search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regina Cassandra"

    • நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

    தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்டநாள் முதல், மாநகரம், கசட தபற, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.


    இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் சினிமாவில் நடிக்க வந்த போது பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார்.


    முதலில் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில் என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது. அப்போது எனக்கு 20 வயது தான். சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள் என்று கூறினார்.

    • நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
    • இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

    தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.


    ரெஜினா கசாண்ட்ரா

    இதையடுத்து நடிகை ரெஜினா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "பிறந்தநாள் வாழ்த்துகள் பாப்பா.. லவ் யூ.. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் என்று ஆசிர்வதிக்கிறேன்." என்று தெரிவித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ரெஜினா - சந்தீப் கிஷன்

    இந்த பதிவிற்கு 'இருவருக்கும் எப்போது கல்யாணம்' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கமெண்ட் செய்து வருகின்றனர். ரெஜினா கசாண்ட்ரா 'மாநகரம்' திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரெஜினா கசாண்ட்ரா.
    • இவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.

    தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளன.

     

    ரெஜினா கசாண்ட்ரா

    ரெஜினா கசாண்ட்ரா

    ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில், "2020-ல் எனது காதல் முறிந்துபோனது. அதில் இருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக்கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன்" என்றார்.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்த ரெஜினா, தெலுங்கு நடிகரை காதலிப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். #Regina
    தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரெஜினா. தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன் சாய் தரம் தேஜ் ஹீரோவாக அறிமுகமான பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் ரெஜினா ஜோடியாக நடித்தார். அதில் இருந்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இதுபற்றி ரெஜினா அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக எனக்கும், சக நடிகர் ஒரு வருக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளில் உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவை ஆதாரமற்ற வதந்தி.



    என் வாழ்வில் தற்போது உள்ள ஒரே காதல் என் வேலை தான். அதை தவிர வேறு எந்த காதலும் இல்லை. நான் காதலித்தால் நானே உங்களிடம் தெரிவிப்பேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி’.

    இவ்வாறு ரெஜினா கூறி உள்ளார்.

    ரெஜினாவும், சாய் தரம் தேஜும் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று முன்பு கூறி வந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு அவர்களின் காதல் பற்றி அடிக்கடி பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இருவருமே மறுத்துள்ளனர்.
    தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா, தன்னுடன் நடித்த நடிகர் பற்றி கூறியிருக்கிறார். #Regina #ReginaCassandra
    சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார்.

    இதில் அரவிந்த்சாமி ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். இதில் பார்த்தி என்ற புதுமுக நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்கள். ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.



    அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து வருகிறார். இதுவரை 75 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.

    தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத்துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.
    ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy
    மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரந்த்சாமி - ரெஜினா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

    ஆக்‌ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை ராஜபாண்டி இயக்கி வருகிறார். படம் பற்றி இயக்குநர் கூறும்போது, 



    அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள்வாங்கி பிரதிபலிப்பார். அது திரையில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும்படி இருக்கிறது. ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார். படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.

    அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். #Kallapart #ArvindSwamy #ReginaCassandra

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா இந்தியில் அறிமுகமாகும் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு முதலில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். #ReginaCassandra
    தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் நடித்து வந்த ரெஜினா கசண்ட்ரா, ஏக் லட்கி கோதேக் காதா ஐசா லகா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

    இந்த படத்தில் ரெஜினா தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரகசியமாகவே வைத்து இருந்தார். படத்தின் டிரைலர் வெளியானபோது தான் சோனம் கபூரும், ரெஜினாவும் இதில் ஓரின சேர்க்கையாளராக நடிக்கிறார்கள் என்பது தெரியவந்தது.



    ரெஜினாவின் இந்த துணிச்சலான முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் அமைதியாக இருந்தார். தற்போது ரெஜினாவுக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் வேண்டும்.

    இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்ற ரீதியில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் ரெஜினாவை பாராட்டி வருகிறார்கள். இந்த பாராட்டுகள் ரெஜினாவை உற்சாகப்படுத்தி இருக்கிறது. முதன்மை கதாநாயகியாக நடிப்பதற்கு விருப்பப்பட்டு கதைகள் கேட்டு வருகிறார். #ReginaCassandra

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
    விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

    திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

    ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

    காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

    ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

    ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.



    காடன் எந்த மாதிரியான படம்?

    பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

    ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

    ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

    ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu
    அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி'.

    வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


    முன்னதான வெளியான `பார்ட்டி' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    வெங்கட் பிரபு விரைவில் சிம்புவை வைத்து `மாநாடு' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். #PARTY #VenkatPrabhu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி படத்தில் நடித்துள்ள சஞ்சிதா ஷெட்டி, படப்பிடிப்பின் போது ரெஜினா உட்கார்ந்தபடியே தூங்குவார் என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra
    பார்ட்டி படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள். ரெஜினாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி. நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கும் பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு.

    இரவு நேரங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது அவரால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன். முடியவில்லை. சூதுகவ்வும் வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்குப் போய் இருந்தேன். அங்கே `பிரியாணி’ படப்பிடிப்பு நடந்துவந்தது.



    அங்கேதான் வெங்கட் பிரபுவை முதன்முதலாக சந்தித்தேன். `சூதுகவ்வும்‘ படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி’ படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்’ என்று கூறியுள்ளார். #Party #SanchitaShetty #ReginaCassandra

    ×