search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "political"

    அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார். #thirumavalavan #pmmodi

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் மாநாடு தள்ளி வைக்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக மாநாடு நடைபெறும்.

    அம்பேத்கர் படத்திற்கு முன்பு ஒரு இளைஞர் பெண்களை கொச்சைப் படுத்தி பேசி உள்ளார். அவர் யார் என்று தெரியாத நிலையில் பா.ம.க. எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறது.

    அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது.


    அரசியல் உள் நோக்கத் திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளையும் மீறி கர்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    மேகதாது அணையை கட்ட 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டியது பாராட்டுக்குரியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #thirumavalavan #pmmodi 

    புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #MKStalin #Mekedatudam

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.6 கோடி மதிப்பிலான அரிசி, போர்வை, பாய், தண்ணீர் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட தமிழக அரசிடம் போதிய வலிமை இருந்ததால் ராணுவத்தின் உதவி தேவைப்படாமல் இருந்து இருக்கலாம் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். மேலும் அவர் தானாக முன்வந்து ராணுவ உதவி தேவையென்றால் அனுப்புகிறோம் என கூறியதற்கு நன்றி.

    தற்போது டெல்டா பகுதி மக்கள் புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எதிர் கட்சியினர் நிவாரணம் கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தாமல் அண்ணா அறிவாலயத்தில் அரசியல் நடத்துகின்றனர். தமிழக அரசின் புயல் நிவாரண பணிகளை மூடி மறைக்க மேகதாது அணை பிரச்சினையை கிளப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்.

     


    மேகதாதுவில் அணை கட்டுவது கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் தான். கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் பேசி மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் காங்கிரசுடன் உள்ள உறவை முறித்து கொள்வாரா?.

    மேகதாதுவில் அணை கட்ட அ.தி.மு.க. அரசாங்கம் விடாது. இதற்காக தொடர்ந்து அ.தி.மு.க. அரசு போராடும். அ.தி.மு.க.வால் மட்டும்தான் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முடியும். எங்களிடம் 50 எம்.பி.க்கள் உள்ளனர். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #Mekedatudam

    ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன்’ என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அவர் எப்போது அரசியல் களத்தில் குதித்து, புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:- அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்.

    கேள்வி:- சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துக்கு உறுதுணையாக இருக்கும் நீங்கள், அரசியலிலும் உறுதுணையாக இருப்பீர்களா?

    பதில்:- அவர் ஆன்மிக பாதை, அரசியல் பாதை என்று என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.

    கேள்வி:- ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான படம் எது?

    பதில்:- அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரிய பட்டியலே இருக்கிறது.



    கேள்வி:- ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை குறித்து உங்களிடம் விவாதிப்பாரா?

    பதில்:- பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் நாங்கள் கலந்து ஆலோசிப்போம்.

    கேள்வி:- திரை உலகில் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி யார் என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- ஒருத்தர் என்று உண்மையாகவே சொல்லிவிட முடியாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள். எல்லோரும் எங்களுக்கு வேண்டியவர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன்.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LathaRajinikanth #Rajinikanth
    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
    தாராபுரம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மக்களுடனான பயணம் மேற்கொண்டார்.

    தாராபுரம் மகாராணி கல்வி நிறுவனத்தில் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். திறந்த வெளியில் நின்று அவர் பேசியதாவது:

    நான் கல்லூரிகளில் பேசக்கூடாது என கூறி மேடை கொடுக்க மறுத்து தடை விதிக்கிறார்கள். மாணவர்கள் திறந்த வெளியில் நிற்கிறீர்கள். அதனால் தான் நானும் திறந்த வெளியில் நின்று பேசுகிறேன்.



    நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் பங்கு அரசியலுக்கு தேவை.

    நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும்.

    மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது. அதனை மறந்து விடாதீர்கள்.

    நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி டி.வி.யில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாசும், சினிமாவும் எனக்கு புகழை தேடி தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பொன்னிவாடி எல்லப்பாளையம் சென்றார். அங்குள்ள நல்ல தங்காள் அணையில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை உள்ளது. கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    நான் மட்டும் லஞ்சத்தை ஒழிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து லஞ்சத்தை ஒழிக்க வந்துள்ளேன். நீங்கள் சேர்ந்தால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றார்.


    நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று திருச்சியில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thirumavalavan #neet
    திருச்சி:

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவாக, அவரின் சொந்த ஊரான குழுமூரில் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்திறப்பு விழா இன்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.

