என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "party"
- கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
- கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி துணை மேயர் வக்கீல் தாமரைச்செல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு கட்சியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பன்னீர், சம்பத், செந்தில், கலைஞர், ராஜேஷ், தமிழரசன், சக்தி முருகன், குணத்தொகையன், கலியமூர்த்தி, மணிகண்ட ராஜா, பரசு.முருகையன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கோபி, ஜூன். 27-
ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.
- எஸ்.டி.பி.ஐ. கட்சி கொடியேற்று விழா நடந்தது.
- திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது ஆண்டு ெதாடக்க விழாவையொட்டி திருவாடானை வடக்கு தொகுதி தலைவர் சலாமத் அலி தலைமையில் கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நம்புதாளை எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தின் கொடிகம்பத்தில் கிளை செயலாளர் ஜியாவுதீன், கிழக்கு கடற்கரை சாலையின் கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் துணை தலைவர் சாகுல் ஹமீது, குத்பா பள்ளி கொடிகம்பத்தில் நம்புதாளை நகர் செயலாளர் கலபத்த சகுபர் சாதிக், தொண்டி செக்போஸ்ட் கொடிகம்பத்தில் தொண்டி நகர் செயலாளர் ரிஸ்வான், வட்டாணம் சாலை கொடிகம்பத்தில் தொண்டி நகர் துணை தலைவர் பாதுஷா, கடற்கரை எதிரே மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், தொண்டி அருகே உள்ள ஆர்.எஸ். மங்கலத்தில் புகாரி ஆகியோர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் தொகுதி அமைப்பு செயலாளர் நாசர் அலி, பொருளாளர் அப்துல் மஜீத், சமூக ஊடக அணியின் மாவட்ட செயலாளர் முஜாஹிதீன், தொண்டி மேற்கு கிளை செயலாளர் ஹீசைன், மேலும் அன்சார் அலி, பாதுஷா, ஹாஜா, அஸ்கர், ஹபீப், அர்ஷத், ராவுத்தர் ஆலிம், அப்ரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கட்சே. வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். இவர் மீது நில முறைகேடு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புசாவால் நகர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உல்லாஸ் பாட்டீலும் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய உல்லாஸ் பாட்டீல், பா.ஜனதா கட்சி ஏக்நாத் கட்சேவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், “நீங்கள் (உல்லாஸ் பாட்டீல்) நினைப்பதை நான் கண்டிப்பாக யோசிக்கவில்லை. உங்கள் கட்சியானாலும், எனது கட்சியானாலும், யாரும் ஒரே கட்சியில் இருக்கப்போவதில்லை. ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.
அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டும். அநீதி இழைத்தவர்கள் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வலிமையை புரிந்துகொள்வார்கள்” என்றார்.
இதன்மூலம் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் அளித்த பதிலில், “ நான் பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதில்லை. மேலும் கட்சி மீது அதிருப்தியிலும் இல்லை. எனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமாயின் நான் கட்சி தலைவரிடம் இதுகுறித்து பேசி முடிவெடுப்பேன்” என்றார். #EknathKhadse #BJP
Hey #partypeople out there!! #party has been certified with a U/A!! Da bars are will be opening real soon in a theatre near u @Amma_Creations@TSivaAmma@Premgiamaren@actorshiva@Cinemainmygenes@Actor_Jai@iSanchitaa@ReginaCassandra@moulistic@nivethaPethurai@vasukibhaskarpic.twitter.com/mabrtqp0V3
— venkat prabhu (@vp_offl) December 10, 2018
தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சியில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பா.ஜனதா கட்சியின் தவறான கொள்கையால் மக்கள் மீது தேவையில்லாத சுமை ஏற்பட்டு இருக்கிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.
மேலும் சி.பி.ஐ., அமலாக்க துறை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க நான் முயற்சி எடுத்து வருகிறேன். இதன் மூலம் எந்த பதவிக்கும் வர நான் ஆசைப்படவில்லை. அதற்கு தகுதியான தலைவர்கள் நாட்டில் உள்ளனர்.
பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் டிசம்பர் (அடுத்த மாதம்) 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக நான் அழைப்பு விடுக்கவில்லை. மக்களுக்கு எதிரான பா.ஜனதாவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன்.
இதற்கு முன்பு மாறுபட்ட அரசியல் கொள்கைகளை கொண்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை நான் எதிர்த்து உள்ளேன். ஆனால் தற்போது நாட்டின் நலனுக்காக பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணி அமைவது ஜனநாயகத்தின் கட்டாயம் ஆகும். இது அரசியல் கட்டாயம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrababuNaidu #BJP
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது.
மேலும், அடுத்தடுத்து அதிரடியாக அவரது அரசியல் வரவு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரைப்படங்களிலேயே ஓய்வின்றி இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பதும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதுமாய் இருந்துவந்தார்.
இந்நிலையில், பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சிப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.
ஆனால், டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்புகள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். #Rajini
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்