search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பத்"

    சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ராதிகா, 34 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மோகன் லால் படத்தில் நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika
    1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். 

    மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.



    அவரது நடிப்பில் ‘தி கேம்பினோஸ்’ படம் கடந்த மார்ச்சில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இதில், இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது. 

    அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'. 

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #PARTY #VenkatPrabhu

    ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினியின் 4 படங்கள் அமெரிக்காவில் ரூ.10 லட்சம் வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    பா.இரஞ்சித் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகி காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலா படத்தில் ரஜினி மும்பை தாதாவாக நடித்திருக்கிறார். 

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

    படத்தில் நடித்துள்ள வில்லன் நானா படேகர், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, திலீபன், அஞ்சலி பாட்டீல் என படத்தில் நடித்துள்ள பலருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

    தமிழத்தில் காலா படம் முதல் நாளில் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாகவும், சென்னையில் மட்டும் ரூ. 1.77 கோடி வசூலாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரஜினியின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு தான். கபாலி முதல் நாளில் ரூ. 21.5 கோடியை வசூலித்திருந்தது. முதல் நாளில் வசூலில் விஜய்யின் மெர்சல் ரூ. 22.5 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. 



    அதேநேரத்தில் அமெரிக்காவில் நான்காவது முறையாக ரூ. 10 லட்சம் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. கபாலி படம் முதல் நாள் ப்ரீமியர் காட்சியிலேயே 10 லட்சம் வசூலை தாண்டியிருந்த நிலையில், காலா படம் 2 நாட்களில் 10 லட்சம் வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வசூலில் கபாலி ரூ. 40 லட்சம் வசூலுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

    இந்த நிலையில், காலா வசூல், கபாலி வசூலை முந்துமா என்பது கேள்வியாகியுள்ளது. #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் காலா படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் படத்திற்கு ஆதரவு பெருகியிருக்கிறது. #Kaala #Rajinikanth
    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான காலா திரைப்படத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது.

    ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் நேற்று வெளியான படம் காலா. இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்துள்ளார்.

    ரஜினியின் அரசியல் வருகைக்கு பின் வெளியாகும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

    சமீபத்தில் தூத்துக்குடி சென்றிருந்த ரஜினி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தில் அதிகமான போராட்டக் காட்சிகள் இருப்பதாக செய்தி வந்தது பரபரப்பை கூட்டியது.

    படத்தில் ரஜினி அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காக போராடும் தாதாவாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத நில அரசியலை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது. ரஞ்சித் பேசிய அரசியல் நடப்பு காலத்துக்கான அரசியல் என்று சமூகவலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.



    தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாத அம்பேத்கர் சிலை, புத்தர் மண்டபம் என்று ஒடுக்கப்பட்டோருக்கான குறியீடுகளை பல இடங்களில் வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான அடித்தட்டு மக்களின் நில உரிமையை ரஜினியை வைத்து பேசி இருக்கிறார்.

    எனவே எங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

    காலா படம் நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். வழக்கமான ரஜினி படங்களை காட்டிலும் இது குறைவு தான்.

    எனினும், வார இறுதியில் வசூல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகம் முழுக்க 1800 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth
    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரஜினியின் ‘காலா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. உலகம் முழுவதும் ‘காலா’ படம் 1800 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி தூத்துக்குடி சென்று வந்த பிறகு ரஜினிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் வெளியாகிய நிலையிலும், ‘காலா’ படத்திற்கு உற்சாகமாக வரவேற்பு கிடைத்துள்ளது. 

    இன்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகள் நடைபெற்றன. முதல் காட்சியிலேயே ‘காலா’ படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் வழக்கம்போல் குவிந்தனர். கொடி, தோரணம், ‘கட்-அவுட்’, பேனர்கள் தியேட்டர்களில் இடம் பிடித்தன.

    ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்த படம் அதிகமாக அரசியல் பேசும் படமாக உருவாகவில்லை. மும்பை தாராவி பகுதியில் வாழும் ஏழைகளுக்கு குரல் கொடுப்பவராக ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

    ரஜினியின் மற்ற படங்களை போல இந்த படத்திலும் அவர் ஸ்டைலாக நடித்திருக்கிறார். இது ரஜினியை பா.ரஞ்சித் இயக்கிய 2-வது படம். ரஜினியை மனதில் வைத்தே கதையை அவர் அமைத்து இருக்கிறார்.



    ‘காலா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ரஜினி குரல் கொடுக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், பா.ரஞ்சித் முத்திரை அதிகம் உள்ளது. அனைவரும் விரும்பும் விதத்தில் கதை இருக்கிறது.

