search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "opanneerselvam"

    சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #admk

    வாணியம்பாடி:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கருணாநிதியின் ஆட்சி காலத்திலேயே கர்நாடகாவில் 4 அணைகள் கட்டப்பட்டன. அதற்கு உரிய அனுமதியை அவர் அளித்ததால் தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து குறைந்துவிட்டது.

    அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சட்ட போராட்டம் மூலமாக காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்று தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்று அதை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார்.

    இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடினார். அப்போதைய மத்திய அரசிடம் பேசி போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. அதில் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்தனர். இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரில் 4 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதையெல்லாம் மறந்து விட்டு அப்போதைய மத்தியஅரசு குழுவுடன் இணைந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த குழுவினர் ராஜபக்சேவை சந்தித்து பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவித்தார்.

    ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், சேர்ந்து தமிழகத்தை தீவைத்து கொளுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையில் நாங்கள் தீ வைக்கவில்லை. மாமா, மச்சான் சண்டையில் பத்திரிகை அலுவலகத்தை தீவைத்து கொளுத்தியது அவர்கள்தான்.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு என நடத்தப்பட்ட அராஜகங்களை பொதுமக்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

    ஓட்டல்களில் சென்று சாப்பிட்டால் கூட பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் காசுகொடுக்காமல் அடித்து நொறுக்குவது அவர்களுடைய வழக்கம். இதற்காகவே பல ஓட்டல்களில் தற்போது சாப்பிடுவதற்கு முன்பு டோக்கன் வாங்கும் முறையை கொண்டு வந்துவிட்டனர்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா வளர்த்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூறும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க ஆட்சி தொடரும். இது பெரிய ஆலமரம். எந்த புயலுக்கும் அசையாது.தொண்டர்கள் இயக்கமான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    முதல் அமைச்சராக வர வேண்டுமென ஆசைப்படும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தபோது மணல் நகரும் தன்மை கொண்டது. அதனால் இந்த திட்டத்தால் பிரயோஜனம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டுவிட்டார்கள். கடலில் போட்டார்களா அல்லது வேறு யாரிடமாவது போட்டார்களா என்பது தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர். அது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது.

    சிறுபான்மை மக்களுக்கு பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ரம்ஜானுக்கு இலவச அரிசி, ஹஜ் பயனாளிக்கு சிறப்புநிதி , ஜெருசலேம் செல்பவர் களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் விட்டு கொடுப்பவன் கெட்டுபோவ தில்லை. என்று ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெறும். இந்த தொகுதியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் எம்.பி உடன் இருந்தவர் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #nrcongress #admk
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதுவையில் பிரசாரம் செய்தார்.

    மதகடிப்பட்டு, வில்லியனூர், ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், மரப்பாலம், தவளகுப்பம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி அவர் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி. மு.க.கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர்கள் 2 பேரையும் தேர்வு செய்தால் புதுவையின் பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

    புதுவையில் நிலவும் பிரச்சினைகளை களைவதில் நல்ல உறுப்பினர்களாக அவர்கள் செயல்படுவார்கள். புதுவை மாநில மக்களின் நீண்டநாள் கோரிக்கை மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால் மாநில அந்தஸ்து பெற்றுத்தர உறுதியாக செயல்படுவார். இந்த முயற்சிக்கு அ.தி.மு.க. உறுதுணையாக நின்று முழு முயற்சி எடுக்கும். புதுவையில் 3 ஆண்டுகளாக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. மக்களுடைய தேவைகளையும், மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. மாநில மக்கள் வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்து வருகின்றனர். ஏதோ ஒரு நாடகம் நடத்துவது போல ஆளும் கட்சி நடந்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் அதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர பேசினார். #opanneerselvam #nrcongress #admk
    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ArumugasamyCommission #opanneerselvam
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    ஜெ.மரணம் குறித்து விசாரிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #opanneerselvam
    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி முடிவு செய்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் மும்பையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இதனால் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று கூறினார். அனைவரது எண்ணங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். #opanneerselvam #admk #parliamentelection
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். #opanneerselvam #sterliteplant #vaiko

    சிவகிரி:

    நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் மனோகரன் எம்.எல்.ஏ.வின் தந்தை அய்யாச்சாமி உடல்நலக்குறைவினால் காலமானார். இதையடுத்து நேற்று மனோகரன் எம்.எல்.ஏ. வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அய்யாச் சாமி படத்திற்கு மாலைகள் அணிவித்து மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆறுதல் கூறினார்.

