search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "த.மு.மு.க."

    • த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க.வின் 29-வது ஆண்டை முன்னிட்டு மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ்கான் தலைமை யில் குமரய்யா கோவில் அருகில் த.மு.மு.க. கொடி யை ஏற்றி வைத்து தொண் டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங் கினர். அப்போது சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    தொடர்ந்து வாலாந்தர வையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றிய 120 மாண வர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பிரி மியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் சபிக் ரஹ்மான், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆஷிக்சுல்தான், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பி னர் காதர் பிச்சை, மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து த.மு.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடத்தியது.
    • கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மத்திய மாவட்டம் சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன பொதுக்கூட்டம் த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலிமுல்லா கான் தலைமையில் நடந்தது.

    சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., பத்திரிகையாளர் செந்தில் வேல், திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    மணிப்பூர் இனப்படு கொலை, இலங்கை அரசால் தமிழக மீனவர்க ளின் தொடர் கைது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் த.மு.மு.க. 50 மாணவர்கள் த.மு.மு.க.வில் சேர்ந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டபம் ஒன்றியம், தங்கச்சிமடம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
    • தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லா கான் ஆலோசனையின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க. சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் சிறு தொழில் செய்வதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். ராமநாதபுரம் பாரதிநகர் பாலமுருகனுக்கு ரூ.10 ஆயிரம், புவனேஸ்வரனுக்கு ரூ.5 ஆயிரம், மண்டபம் பாத்திமாவிற்கு ரூ.10 ஆயிரம், ஏர்வாடி சகுபர் சாதிக் ரூ.10ஆயிரம், நாகநாதபுரம் அமீர் ரூ.5 ஆயிரம், முதுகுளத்தூர் இப்ராஹிம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரூ.50 ஆயிரம், ராமநாதபுரம் நகர் பகுதி, மண்டபம் பேரூர் பகுதியில் வசிக்கும் 2 விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1.40 லட்சம் என மொத்தம் ரூ.2.30 லட்சத்தை மாநில துணை பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ்கான் வழங்கினார். இதில் மாவட்டத் தலைவர் பிரிமியர் இப்ராஹிம், நகர் தலைவர் முகம்மது அமீன், மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காதர் பிச்சை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கோபி, ஜூன். 27-

    ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுகூட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.

    இந்த செயற்குழு கூட்டத்திற்கு த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், த.மு.மு.க. மாநில பொருளாளர் கோவை சாதிக், பவானி முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் விரைவாக அதிகமான உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, புதிய கிளைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மகளிர் அணி நிர்வாகங்களை பலப்படுத்துவது, போதை எதிர்ப்பு பிரச்சாரங்கள் அதிகமாக செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் செய்யது கரீம் பயாஸ், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முஜிபுர் ரகுமான், மாவட்ட பொரு ளாளர் ஆடிட்டர் அன்வர், மாவட்ட தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் சிராஜ்தீன், குதுபுதீன், ஆசி புல்லா, அணி நிர்வாகி சாகுல் அமீது பாட்ஷா, மாவட்ட ஊடக அணி பொறுப்பாளர் நிஜாமுதீன், மற்றும் ஜியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் த.மு.மு.க. கோபி நகர செயலாளர் ஆடிட்டர் சம்சுதீன் நன்றி கூறினார்.

    ×