என் மலர்
நீங்கள் தேடியது "Honey Rose"
- வயநாட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
- மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல மலையாள நடிகை ஹனிரோஸ். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ள இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர், தன்னை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், உருவக்கேலி செய்தும், சமூக வலை தளத்தில் ஆபாசமாக பதிவிட்டும் அவமதித்து வருவதாக நடிகை ஹனிரோஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகையின் இந்த பதிவிற்கு சமூகவலை தளங்களில் பலர் ஆபாசமான கருத்துக்களையும் பதிவிட்டனர். தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்து தெரிவித்தவர்களின் மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் நடிகை ஹனிரோஸ் புகார் செய்தார். அதன் பேரில் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்த பிரபல நகைக்கடையின் உரிமையாளரான தொழிலதிபர் பாபி செம்மனூர் மீதும் நடிகை ஹனிரோஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

வயநாட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். செம்மனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தொழிலதிபர் பாபி, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கேரள ஐகோர்ட்டில் தொழிலதிபர் பாபி செம்மனூர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தொழிலதிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் உருவ கேலி செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபருக்கு நிபந்தனை விதித்தார். நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும், கடைபிடிக்காவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
- பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
- சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கடந்த 8-ந்தேதி கைது செய்தனர்.
பின்பு அவர் எர்ணாகுளம் காக்கநாட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு சில நாட்களுக்கு பிறகு அவர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பாமி செம்மனூர், சிறையில் இருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய பிரமுகர்களுடன் கேரள மாநில மத்திய பகுதி சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார் சென்றிருக்கிறார்.
பின்பு ஜெயில் சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் அறையில் டி.ஐ.ஜி. அஜய குமார் மற்றும் அவருடன் சென்றிருந்த 3 முக்கிய பிரமுகர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பாமி செம்மனூரிடம் பேசியுள்ளனர். மேலும் சிறையில் பாபி செம்மனூருக்கு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளும் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து சிறைத்துறையின் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அதில் சிறையில் பாபி செம்மனூருக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அஜய குமார், காக்கநாடு சிறை சூப்பிரண்டு ராஜூ ஆபிரகாம் ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.









