search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    த.மு.மு.க. மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ் கான் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா

    • த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க.வின் 29-வது ஆண்டை முன்னிட்டு மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ்கான் தலைமை யில் குமரய்யா கோவில் அருகில் த.மு.மு.க. கொடி யை ஏற்றி வைத்து தொண் டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங் கினர். அப்போது சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    தொடர்ந்து வாலாந்தர வையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றிய 120 மாண வர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பிரி மியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் சபிக் ரஹ்மான், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆஷிக்சுல்தான், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பி னர் காதர் பிச்சை, மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×