என் மலர்
நீங்கள் தேடியது "environmental protection"
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
சென்னை:
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection