search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi"

    • டெல்லியில் உள்ள 7 தொகுதிக்கும் ஒரேகட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று டெல்லி மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக ராகுல் காந்தி பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பயணத்தின்போது மக்களுடன் அவர் உரையாடினார். மக்களும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்று மோடி பேசியுள்ளார்.
    • தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்.

    ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

    இதனையடுத்து, ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பேசியுள்ளார்.

    இந்நிலையில், "தற்போது மோடி பேசுவது போல ஒரு சாதாரண மனிதர் பேசினால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள்" என்று மோடி பேச்சிற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார்; ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை.

    இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை கடைசியாக பாஜக ஒத்துக்கொண்டுள்ளது.

    ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அவர் பேசியுள்ளார்.

    • இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.
    • பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

    நாடு முழுவதும் 5 கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

    இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து, அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும்.

    22 பில்லியனர்களுக்கு தள்ளுபடி செய்தது போல், தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு விவசாயிகள் மோடியிடம் ஒவ்வொரு முறையும் கேட்கின்றனர்.

    கேட்கும் ஒவ்வொரு முறையும், பிரதமர் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் செய்ய மாட்டார்.

    ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப் போகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
    • தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக காரணம், இந்தியா கூட்டணியின் வியூகம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினார்.

    பேட்டியின்போது கார்கே கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் மிக குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே, அதாவது 328 இடங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.

    இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்தது. இது இந்தியா கூட்டணியின் வியூகத்தின் ஒரு அம்சம் தான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, நாங்கள் தனித்தனியாக குழு அமைத்தோம். அந்த பேச்சுவார்த்தைகளின்படி கூட்டணி அமைந்தது.

    அதே நேரம் மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. அதற்காக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறமுடியாது.

    சோனியா காந்தி தனது வயது காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரம் பிரியங்கா, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு அவரும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள். எங்களின் சொத்து. பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் போட்டியிடவில்லை.

    அவரைப்போல கட்சியின் பல மூத்த தலைவர்களும், தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி, வெற்றி பெற்றபின்னர் எந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம்.

    தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம். இதற்காக நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம். நாட்டின் நலன் கருதி நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

    கர்நாடக மாநிலத்தை பற்றி நான் நன்கு அறிவேன். அங்கு தேர்தல் முடிவுகள் குறித்து என்னால் சரியாக மதிப்பிட முடியும். அதுபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் சாதகமான தகவல்கள் வருகிறது.

    நான் முன்பே கூறியதுபோல், பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு தேவையான எண்ணிக்கை இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.

    இந்தியா கூட்டணி அரசு அமைந்தால், அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம், மக்களை துன்புறுத்துவது எதுவாக இருந்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம், பா.ஜனதா போல் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தமாட்டோம்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதா, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

    இவ்வாறு கார்கே கூறினார்.

    • அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபம் ஈட்டியுள்ளது.
    • மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.

    2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ₹2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ₹7,650 என அதானி நிறுவனம் விற்றுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார். அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று அதானி குழுமம் 3,000 கோடி ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

    குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014 ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த கலோரி அளவை கொண்டிருப்பதால் நிலக்கரியின் தரம் குறைந்திருக்கிறது. இத்தகைய நிலக்கரி விற்கப்பட்டதன் மூலம் அதானி குழுமம் கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

    எனவே, தரம் குறைந்த நிலக்கரியை விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டிய அதானி குழுமத்தின் மிகப்பெரிய மெகா ஊழல் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
    • மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

    நாடு முழுவதும் 5கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 6 மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் தேர்தல் பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி மோடி மீதும் பாஜக மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். பேரணியில் அவர் பேசுகையில், நான் அரசன் இல்லை, பிரதமர் மோடி தான் அரசன். நான் ஒருபோதும் அரசனாக இருக்க விரும்பவில்லை. நான் உங்களது மகன் மற்றும் சகோதரன் மட்டுமே, அரசன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

     

    மோடி ராகுல் காந்தியைக் குறிப்பிடும்போது இளவரசர் என்று கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியை ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோயிலில் உள்ள கடவுளான ஜெகநாதரே மோடியின் பக்தர்தான் என்று பாஜக பிரமுகர் பேசியது சர்ச்சையானது.

    அதுமட்டுமின்றி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோடி, தான் மனிதப் பிறவியே அல்ல என்றும் பரமாத்மாதான் தன்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது, பயாலஜிகளாக தான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.
    • இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது.

    2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.

    2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ₹2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ₹7,650 என அதானி நிறுவனம் விற்றுள்ளது.

    இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதானி நிறுவனத்தின் நிலக்கரி ஊழல் தொடர்பாக தனியார் செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜக ஆட்சியின் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பல வருடங்களாக நடந்து வரும் இந்த ஊழலின் மூலம் மோடியின் நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்

    அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?

    ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்து இந்த ஊழல் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன்.
    • எக்ஸ் தள பதிவை பாராட்டி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதாவது, ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு, `நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி' என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவுடன் கூடிய கருத்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    இதனையடுத்து, பாராளுமன்ற தேர்தலின் தற்போதைய நிலையை அறிந்து காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. ஆதரிக்க தொடங்கி விட்டதோ என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ராகுல் காந்தியின் எளிமையை பாராட்டும் வகையில்தான் இந்த பதிவை வெளியிட்டேன். எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்றார். அவருடைய இந்த பதிவானது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இவரது எக்ஸ் தள பதிவை பாராட்டி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இன்று திடீரென, ராகுலை பற்றி புகழ்ந்த பதிவை செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். ஒருவேளை அ.தி.மு.க. தலைமை கொடுத்த அழுத்தத்தால் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தி குறித்த பதிவை நீக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு சற்று பின்னடைவு இருப்பதாக தகவல்.
    • 6-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் வடமாநிலங்களில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் வைத்திருந்த உறவை தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. முறித்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க. மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் போன்றோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வின் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து பேசியது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வியும் தேர்தல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

    இன்று ராஜீவ்காந்தியின் 33-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் ராகுல்காந்தியின் வீடியோவை பதிவேற்றம் செய்து, அவர் குறித்து புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் நான் பார்த்து, நெகிழ்ந்து, ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி மக்களுடன் மக்களாக சகஜமாக உரையாடுகிறார்.



    • ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மல்லிகார்ஜூன, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
    • நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்தச் சூழலில் தனது தந்தை ராஜீவ்காந்தியுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். மேலும் "அப்பா உங்களது கனவுகள், எனது கனவுகள், உங்களின் ஆசைகள், எனது பொறுப்புகள். உங்களது நினைவுகள் இன்றும், என்றும் எனது நெஞ்சில் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
    • ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி எம்.பி, ராகுல் காந்தி எம்.பி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவும் பங்கேற்றார்.

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ராஜீவ்காந்தி உருவ படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.


    ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21- ந்தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    பிரதமர் மோடி எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் நமது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள் என தெரிவித்துள்ளார்.

    • வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.
    • உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இன்று 5-வது கட்ட வாக்குப்பதிவு. அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் எழுந்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்கிறார்கள் என்பது முதல் 4 கட்டங்களில் தெளிவாகி விட்டது.

    வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சனைகளில் வாக்களித்து வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடனில் இருந்து விடுதலை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்காக வாக்களிக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள், மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.

    அமேதி மற்றும் ரேபரேலி உள்பட நாடு முழுவதும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.


    ×