    விழாவில் ஏராளமான ஜனநாயக சக்திகள் கலந்து கொள்கின்றன. அனிதாவின் நினைவாக அறக்கட்டளையும் தொடங்கப்படுகிறது. நீட்தேர்வினை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு மத்திய அரசின் ஆதிக்கத்தையும், மாநில அரசின் கல்வி அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே நீட் தேர்வை உனடடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுவாக போட்டி தேர்வுகள் என்றால் மாணவர்கள் அதனை எதிர்கொள்ள தயாராகின்றனர். ஆனால் நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ்தேசிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களினால் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் பலன் பிற்காலங்களில் தெரியும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆலையினை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆலை நிர்வாகம் செய்த மேல்முறையீட்டில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழர் அல்லாத ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

    தமிழகத்தில் உள்ள நீதிபதியையோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியையோ நியமனம் செய்திருக்கலாம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அழுத்தம் எந்த அளவில் உள்ளது என்பது தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் இதற்கு ஆதரவாக செயல்படுகிறது.

    முக்கொம்பு மேலணையில் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கிடையே கொள்ளிடம் அணை இடிந்துள்ளது. இது குறித்து அரசு, முக்கொம்பு அணையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதகுகள் உடைந்ததற்கான காரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆற்றில் மணல் அள்ளியதே அணை இடிந்ததற்கான காரணம் என சுற்றுச்சூல் வல்லுணர்கள் கூறுகின்றனர்.
     
    இந்த தொடர் மணல் கொள்ளையினால் கல்லணையும் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 100 சதவீதம் அரசியல் ஈடுபாடு உள்ளவர். அவரின் இரங்கல் கூட்டத்தில் அரசியல் கருத்து மரபுகள் நடந்திருப்பது இயல்பானது. கலைஞர் அனைத்து இடங்களிலும் அரசியல் தாக்கத்தினை பதிவு செய்தவர். 

    நெல்லையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், வி.சி.க. சார்பில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    தற்போது நடைபெற்ற தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்திலும் அதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பூரண குணமடைந்து அரசியல் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neet
    ஓய்வுக்குப் பின் இடம் தேவை என்பதால் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். #DrKrishnasamy

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் புதிய தமிழம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில் 2 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவது தேவையற்ற செலவு.

    மேலும் அந்த பகுதியில் நடைபெறும் அரசு வேலை திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையம் 2019-ல் நடைபெறும் பொதுத் தேர்தலோடு இதனையும் நடத்தலாம்.

    தேவேந்திரகுல வேளாள மக்கள் பண்டைய காலத்திலிருந்து இலக்கியங்களில மேகுத நில மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    திராவிட இயக்கங்கள் 70 ஆண்டுகள் மோசடி செய்து அவர்களை பின்தங்கிய சமூகமாக மாற்றியுள்ளது.

    இட ஒதுக்கீடு இல்லாமல் தங்களது திறமையால் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் முன்னேறி வந்துள்ளனர்.

    தேவேந்திரகுல வேளாளர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.

    திருமாவளவன் 2003-04ல் குறிப்பாக ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தபோது தனது பெயரை மாற்றி வெளிநாட்டு தொடர்பில் உள்ளார்.

    அவருக்கு வழங்கப்பட உள்ள முனைவர் பட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியரிடம் ஆய்வறிக்கை குறித்து புகார் அளித்துள்ளோம். இதனை மீறி முனைவர் பட்டம் வழங்கினால் நீதிமன்றம் செல்வோம்.

    நடிகர்கள் ஓய்வுக்குப்பின் மற்றொரு இடம் தேவை என்பதால் அரசியலுக்கு வருகிறார்கள்.

    இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #DrKrishnasamy

    அரசியலுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    கரூர்:

    கரூரில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது அரசியலுக்காகத்தான். ஆளும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சிகள் மீது எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது.

    ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எதிர்கட்சிகள் எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தனக்கு பயமில்லை எனவும், எதையும் சந்திக்க தயாராக உள்ளோம் என முதல்வரே கூறியுள்ளார். ஆகவே இந்த அ.தி.மு.க. அரசு எதற்கும் பயப்படாது.