    இந்த படத்துக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரஜினிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமையும். ஆரம்பத்தில் பிரச்சினைகள் இருந்தாலும் சில நாட்களில் ‘காலா’ படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும் என்று இந்த படத்தின் கலைஞர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். #Kaala #Rajinikanth

    பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `காலா' படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். #Kaala #Rajinikanth #Dileepan
    வத்திக்குச்சி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான திலீபன் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து இருக்கிறார். படம் குறித்து திலீபன் பேசும் போது, 

    வத்திக்குச்சி படத்துக்குபின் குத்தூசி என்ற படத்தில் நடித்தேன். அது இயற்கை விவசாயம் பற்றிய வணிக ரீதியான படம். அது விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து படம் பண்ணபோவதாக செய்தி வந்ததும் சென்று சந்தித்தேன். வாய்ப்பு கேட்டேன். ரஞ்சித் இருக்கிறது. ஆனால் உறுதி அளிக்க முடியாதே என்று கூறிவிட்டு உடலை ஏற்ற முடியுமா? என்று கேட்டார். ஏற்ற வேண்டும் என்றார்கள். பின்னர் தேர்வின்போது ஒரு டயலாக் கொடுத்து பேச சொன்னார்கள். ரஞ்சித் நிறைய உதவி செய்து என்னை பேச வைத்தார். கதாபாத்திரத்துக்கான பயிற்சி நடக்கும்போது தான் நான் ரஜினி சாருக்கு மகனாக நடிப்பது தெரிய வந்தது. இன்ப அதிர்ச்சி ஆனேன்.



    போட்டோஷூட்டிலேயே பார்த்துவிட்டேன். அப்போதே சின்னதாக சிரித்து நம்மை நெருக்கமாக்கினார். முதல் காட்சியில் நடிக்கும்போது தான் மிகவும் பதட்டமானேன். ஆனால் நம் பதட்டத்தை அவர் எளிதில் கண்டுபிடித்துவிடுவார். நம்மிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்து பதட்டத்தை தணித்து நடிக்க உதவி செய்தார். ரஞ்சித்தும் மிகவும் கூல் டைப். நாம் எத்தனை முறை தவறு செய்தாலும் மிக பொறுமையாக கேட்டு அவருக்கு வேண்டியதை வாங்கிக்கொள்வார்.

    ரஜினியை பார்த்து வியந்த சம்பவம் ஏதாவது?

    அவரை ஒரு நடிகராக மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொழில்பக்தி என்னை வியக்க வைத்தது. 7 மணி படப்பிடிப்புக்கு 6.45 க்கு மேக்கப்புடன் தயாராக இருப்பார். அதேபோல் ஒரு வரி வசனமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்துக்கொண்டே இருப்பார். அவரை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் முதல் படம்தான். 40 ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருப்பது யாராலும் முடியாத ஒரு வி‌ஷயம். அந்த தொழிலில் பக்தி இருந்தால் நாம் எந்த தொழிலும் வெற்றி பெறலாம் என்பதை புரிந்துகொண்டேன்.



    தாராவி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக இருக்கும். காலாவின் கதாபாத்திர படைப்பு வேற லெவலில் இருக்கும். ரஜினி ரசிகர்களையும் திருப்திபடுத்தும். ரஞ்சித் ரசிகர்களையும் சேர்த்தே திருப்திபடுத்தும். #Kaala #Rajinikanth #Dileepan

    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் காலா படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

    காலா படம் மும்பையில் வாழ்ந்த தமிழரான திரவியம் நாடார் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தில் திரவியம் நாடாரை தவறாக காட்டியிருப்பதாகவும், அவர் இன வேறுபாட்டைத் தூண்டுவது போல் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மும்பை வாழ் தமிழரான திரவியம் நாடாரின் மகன் ஜவஹரின் வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரஜினிகாந்த்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. 



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்தை பார்க்காமலேயே அதில் தவறாக சித்தரித்திருப்பதாக எப்படி கூற முடியும் என்று கேட்ட நீதிபதிகள், படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். #Kaala #Rajinikanth

    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில், சென்னையின் இரண்டு பிரபல திரையரங்குகளில் காலா ரிலீசாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் நாளை ரிலீசாக இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். 

    காலா படத்தை தமிழகம் முழுவதும் லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் இந்த படம் சென்னையின் பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த 2 திரையரங்குகளில் படம் வெளியாகாதது குறித்து சில வதந்திகள் வெளியான நிலையில், வியாபார ரீதியிலான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். #Kaala #Rajinikanth

    கர்நாடகாவில் காலா படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி, படத்தை வெளியிட அனுமதி கிடைத்துள்ள நிலையில், காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #Kaala #Rajinikanth
    ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசிய போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. 

    காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். 



    இதையடுத்து, காலா படத்தை, கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சி நிறுவனத்தின் அலுவலகத்தை கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் சூறையாடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Kaala #Rajinikanth

    ரஜினியின் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Kaala #Rajini #Dhanush
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். 

    காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து காலா படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை காலா படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது. 



    காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் ‘காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் சார்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 

    இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை ரிலீஸ் செய்ய அரசுக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பு வழங்கியது. அதேநேரத்தில் படம் வெளியாகும் பட்சத்தில் கர்நாடக அரசு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

    ×