search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி"

    • புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன,மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.

    புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இதுவரை 9.94 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது.

    கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் 60 சதவீத நிதியில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய இணை மந்திரி கபில்மோரேஸ்வா் பாட்டீல் ராமநாதபுரம் வந்தார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்ற 77 பயனாளிகளை சந்தித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பா.ஜனதா மாவட்டத் தலைவா் கதிரவன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    பின்னர் கபில்மோ ரேஸ்வா் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாா்த்து பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது.

    நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயிா்நீா்த் திட்டம், தூய்மை இந்தியா கழிப்பறை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏரா ளமானோா் பயன டைந்துள்ள னா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.

    தமிழக அரசு தனது நிதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி மூலமே திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகாவில், முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் குமாரசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்த 20 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #KarnatakaAssembly #Kumarasamy
    பெங்களூர்:

    கர்நாடகா முதல்-மந்திரியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) குமாரசாமி பதவியேற்க உள்ளார். கர்நாடகாவின் 25-வது முதல்வராக உள்ள அவர் இன்று (திங்கிட்கிழமை) பதவியேற்க திட்டமிட்டார். ஆனால் இன்று ராஜீவ்காந்தியின் நினைவு தினம் என்று தெரிய வந்ததால் புதன்கிழமைக்கு பதவியேற்பு விழாவை தள்ளி வைத்துள்ளார்.

    23-ந் தேதி பதவியேற்பு விழா முடிந்ததும் மறுநாள் (24-ந் தேதி வியாழக்கிழமை) சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துக் காட்ட குமாரசாமி திட்டமிட்டுள்ளார். காங்கிரசின் 78 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் மெஜாரிட்டிக்கு தேவையான 111 என்ற இலக்கை அவரால் மிக, மிக எளிதாக நிரூபித்துக்காட்ட முடியும்.


    இதையடுத்து அன்றே சபாநாயகர் தேர்வும் நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாள் (25-ந் தேதி வெள்ளிக்கிழமை) மந்திரிகள் பொறுப்பேற்று கொள்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் குமாரசாமி தலைமையிலான புதிய அமைச்சரவையில் காங்கிரசை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இடம் பெறுவார்கள்? மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் முதல்வர் பதவியையும் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சராக முடியும்.

    இதில் கணிசமான பதவிகளைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்துப் பேச இன்று குமாரசாமி டெல்லி சென்றார். அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.


    முதல்-மந்திரி பொறுப்பு ஏற்க உள்ள குமாரசாமி, 5 ஆண்டுகளுக்கு முழுமையாக பதவியில் இருப்பேன். அதில் சுழற்சி முறை கிடையாது என்று திட்டவட்டமாக உறுதிபட கூறி விட்டார். மேலும் நிதி, உள்துறை, பொதுப்பணித்துறை, தொழில், நீர்ப்பாசனம் ஆகிய 5 முக்கியத் துறைகளை தனது கட்சிக்காரர்களுக்கு வழங்க குமாரசாமி ஆலோசித்து வருகிறார்.

    ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக குமாரசாமியின் இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கும் நிலையில் உள்ளனர். அதே சமயத்தில் அதை ஈடுகட்டும் வகையில் அமைச்சரவையில் அதிக மந்திரி பதவிகளை பெற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை விட இரு மடங்கு எம்.எல்.ஏ.க்களை வைத்திருப்பதால் காங்கிரசுக்கு அதிக மந்திரி பதவிகளை விட்டுத்தர குமாரசாமியும் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் சார்பில் 20 பேர் வரை மந்திரிகளாக வாய்ப்புள்ளது.

    மேலும் காங்கிரசில் இருந்து ஒருவருக்கு துணை முதல்-மந்திரி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த வேண்டுகோளையும் குமாரசாமி ஏற்றுள்ளார். ‘தலித்’ இனத்தை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பொறுப்பை கொடுக்க காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் விரும்புகின்றன.


    கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலித் இனத்தை சேர்ந்தவராவார். மூத்த தலைவரான அவர் எம்.எல்.ஏ. ஆகவும் தேர்வாகியுள்ளார். எனவே அவர் துணை முதல்வராவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் துணை முதல்வர் ஆக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் காங்கிரசில் உள்ள லிங்காயத் எம்.எல்.ஏ.க்கள், தங்கள் சமுதாயத்துக்கு துணை முதல்-மந்திரி பதவி தரவேண்டும் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். காங்கிரசில் உள்ள 78 எம்.எல். ஏ.க்களில் 17 பேர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அது போல மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் உள்ள 36 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் லிங்காயத்துக்கள்.

    எடியூரப்பா முதல்வராக நீடிக்க முடியாமல் போனதால் லிங்காயத் சமுதாய மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் லிங்காயத் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் துணை முதல்வராக வாய்ப்புள்ளது. இதையடுத்து லிங்காயத் எம்.எல்.ஏ.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சம்னூர் சிவசங்கரப்பா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே துணை முதல்-மந்திரியாக அவருக்கே அதிக வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சபாநாயகர் பதவி தனது கட்சியிடமே இருக்க வேண்டும் என்பதில் குமாரசாமி தீவிரமாக உள்ளார். காங்கிரசும் சபாநாயகர் பதவியை கேட்கிறது. சோனியா- குமாரசாமியின் இன்றைய பேச்சில் இது பற்றியும் முடிவு ஏற்பட உள்ளது. #KarnatakaElection2018 #Kumarasamy #Congress #KarnatakaAssembly
    ×