல் யானை ராஜேந்திரன், "சிலை மாயமான வழக்கில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

    ஜாமீனில் அவர் வெளியில் வந்தார். அவரை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவில்லை. எனவே, அவரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.

    இவரது கோரிக்கை குறித்து வருகிற 10-ந்தேதி, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.  #ChennaiHighCourt #IdolSmugglingCases #IdolTheft
    வரியாக கொடுத்த பணம் வீணடிக்கப்படும்போது, அதுகுறித்து அரசிடம் கேள்வி கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை இருப்பதாக ஐகோர்ட் நீதிபதி கூறியுள்ளார். #ChennaiHighCourt
    சென்னை:

    புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட்டின் ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் கடந்த 2011-ம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இந்த விசாரணை ஆணையம், மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கருணாநிதி உள்ளிட்ட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்ததை தொடர்ந்து, நீதிபதி ஆர்.ரெகுபதி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதி யாரையும் நியமிக்கவில்லை என்றும் தலைமை செயலகம் கட்டிட முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விசாரணை ஆணையத்துக்கு எதிராக மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்டு புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று விசாரித்தார்.


    அப்போது, ‘அரசியல் காரணங்களுக்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளினால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதிலும், வரிப்பணம் வீணாகியுள்ளது. ஒரு அரசு கட்டிய சட்டப் பேரவையை மாற்றி அமைப்பதற்கும், அழகுபடுத்துவதற்கும் பணம் வீணடிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு ஆணையம் அமைத்து, அதற்கு ரூ.5 கோடி வரை செலவும் செய்யப்பட்டுள்ளது.

    வரியாக கொடுத்த பணத்தை இவ்வாறு அரசு வீணடிக்கும்போது, அதுகுறித்து கேள்விக் கேட்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். பின்னர், வழக்கை வாபஸ் பெறுவதாக தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு, வாபஸ் பெற அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #MKStalin #Karunanidhi
    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.   #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை மூலம் 31 ஆயிரத்து 200 பள்ளிக் கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது ஆங்கில பள்ளிகள் மோகத்தால் பல பெற்றோர் தனியார் ஆங்கில பள்ளிகளிலேயே மாணவர்களை சேர்க்கிறார்கள்.

    எனவே, அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. பல இடங்களில் 15-க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்கி வருகிறார்கள்.

    ஏற்கனவே அரசு இவ்வாறு குறைவான மாணவர்களை கொண்டு செயல்படும் 800 பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைக்கவும், 33 பள்ளிகளை நிரந்தரமாக மூடவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அரசு இதை மறுத்தது.

    இபபோது 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாநில அரசுகள் நடத்தக்கூடிய பள்ளிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்கிறது. சர்வ சிக்ஷா அபியான், ராஷ்டீரிய மத்திய மிக் அபியான் ஆகிய திட்டங்களின் கீழ் ஏற்கவே பள்ளிகளுக்கு உதவிகளை செய்து வந்தது.

    இப்போது இந்த 2 திட்டங்களையும் இணைத்து சமக்ரா சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின்படி மத்திய அரசு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சம் வரை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிதி உதவிகளை செய்கிறது.

    ஆனால், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது.

    அதில், தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் குறைவாக மாணவர்கள் கொண்ட பல பள்ளிகளை இணைக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    தற்போது 15 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளை மூடுவது அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைப்பது என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த பள்ளிகளுக்கு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி மிகவும் குறைவான மாணவர்களை கொண்ட 1053 பள்ளிகளை அருகில் உள்ள மற்ற பள்ளிகளோடு இணைக்க முடிவு செய்துள்ளனர். 1950 பள்ளிகளை மூடவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    மத்திய அரசின் நிதி கிடைக்காது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மத்திய அரசு மாநில பள்ளிகளுக்கு கழிவறை, மேலாண்மை, புத்தகம், நூலகம் போன்றவற்றுக்கும் திட்டங்கள் மூலம் உதவி வருகிறது.

    இவற்றையும் மாணவர்கள் குறைவாக உள்ள மாநில அரசு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடினால் மற்ற 28 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வரை மத்திய அரசின் நிதி கிடைக்கும்.



    இது சம்பந்தமாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு மறுக்கும் போது, மாநில அரசுகள் பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    அரசு பள்ளிகளில் வசதியும், போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் பெற்றோர்கள் எப்படி அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வருவார்கள் என்று கூறினார்.

    வருங்காலத்தில் 15-ல் இருந்து 100 மாணவர்கள் வரை படிக்கும் 25 ஆயிரம் பள்ளிகளுக்கு கூட மத்திய அரசு நிதி உதவிகளை நிறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது என்பதால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #school
    பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39 காசு, டீசல் ரூ.30.26 காசு என்று வரியை உயர்த்தி கொண்டே இருக்கும் மத்திய, மாநில அரசுக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PetrolDieselPriceHike
    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், பெட்ரோல்-டீசல் விலையை ஏற்றுவதே தங்களின் நித்தியகடன் என்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

    மாநில அரசுகளும், மத்திய அரசுக்கு இணையாக தங்களால் முடிந்த அளவிற்கு விலையை உயர்த்துகிறது.

