search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "environmental protection"

    • சாயக்கழிவு வெளியேற்றத்தை கட்டுப்படுத்திய ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம்.
    • பைபர் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    சர்வதேச சந்தைகளில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. சீனா, வியட்நாம், கம்போடியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியின் வாயி லாக முன்னோடியாக இருக்கின்றனர்.

    தரமான பருத்தி நூலி ழையில் இருந்து ஆயத்த ஆடை தயாரிப்பதில் இந்தியா மட்டுமே தனித்துவம் பெற்ற நாடாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை காட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலோங்கி யுள்ளது. இதன்கார ணமாக நீடித்த நிலையான சுற்றுச்சூ ழல் பாதிப்பையே விரும்புகின்றனர்.

    எத்தகைய உற்பத்தி தொழிலாக இருந்தாலும் இயற்கை சார் உற்பத்தியாக இருக்க வேண்டும் என்பதே முதல் நிபந்தனையாகவும் இருக்கிறது. சாயக்கழிவு வெளியேற்றத்தை கட்டு ப்படுத்திய ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பம், காற்றாலை மற்றும் சோலார் மின் உற்பத்தி, கழிவுநீரை சுத்திகரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது,

    சமுதாயத்தில் நிரம்பி யுள்ள கார்பன் -டை -ஆக்ஸைடை கிரகித்து, நன்மை செய்யும் மரம் வளர்ப்பு, 'பெட் பாட்டில்'களில் இருந்து பாலியஸ்டர் நூல் தயாரிப்பு, பனியன் உற்பத்தியின் போது கழிக்கப்படும், துணிகழிவை மீண்டும் நூலாக மாற்றி, துணியாகவும், ஆடை யாகவும் மாற்றும் தொழில்நுட்பம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இயற்கை அரணாக கருதப்படும் சாதனைகளை திருப்பூர் நிகழ்த்திக்கொ ண்டிருக்கிறது.

    ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில், கடந்தாண்டு நடத்திய கருத்துக்கேட்பில் 48 சதவீத மக்கள் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய உற்பத்தியை விரும்பு கின்றனர். சுற்றுச்சூழல் சார்ந்த உற்பத்திக்காக 69 சதவீத மக்கள் கூடுதல் விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். அவர்களில் 4 சதவீதம் பேர், 20 சதவீதம் வரையிலான கூடுதல் விலை கொடுக்கவும் இசைவு தெரிவித்துள்ளனர்.

    இயற்கை சார் ஆடை உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டு, கப்பலில் வர தாமதம் ஏற்பட்டால் காத்திருந்து பெற்றுக்கொள்வதாக 48 சதவீதம் பேர் சம்மதி த்துள்ளனர். கப்பலில் வரும் சரக்கை விமானத்தில் அனுப்பினாலும், அதற்கான கூடுதல் விலையை ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். பாரம்பரிய கடை நடத்துவோர் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கும் ஆடையை பெரிதும் மதி ப்பதாகவும், ஒரு ஆடையை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பழக்கம் மாறி பலமுறை உபயோகிக்கவும் பழகிவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கருத்துக்கேட்பு அறிக்கை முடிவுகள் அனைத்தும் திருப்பூர் பின்னலாடை மற்றும் செயற்கை நூலிழை ஆடை வர்த்தகத்துக்கு பிரகாசமான எதிர்காலம் உருவாகியுள்ள தையே காட்டுவதாக தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களில் இருந்து வடமாநிலங்களில் பாலியஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில் பாலியஸ்டர் நூல் மற்றும் பாலியஸ்டர் பேப்ரிக் உற்பத்தி அதிகம் நடக்கிறது.வடமாநிலங்களில் உற்பத்தி யாகும் பேப்ரிக் அதிக அளவு திருப்பூருக்கு வந்து சேர்கிறது. திருப்பூ ரில் இயங்கி வரும் பின்ன லாடை நிறுவனங்கள், குறைந்த உற்பத்தி செலவில் பாலியஸ்டர் பின்ன லாடைகளை வகை வகையாக வடி வமைத்து விற்பனைக்கு அனுப்புகின்றன. பாலியஸ்டர் பின்ன லாடைகளின் ஆயுட்கா லம் அதிகம், பராமரிப்பதும், சலவை செய்வதும் எளிது என்பதால், வாடிக்கை யாளரும் அதிகம் விரும்பி அணிய துவங்கி விட்டனர். தற்போதைய நிலவரப்படி ஆண் மற்றும் பெண்கள் உள்ளாடைகள், நீச்சல் உடைகள், விளையாட்டு ஆடைகள், இரவுநேர ஆடைகள், ஆக்டிவ் உடைகள் என அனைத்து வகையான ஆடைகளும் பாலியஸ்டர் துணியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