    இதில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மூர்த்திப்பாண்டியன், பேரவை செயலாளர் சாமிவேல், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், வட்டார நில வங்கியின் தலைவர் கார்த்திகை செல்வன், மாவட்ட மன்றச் செயலாளர் சின்னத்துரை, பேரூர் செயலாளர்கள் குமரேசன், கந்தராஜ், பொறுப்பாளர்கள் காசிராஜன், துக்காண்டி, முருகையா, முருகன், பரமேஸ்வரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வி, மாநகர மாவட்ட நிர்வாகிகள் தலைவர் பரணி சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். மக்களுக்கு எண்ணற்ற சாதனைகளை செய்து கொண்டு சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வைகோ கூறி வருகிறார். இவை உண்மையில் பசுமை தீர்ப்பாயத்தின் படி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசுதான். இதனை திறக்க விடமாட்டோம். இந்த விசயத்தில் வைகோ தான் இரட்டை வேடம் போடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #opanneerselvam #sterliteplant #vaiko

    ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #bjp
    தேனி:

    ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி தேனி ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க.வின் சார்பில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார்.  அவருடன் அக்கட்சியின் தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதத்தினை முடித்து வைத்துள்ளார்.  அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் முன் பேசும்பொழுது, இந்த உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

    எப்பொழுது தேர்தல் வந்தாலும் மக்கள் மாற்றத்தினை கொண்டு வர தயாராகி வருகின்றனர்.  ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர்.

    ஆண்டிப்பட்டியில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் ஆர்.கே. நகரில் முடிவடையும்.  துரோகிகளிடம் இரட்டை இலை சின்னம் உள்ளது.  அதனால் குக்கர் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்து உள்ளனர்.

    ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும், நாங்கள் யார் என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிப்போம்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் என்ன தவறு செய்தனர் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பர்.  18 தொகுதிகளில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போது ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்றவில்லை.  நியூட்ரினோ திட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.  ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை.  அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என கூறினார். #dinakaran #bjp 
    20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #opanneerselvam #mkstalin #dinakaran #admk

    மதுரை:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சேதத்தை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின்-தினகரன் சந்திப்பு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார். #opanneerselvam #mkstalin #dinakaran #admk

    18 எம்.எல்.ஏக்களின் பதவியை பறித்துவிட்டு அழைப்பு விடுப்பதன் மூலம் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

    கரூர்:

    கரூரில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எனக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு ஏன் சென்றிருக்கிறார். இதன் மூலம் முறைகேடு நடந்திருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

    தன்னுடைய வி‌ஷயத்திற்காக உச்சநீதிமன்ற சென்ற முதல்வர், குட்கா விவகாரத்தில் ஏன் மேல் முறையீடுக்கு போகவில்லை. காரணம் மாட்டிக்கொண்டால் அமைச்சர் விஜயபாஸ்கர் தானே, தான் இல்லை என்ற நல்ல எண்ணம்தான். நான் மகான் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். நான் மகான் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஒன்றும் புனிதர் இல்லை.

    யாரால் முதல்வர் பதவி கிடைத்ததோ அவருக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி டெபாசிட் வாங்கினால் அரசியலை விட்டே விலகத்தயார் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் செந்தில்பாலாஜி மீண்டும் மாபெரும் வெற்றி பெறுவார். அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வோம். நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபகரமாக உயர்த்தி உலக நாடுகளின் விருதுகளை பெற்றவர் போல், ஒரு லட்சம் பேரை கூட்டி திருமணம், பூப்புனித நீராட்டு விழாவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தியுள்ளார். அவர் யார் காலில் விழுந்து பதவிக்கு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    பதவி பறிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு நோட்டீஸ் எதுவும் வர வில்லை. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு அவர்கள் கட்டுப்படுவதாகவும், சட்டப்படி எதையும் எதிர் கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள். அதற்கு நீர் அடித்து நீர் விலகாது என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூறியுள்ளனர். அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வின் 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை தாக்கி பேசுகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக டெல்லி போய் நிற்கிறார். ஆனால் யாரும் அவருக்கு பதில் கூட சொல்லவில்லை.


    தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததைவிட மக்களுக்கு அதிக ஏமாற்றம் தந்துள்ளது. அவர்கள் நல்ல தீர்ப்பு வரும், ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும்.

    மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. எனது குடும்பம் என்றால், எனது மனைவி, மகள், அதற்கு அடுத்த படி யாகத்தான் அண்ணன், தம்பி. கட்சிக்குள் தலையிட விடாததால் தான் திவாகரன், பாஸ்கரன் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளனர். கட்சி வேறு, உறவு வேறு. அ.தி. மு.க. ஆட்சி வீழ்வது உறுதி. துரோகங்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை.

    மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னைக்கண்டு முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் குருபூஜையில் கலந்து கொண்ட தினகரன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேரும் இடைத் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருகின்றனர்.

    தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழக மக்களின் எண்ணம் எங்களுக்கு தெரியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாய்ப்பளிப்பதற்கு தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    ஆர்.கே.நகரில் சுயேட்சையாக நின்று எதிர்கட்சியை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளோம்.

    பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று முதல் வரும், துணை முதல் வரும் அழைப்பு விடுத்துள்ளனர். இது ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்டது போல் உள்ளது.

    நாங்கள் துரோகத்தின் பக்கம் செல்ல மாட்டோம் என ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வந்தாலும் ஒரு தொகுதியில் கூட ஆளும் கட்சி டெபாசிட் பெறாது.

    அ.தி.மு.க.வில் கூடு மட்டுமே உள்ளது.தொண்டர்கள் என்ற உயிரோட்டம் எங்களிடம் மட்டுமே உள்ளது. துரோகம் வீழ்ந்து தர்மம் வெல்லப்போகிறது.

    குக்கர் சின்னம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்.கே.நகரில் ரூ.200 கோடி செலவு செய்தும் தோல்வி அடைந்தவர்கள் எடப்பாடி அணியினர். நிதானமாக யோசித்து பேசுபவன் நான்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admk #edappadipalanisamy #opanneerselvam

    எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி.தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மதுரை ஒரு ராசியான மாவட்டம். இங்கே தொட்டது துலங்கும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக போட்டியிட்டது மதுரை மாவட்டத்தில்தான். அதனால்தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கினோம். தொடர்ந்து 32 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

    சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கிறோம். கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற அ.தி.மு.க. வினர் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த வெற்றி தான் அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தோம். ஆனால் அம்மா உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது நான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று இருந்தேன்.

    ஆனால் இந்த ஆட்சி நடக்கக்கூடாது என்று எண்ணத்தில் ஒரு கும்பல் செயல்பட்டது. என்னிடம் இருந்து முதல்-அமைச்சர் பதவியை பிடுங்க திட்ட மிட்டனர். அவர்களது சதி திட்டம் தெரியவந்ததால் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. எம்.எல்.ஏ.க்களை கூவத்தூருக்கு அழைத்து சென்று அடைத்து வைத்திருந்தனர். சசிகலாவும் முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று பல சதிகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் சசிகலா சிறைக்கு சென்று விட்டார். புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து பதவி ஆசையுடன் சுற்றி திரிந்தது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் எனக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

    டி.டி.வி.தினகரன் என்னிடம் வந்து தனக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 11 பேர் இருக்கிறார்கள் எனவே நம்மிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று பேரம் பேசினார். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்க வில்லை.

    புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் துரோகத்தை செய்ய விரும்பவில்லை. ஆகையால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன். இதையடுத்து டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. அவரது ஆட்சி கவிழ்ப்பு திட்டமும் நம்மிடம் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

    கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை புரட்சித்தலைவி அம்மா கட்சியில் இருந்து நீக்கினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சசிகலா கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் என்று எங்களிடம் அம்மா கூறினார்.

    தற்போது டி.டி.வி.தினகரன் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறார். எவ்வித மன்னிப்பு கடிதமும் கொடுக்காமல் கட்சியில் சேர்ந்ததாக தொண்டர்களை ஏமாற்றி வருகிறார். தினகரன் எப்போது கட்சியில் சேர்ந்தார்? என்பது குறித்து அவர் முதலில் சொல்லட்டும்.

    இதுநாள்வரை தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கவில்லை. இதுதான் உண்மை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் கட்சியில் சேர்க்கப்படாமலே அ.தி.மு.க. எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியுமா?.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றி போலியானது. 20 ரூபாய் நோட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்து ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அவர் கொடுத்ததாக தொகுதி முழுவதும் பேசுகிறார்கள். ஆனால் திருப்பங்குன்றத்தில் அந்த 20 ரூபாய் நோட்டு ஜெயிக்காது. இங்கே உள்ள மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள். இரட்டை இலை சின்னத்தை தங்கள் உயிர்போல நினைக்கிறார்கள்.

    எனவே 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியையும், துரோகியையும் திருப்பரங்குன்றம் மக்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில் நம் தேர்தல் பணி அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #TTVDhinakaran

    அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். #ADMK #Panneerselvam
    தேனி:

    தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அதன்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் (மகளிர் திட்டம்) சார்பில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 பேருக்கு ஸ்கூட்டர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 125 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை, சமூக நலத்துறையின் சார்பில் 203 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவில் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சாந்தி, முன்னாள் எம்.பி. சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், மலர்விழி், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    தேனி அருகே துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காரை சீர்மரபினர் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #opanneerselvam

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அந்த சமயத்தில் சீர்மரபினர் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும். நல வாரிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி அந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணி அம்மாள் தலைமையில் துணை முதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் போலீசார் 3 பேருக்கு மட்டுமே மனு வழங்க அனுமதி கொடுத்தனர். இதனால் சீர் மரபினர் ஆத்திரமடைந்தனர்.

    விழா முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் கார்கள் புறப்பட்டது. உடனே சீர்மரபினர் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டனர். அதோடு நடு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர். உஷாரான போலீசார் சீர்மரபினரை சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  #opanneerselvam

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டு என்று தாராபுரத்தில் டிடிவி தினகரன் பேசினார். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தாராபும் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பட்டினத்தில் திறந்த வேனில் அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசை எதிர்க்கவும் சற்றும் யோசிக்காதவர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பா. ஜனதா அலை வீசிய போதும் தமிழகத்தில் அம்மாவிற்கு 37 எம்.பி.க்களை வெற்றி பெறச்செய்தவர்கள் நம்தமிழக மக்கள். தமிழக நலனுக்கு எதிரான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளை எதிர்த்தவர் அம்மா. ஆனால் எட்டு வழிச்சாலை விவசாயிகளை பாதிக்கும் என தெரிந்தும் அதை எதிர்க்க துணிவில்லாமல் மோடி அரசின் ஏஜெண்டாக இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதால் பொதுச் செயலாளர் சசிகலாவால் அப்புறப்படுத்தப்பட்டார்.

    சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து முதல்வர் ஆனாரா? கொங்கு மண்டலம் எப்போதும் நமக்கு ஆதரவு தரும் பகுதியாகும் 90 சதவீத தொண்டர்கள் நம்முடன் உள்ளனர்.


    ஆர்.கே. நகரில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை கீழே தள்ளி விட்டு அமோக வெற்றி பெற்றோம். அதனைப் போல திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் குக்கர் சின்னம் அமோக வெற்றி பெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கின்றனர். கோர்ட்டில் தண்டனை பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட அவைத்தலைவர் நரேந்திரன், மாநில வழக்கறிஞர் அணி துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உட்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    ×