    பெட்ரோல் - டீசல் விலையை இப்படி நாள்தோறும் உயர்த்தும் நிலைக்கு என்ன காரணம்? கச்சா எண்ணெய் விலை ஏறிவிட்டது, எனவே நாங்கள் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துகிறோம் என்கிறது மத்திய அரசு.

    இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் கதை என்ன? கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2014-ம் ஆண்டில் 145 டாலர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.45.

    இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர்தான். ஆனால் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.83, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.75.

    கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 145 டாலராக இருக்கும்போது பெட்ரோல்- டீசலின் விலை குறைவாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலராக இருக்கும்போது பெட்ரோல்-டீசலின் விலை உயர்வாக இருக்கிறது. இது என்ன பொருளாதாரம்?

    கச்சா எண்ணெய் விலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. அது ஒரு சர்வதேச பிரச்சினையாகவே இருக்கட்டும். பெட்ரோல்-டீசல் விலை அளவில்லாமல் உயர்ந்துக் கொண்டே போனால் பாதிக்கப்படுவது மக்கள் அல்லவா?

    அந்த மக்களை இப்படிப்பட்ட இன்னல்களிலிருந்து காப்பாற்றுவது மத்திய-மாநில அரசுகளின் கடமையல்லவா?

    இன்றைக்கு இருக்கும் மத்திய-மாநில அரசுகள் இதை செய்திருக்கிறார்களா? ஆனால், 2014-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலராக இருந்த போது, வாகனங்களை உபயோகிப்போர் நலன் கருதி, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயினை மானியமாக வழங்கியது.

    அ.தி.மு.க. அரசு பெட்ரோல் மீது விதித்திருந்த 30 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், 1.6.2006ல் 27 சதவிகிதமாக குறைத்தார்.

    அ.தி.மு.க. அரசு டீசல் மீது விதித்திருந்த 25 சதவிகித வரியை, தலைவர் கலைஞர் 1.6.2008ல் 21.43 சதவிகிதமாக குறைத்தார். இன்று 2018-ல் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் தான்.


    ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை 126 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரியை 330 விழுக்காடும் உயர்த்தியுள்ளது. ஆக மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், டீசலுக்கு ரூ.15.53-ம் வரி விதித்துள்ளது.

    இந்த வரி விதிப்பின் வாயிலாக கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு ரூ.16.50 லட்சம் கோடி வருவாயாக பெற்றுள்ளது.

    பண மதிப்பிழப்பாலும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பாலும், இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவினை சந்தித்திருப்பதை அடுத்து வரி வருவாய் குறைந்திருக்கிறது.

    இதனை சரிகட்ட, எரி பொருள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தி இருப்பது அறமற்ற செயலாகும்.

    மத்திய அரசின் செயல் இதுவென்றால், நமது மாநில அரசின் நிலை என்ன? 6.5.2017 அன்று பெட்ரோல் மீதான வரியை 27 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. டீசல் மீதான வரியை 21.43 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

    இதனால் இன்று எடப்பாடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20.91-ம், டீசலுக்கு ரூ.19.48-ம் வரியாக விதித்துள்ளது. மத்திய-மாநில அரசுகள் கூட்டாக, பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.40.39-ம் டீசல் மீது ரூ.30.26-ம் வரியாக விதித்திருக்கிறது. இந்தியா ஒரே நாடு, ஆகையால் ஒரே வரி என்கிறது மத்திய அரசு.

    மத்திய அரசு மிக அதிகமாக ஜி.எஸ்.டி. வரியினை 28 விழுக்காடு என்பதை எரிபொருள் மீது விதித்திருந்தால் கூட ஒரு லிட்டர் பெட்ரோல்-டீசல் ரூ.50க்கு கிடைத்திருக்கும்.

    நமக்கே பெட்ரோல்-டீசல் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும்போது, ரிலையன்ஸ் கம்பெனி உற்பத்தி செய்யும் எரிபொருளை, ஒரு லிட்டர் ரூ.35 வீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எந்த வகையான அரசு தர்மம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PetrolDieselPriceHike
    அறுவை சிகிச்சை செய்ததில் டாக்டர்களின் கவனக்குறைவால் 3-வது பெண் குழந்தை பெற்ற பெண் ரூ.10 லட்சம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐக்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ChennaiHighcourt
    சென்னை:

    சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனம் (30). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நாகர்கோவில், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டேன். இதற்கான சான்றிதழை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கியது.

    இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், நான் கருவுற்றுள்ளதாக கூறினார்கள்.

    இது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், கவனக்குறைவாக செய்த குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையினால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எனக்கு 3-வது பெண் குழந்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தது.

    இதையடுத்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கன்னியாகுமரி மாவட்ட குடும்பநல மையத்தின் துணை இயக்குனர், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினேன். என்னை பரிசோதனைக்கு அழைத்தனர்.