    வடமாநிலங்களில் இருந்து வரும் சாய மேற்றிய பாலியஸ்டர் பேப்ரிக் துணியை வாங்கி உடனுக்குடன் ஆடை களாக வடிவமைத்து சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். உள்நாட்டு சந்தைகளை பாலியஸ்டர் பின்ன லாடைகள் ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன. இதுகுறித்து யெஸ் இந்தியா கேன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் கூறியதாவது:- மொத்த தேவையில் 10 சதவீதத்துக்கும் குறைவாக மட்டும் பாலியஸ்டர் பேப்ரிக் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. நேரடியாக பேப்ரிக் வாங்குவதால் நூல் விலை குறித்து கவலையில்லை. தற்போதைய நிலவரப்படி ஸ்பன் மற்றும் பிளமென்ட் ரக பாலியஸ்டர் நூல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    கொரோனாவுக்கு முன்பு இருந்ததை காட்டிலும், திருப்பூரின் பாலியஸ்டர் ஆடை உற்பத்தியும் விற்ப னையும், 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக உறிஞ்சும் தன்மையுள்ள ஆடைகள் உற்பத்தி செய்த பிறகு பாலியஸ்டர் மீதான இமேஜ் அதிகரித்துள்ளது. இனியும் பாலியஸ்டர் ஆடைக்கு மாறாவிட்டால் பனியன் தொழிலில் ஓரம்கட்டப்படும் நிலை உருவாகும்.

    தற்போதைய நிலவரப்படி டில்லி மார்க்கெட்டில் இருப்பதை காட்டிலும் திருப்பூரில் விலை குறை வாக விற்கப்படுகிறது. சாதா ரணமாக 95 ரூபாயில் இருந்தே ஆடைகள் கிடைக்கி ன்றன. பருத்தி துணியைவிட உறிஞ்சும் தன்மை அதிகம் உள்ள பேப்ரிக் ரகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் உற்பத்தி செலவு அதிகமாகும் என்பதால் சாயமேற்றப்பட்ட பேப்ரிக் ,வடமாநிலத்தில் இருந்து வாங்குகிறோம். தற்போது கிலோ 170 ரூபாய்க்கு சாயமிடப்பட்ட பேப்ரிக் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறி னார்.

    நூற்பாலை உரிமை யாளர்கள் கூறுகையில், பாலியஸ்டர் நூல் விலை தினமும் மாறுபடும். ஒரே நாளில் 3 முறை கூட மாறுபடுகிறது. பைபர் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நூல் விலையில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. ஸ்பன் பாலியஸ்டர், 30ம் நம்பர் கிலோ 148 ரூபாய், 40 ம் நம்பர் 158 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளமென்ட் ரகத்தில், 75 'டெனைர்' நூல் கிலோ 125 ரூபாய்க்கும், 150 டெனைர் , 118 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாலியஸ்டர் நூல் விலை எவ்வகையிலும் பாதிக்காது. வடமாநிலத்தில் மட்டுமே பாலியஸ்டர் பேப்ரிக் உற்பத்தியாகிறது என்றனர்.

    இந்தநிலையில் ஒருங்கி ணைந்த ஜவுளிக் கொள்கை தயாரிக்க திருப்பூர் ஜவுளி த்தொழில் அமைப்பு களுடன் தமிழக அரசு ஆலோ சனை நடத்தியுள்ளது.புதிய ஒருங்கிணைந்த ஜவுளி க்கொள்கையை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொ டர்பாக திருப்பூ ரில் ஜவுளி தொழில் அமைப்புகளின் பிரதிநிதி களுடன், கடந்த 5ந் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை, அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரசாத் யாதவ் முன்னிலையில் கமிஷனர் வள்ளலார் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. தொழிலாளர் குடியிருப்பு வசதி, காலாண்டு 'ஓவர்டைம்' நேர நிர்ணயத்தில் சலுகை, திறன் வளர்ப்பு பயிற்சி, தொழிலாளருக்கான போக்கு வரத்து வசதி, வங்கிகளின் பேசல் - திட்ட குளறுபடியை தீர்ப்பது, சாய ஆலைகளுக்கு 75 சதவீத மின்கட்டண சலுகை, மத்திய, மாநில அரசு சலுகைகள் பெறும் விதிமுறையில் தளர்வு அளிப்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து ள்ளோம் என்றார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் மாவட்ட அளவிலான பேச்சு, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 319 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 6 முதல் 8, 9 முதல் 12-ம் வகுப்பு வரை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பொய்யாமொழி, செந்தில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.ஆயிரம், 3-ம் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றிப்பெற்ற 18 மாணவ- மாணவிகளுக்கும், அவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஒருநாள் இயற்கை சுற்றுலா அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.   #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    ×