    முல்லை பெரியாறு அணை பகுதியில் மட்டும் மழை பொழிந்து கேரளாவில் வெள்ளம் ஏற்படவில்லை. பாலக்காட்டிலும் மழை பெய்துள்ளது. பாலக்காட்டில் பெய்த மழை நீர் முல்லை பெரியாறு அணைக்கு வந்ததா?. அங்கு இருக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அரசியலுக்காக இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


    எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஊழல், கமி‌ஷன் நடைபெறுவதாக கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சர்க்காரியா ஊழல் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்கள் நடைபெற்றது.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கீழ் கோர்ட்டில் தான் தி.மு.க. விடுதலை பெற்றுள்ளது. ஆனால் மேல்மட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்களைத்தான் இன்றுவரை கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர். #ADMK #ThambiDurai #EdappadiPalaniswami #Scam
    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    உலக கடல் தினம் மீன்வளத்துறை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இன்று உலக பொம்மைகள் தினம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உலகமே ஒரு நாடகமேடை. இதில் அனைவரும் பொம்மைகள். மனிதர்கள் வெறும் பொம்மைகளாக இல்லாமல் சமுதாயத்திற்கு படைப்பாளிகளாக இருக்க வேண்டும்.

    கடல் தூய்மை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தாலே போதும். மக்கள் மனதில் மாற்றம் தேவை. அதே போல் அனைத்து துறைமுகங்களிலும் சுத்தமாக இருப்பது குறித்து போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலில் பிளாஸ்டிக் கலக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கனிமொழிக்கு காற்று தான் ஞாபகத்திற்கு வரும். ஏனென்றால் அவர் 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்.


    ஒரு படத்தின் வெற்றி ரஜினி, கமல் போன்றோரின் அரசியலை தீர்மானிக்காது. ஒரு தலைவரை ஏற்றுக் கொள்வது என்பது அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணி மற்றும் கொள்கைகள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.

    மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரை மக்கள் அப்படித்தான் ஏற்றுக் கொண்டனர். மத்திய மந்திரியாக இருந்து கொண்டு பொன்.ராதா கிருஷ்ணன் கூறும் கருத்தை ஏற்க முடியாது. அவர் மத்திய அமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாதாரண மனிதர் போல தெருவில் செல்பவர் போல் பேசக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Kaala #Rajinikanth
    நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று பழம்பெரும் நடிகையான கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார். #TNPolitics #KRVijaya
    சேலம்:

    சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் சரணம் பல்லவி என்ற படப்பிடிப்பு தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது.

    இதில் கதாநாயகனாக சேலத்தை சேர்ந்த ரிஸ்வான், கதாநாயகியாக பிரியங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்தை சேலத்தை சேர்ந்த சாய் இளவரசன் இயக்குகிறார். இதில் வில்லனுடைய அக்காவாக பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா நடிக்கிறார்.

    மேலும் திருமணம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யும் வேடத்திலும், காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்.

    மொத்தம் 40 நாட்கள் சேலம், ஏற்காடு, ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் 4 பாடல்கள், 4 சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன.

    இன்று ஊத்துமலை முருகன் கோவிலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட கே.ஆர்.விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் நான் நடிக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதத்தால் படம் வெற்றி பெறும். முன்பை விட தற்போது எல்லோருடைய வாழ்க்கையும் வித்தியாசமாக செல்கிறது. எல்லாமே வேகமாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு படத்தில் சில காட்சிகள் மட்டும் டப்பிங் எடுக்கப்படும். தற்போது படம் முழுவதுமாக டப்பிங்கில் எடுக்கப்படுகிறது.

    மேலும் பல நல்ல நடிகர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். சினிமா என்பது கடல் மாதிரி. இதனை நம்பி நிறைய பேர் பிழைத்து வருகிறார்கள். நடிகை சாவித்திரி கதையை படமாக எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் சினிமாவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் கலைக்கூடம். அவர்கள் ஏராளமான அறிவுரைகளை சொல்லி இருக்கின்றனர்.

    முன்பு போல் படக்கதைகள் வருவதில்லை. தற்போது வேறுவிதமான படக்கதைகள் வருகிறது. ஆனால், நான் கடைசி மூச்சு வரை தொடர்ந்து நடிப்பேன். குஷ்பு, சிம்ரன், விஜய், சூர்யா என ஒவ்வொருவருக்கும் தனி திறமைகள் உண்டு.

    நான் எந்த நடிகருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் இல்லை. நடிகர், நடிகைகள் கிசுகிசு பற்றி எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நானே செத்து போனதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதையும் தாண்டி நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    அரசியல் பற்றி எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அரசியலுக்கு வந்து ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். தற்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. எல்லோருக்கும் அரசியலில் வர உரிமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNPolitics #KRVijaya
    ×