    நானும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி, கடந்த மே 7-ந்தேதி, ஜூன் 18-ந்தேதி பரிசோதனைக்கு சென்றேன். என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதுவரை இழப்பீடு வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்யாமல், காலம் கடத்துகின்றனர். எனவே, எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் சுடலையாண்டி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி, சுகாதாரம் மற்றும் குடும்பலநலத்துறை செயலாளர், மருத்துவ கல்வி மற்றும் குடும்பநலத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighcourt
    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், அனுப்பூர் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அம்மா பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, இறகு பந்து விளையாடினார். இதனை தொடர்ந்து அங்கு ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

    இவ்விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் பல்வேறு கிராமங்களில் அம்மாவின் அரசு அமைத்து கொடுத்துள்ளது.


    நம்முடைய மாவட்டம் இன்றைக்கு ஒரு முன்னோடி மாவட்டமாக திகழக் கூடிய அளவிற்கு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்றைக்கு தமிழகத்திலேயே 32 மாவட்டங்கள் இருந்தாலும் நம்முடைய மாவட்டங்களை சேர்ந்தவர் தான் தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு இங்கே நிற்கின்றேன்.

    அம்மாவுடைய நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு உங்களுடைய அன்போடு, உங்களுடைய ஆதரவோடு, இன்றைக்கு தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இருக்கின்ற பொறுப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.

    ஒரு முதல்-அமைச்சர் ஒரு கிராமத்திற்கு வருவார் என்றால் மிக அரிது. நான் ஏற்கனவே பல முறை இந்த பகுதிக்கு வந்து சென்றிருக்கின்றேன். நம்முடைய மாவட்டம் முழுவதும் நான் சென்று வந்திருக்கின்றேன்.

    ஏற்காடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மலை பகுதியும் சரி, அதன் கீழ் இருக்கின்ற கிராம பகுதியும் சரி, பேரூராட்சியில் இருக்கின்ற பகுதிகளும் சரி எல்லா இடத்திற்கும் நான் வந்து சென்றிருக்கின்றேன்.

    2011-ல் அம்மாவுடைய அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது இந்த பகுதிகளில் சாலைகள் எல்லாம் சிறப்பாக அமைத்து கொடுத்திருக்கின்றேன்.

    நான், இங்கே வருகின்றபோது, விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கையை வைத்தார்கள். அதெல்லாம் அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    கிராம புற மக்களுடைய வாழ்வாதாரம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டும். அதுதான் அம்மாவுடைய அரசின் லட்சியம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

    நகரத்தில் வாழ்கின்ற மக்களுக்கு என்ன? என்ன? அடிப்படை வசதிகள் கிடைக்கின்றதோ, அதுபோல் கடைக்கோடி கிராமத்தில் வாழுகின்ற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பது தான் அம்மாவுடைய ஆட்சியினுடைய திட்டம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாய தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

    ஆகவே விவசாய பிரச்சனை எந்த அளவுக்கு கடினமானது என்பது பற்றி நான் உணர்ந்தவன். அதுபோல் விவசாய தொழில் எந்த அளவுக்கு சிரமம் என்பதையும் நன்கு அறிவேன்.

    விவசாய பணியில் ஈடுபடுகின்றது எவ்வளவு துன்பம், கஷ்டம் என்பதை நான் நன்கு அறிவேன். ஆகவே எந்த துறையிலும் இவ்வளவு கஷ்டம் கிடையாது. வெயில், மழையிலே நனைந்து பணியாற்றக் கூடியவன் விவசாயி மற்றும் விவசாய தொழிலாளி ஆவார்கள்.

    ரத்தத்தை வேர்வையாக மண்ணிலே சிந்தி உழைக்கின்றவன் விவசாயி. அப்படி உழைக்கின்ற விவசாயினுடைய நலன் மேம்பாடு அடைய அரசு என்றென்றைக்கும் துணை நிற்கும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை வகுத்து அளிக்கும். எல்லா பகுதிகளிலும் விவசாயம் முன்னுக்கு வரவேண்டும்.

    விவசாயம் செழிப்பாக இருந்தால் தான் நாடு செழிப்படையும். அந்த செழிப்பான ஆட்சி அம்மாவுடைய ஆட்சியிலேயே கிடைக்கும்.

    கிராமம் முன்னுக்கு வரவேண்டும். கிராமத்தில் வாழுகின்ற மக்களுக்கு என்ன? என்ன? தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அந்த திட்டத்தின் மூலமாக கிராம பொருளாதாரம் மேம்பாடு அடைய அரசு வழிவகுக்கிறது.

    வேளாண்மை துறை இந்திய அளவில் தமிழகத்தில் தான் சிறந்து விளங்குகின்றது. வேளாண் உற்பத்தி, உணவு தானிய உற்பத்தி அதிக அளவு உற்பத்தி செய்து தேசிய விருது பெற்ற அரசு அம்மாவுடைய அரசு. எல்லாதுறையிலும் இன்றைக்கு முன்னணி வகித்து கொண்டிருக்கிறது.

    மக்களுடைய குறைகளை போக்குவதே எங்களுடைய லட்சியம். அதற்காக அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும்.

    வாழ்வாதாரம் முன்னுக்கு வர, அடிப்படை வசதிகள் கிராமத்திற்கு வழங்க அம்மாவுடைய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்து சிறப்பான வரவேற்பு அளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    ×